Followers

Wednesday, May 29, 2019

இராசிபடி கலர் மற்றும் எண்


வணக்கம்!
          நம்முடைய வாகனம் மற்றும் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் அது உங்களுக்கு உங்களின் இராசிபடி அமையவேண்டும். நீங்களே மறுத்தாலும் உங்களின் இராசிப்படி அந்த கலர் உங்களுக்கு அமைந்துவிடும்.

ஒரு கார் வாங்கினாலும் அதில் உள்ள கலர் உங்களின் இராசிபடி அமையும் அல்லது உங்களின் இராசிக்கு உகந்தபடி அந்த கலர் அமைந்துவிடுவது உண்டு. இப்படி அமைந்தால் பெரும்பாலும் உங்களுக்கு இது நல்லதாக அமைந்துவிடும்.

ஒரு சிலருக்கு மட்டும் தசாநாதன் மிகுந்த பலத்தோடு தசாவை நடத்தும் அவர்களுக்கு அந்த தசாநாதன் எந்த கலரில் வருகின்றாரோ அந்த கலரில் அமைந்துவிடுவது உண்டு. ஒரு சிலருக்கு மட்டும் தசாநாதன் வலுவாக அமைந்துவிடுகின்றது.

உங்களுக்கு அமையும் எண் கூட இராசிப்படி அமைந்தால் அது உங்களுக்கு நல்லதை தருகின்றது. பலருக்கு எட்டாவது எண் என்றால் பிடிக்காது ஆனால் சனியை இராசி அதிபதியாக கொண்டவர்களுக்கு இந்த எட்டாவது எண் மிகுந்த இராசியாக அமையும்.

உங்களின் இராசிபடியும் மற்றும் உங்களின் தசாநாதன் எப்படி இருக்கின்றது என்பதையும் ஆராய்ந்து நீங்கள் பயன்படுத்தும் கலர் மற்றும் எண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இராசிப்படி தேர்ந்தெடுக்கும்பாெழுது அது நன்றாக உங்களுக்கு உதவும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 28, 2019

இரவு யாக பூஜைகள்


வணக்கம்!
          தற்பொழுது இருந்து இரவு நேர அம்மன் யாகம் நடத்துகிறேன். நமது நண்பர்கள் தங்களுக்கு தேவையான பூஜைகளை செய்வதற்க்கு இரவு நேரத்தில் நடத்தும்படி கேட்டுக்கொள்வதால் இரவு நேர பூஜைகள் நடத்தப்படுகின்றது.

அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் இரவு பூஜைகள் நடத்தலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறேன். பகலில் நடத்துவதை விட இரவில் அம்மன் யாகங்கள் நடக்கும்பொழுது அது அபகரிமான பலனை தரும் கூடுதல் சக்தியோடு வெளிப்படும்.

என்னுடைய வாட்ஸ்அப்பில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இந்த பூஜையின் படங்கள் அனுப்பி வைக்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். வாட்ஸ்அப்பில் என்னை இணைத்துக்கொள்ளுங்கள். எனது வாட்ஸ்அப் எண் 9551155800.

பெரும்பாலும் இரவு அனைத்து யாகங்களையும் நடத்துவது சிறப்பான பலனை தரும் என்பதை நான் பார்த்து இருக்கிறேன். பகலில் யாகம் நடத்துவதற்க்கும் இரவில் நடத்துவதற்க்கும் வித்தியாசம் என்பது இருக்கின்றது. ஆன்மீக வழியில் உள்ளவர்களுக்கு இந்த வித்தியாசம் நன்கு தெரியவரும்.

உங்களுக்கும் விஷேச நாட்கள் மற்றும் உங்களின் விருப்பட்ட நாட்களில் சிறப்பு அம்மன் யாகம் நடத்தவேண்டும் என்றால் என்னை தொடர்புக்கொள்ளவும். முன்கூட்டியே இதனை புக்கிங் செய்துக்கொள்ளவும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 27, 2019

மூன்றாவது வீடு பகுதி 1


வணக்கம்!
          மேஷ லக்கனத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது மிதுனம் இந்த வீட்டில் அதிபதியான புதன் பயந்த சுபாவம் உள்ளவர். இவர் தீயகிரகத்தின் சாரம் பெற்று இருந்தால் இந்த வீடு உங்களுக்கு பலம் பெறுகிறது என்று சொல்லலாம். மறைவீடு தீயகிரகத்தின் கட்டுபாட்டில் இருப்பது நல்லது.

மிதுனத்தில் தீயகிரகங்கள் வந்து அமர்ந்தாலும் நன்றாக தான் இருக்கும். பொதுவாகவே மேஷ லக்கனக்காரர்களுக்கு தைரியம் அதிகம் தான் அது செவ்வாய் கிரகத்தால் வருவது என்றாலும் காலச்சக்கரத்தில் முதல் வீடாக இருப்பதாலும் இந்த தைரியம் வருகின்றது என்று சொல்லலாம்.

ரிஷப லக்கனம் இதற்கு மூன்றாவது வீடாக வருவது கடகம். இந்த வீட்டின் அதிபதி சந்திரன். சந்திரனை பொறுத்தவரை வளர்பிறை சந்திரன் ஒரு மாதிரியான பலனை கொடுக்கும் தேய்பிறை சந்திரன் ஒரு மாதிரியான பலனை கொடுப்பதால் அதனை பார்த்து உறுதி செய்துக்கொள்ளுங்கள்.

ரிஷப லக்கனத்திற்க்கு தைரியம் நன்றாக இருக்கும் அதற்க்கு சுக்கிரனும் ஒரு காரணமாக இருப்பார். சந்திரனும் நல்ல தொடர்பை இவர்களுக்கு கொடுத்து இந்த வீட்டால் நல்ல பலனை பெறுகின்றனர். ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் பிரச்சினை வரும் அது சந்திரன் ஏதாவது ஒருவிதத்தில் பாதிப்படைந்து இருக்கும்.

சந்திரன் தீயகிரகங்கள் சேர்ந்தால் அது தவறான ஒன்றாக இருந்தாலும் மூன்றாவது வீடாக வருவதால் அது தீயகிரகங்களோடு சேர்வது ஒரு விதத்தில் நன்மை தரும். இதனை பார்த்த நீங்கள் பயப்பட தேவையில்லை. சந்திரன் மிக மோசமாக பாதிப்படைந்து அதனால் பாதிப்பை தரும் நிலையில் மட்டும் பிரச்சினை வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 25, 2019

இசையும் மூன்றாவது வீடும்


வணக்கம்!
          ஒருவர்க்கு இசைமேல் உள்ள ஈடுபாட்டையும் இந்த மூன்றாவது வீடு காண்பிக்கும். இசை மேல் ஒருவர்க்கு ஈடுபாடு வருகின்றது என்றால் அது அவ்வளவு எளிதில் வந்துவிடாது. இசையை ஆத்மா கேட்பதால் தான் அதன் மீது ஈடுபாடு வருகின்றது. கடவுளை அடையும் வழியில் இசை முதன்மையாக இருக்கும்.

இசை என்றவுடன் இன்றைய காலத்தில் அனைவரும் காதில் வைத்து கேட்டுக்கொண்டே இருக்கின்றனர் இவர்கள் அனைவருக்கும் கடவுள் மீது அதிக ஈடுபாடு இருக்குமா என்றால் கண்டிப்பாக அது இருக்கும் என்று சொல்லலாம்.

இளமையில் ஒரு இசைக்கு ஈடுபாடு இருக்கும் கொஞ்சம் இளமையை கடக்கும் நேரத்தில் வேறு விதமான இசைக்கு மனது பிடிக்கும். இது அவர்களின் ஆத்மா கேட்கின்றது என்பதைவிட அவர்களின் சக்தி குறைய குறைய வேறு விதமான இசைக்கு நாட்டம் செல்லும்.

இளமையில் ரஹ்மான் இசையை கேட்டவர்கள் கொஞ்சம் வயது வந்தவுடன் இளையராஜா இசைக்கு மனது தாவும். ஒரு எடுத்துக்காட்டிற்க்கு இதனை சொல்லுகிறேன் அவர்கள் வாழும் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி இசை வேறுபாடு இருக்கும்.

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்களுக்கு அதிகமாக இசை மீது பிரியம் ஏற்படுகின்றது. இதுவும் நல்லது தான் அவர்களின் தோஷம் அவ்வாறு கேட்கவைத்து கடவுள் மீது ஒரு ஈர்ப்பை உருவாக்கிறது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 24, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          நம்மால் முடியவில்லை என்றால் பிறரால் முடியாது என்று எண்ணி செயல்படவேண்டும் என்று சொல்லுவார்கள். ஒவ்வொரு காரியமும் நீங்கள் தேர்ந்தெடுத்து செய்யும்பொழுது அதனை என்னால் மட்டுமே இதனை செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுங்கள் நிறைய நீங்கள் செய்து இருப்பீர்கள்.

ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்க்காக நிறைய போராட்ட குணங்களை தருவது மூன்றாவது வீடு. மூன்றாவது வீடு நல்ல பலமாக இருக்கும் நபர்களை பார்த்தால் அவர்கள் எதற்கும் துணிந்து அனைத்து காரியத்தையும் செய்பவராக இருப்பார்கள்.

நமக்கு எதற்க்கு இது எல்லாம் தேவையில்லாத வேலை என்று ஒதுக்கி இருக்கும் நபர்களால் பெரிய சாதனையை ஒன்றும் செய்யவே முடியாது. உங்களின் குடும்ப பொறுப்பைகளை கூட நீங்கள் இந்த கண்ணோட்டத்தோடு தான் பார்க்கவேண்டும் நான் இதனை செய்யமுடியும் என்று எண்ணி தொடர்ச்சியாக நிறைய செய்யுங்கள். சிறப்பான ஒரு குடும்ப பொறுப்பாளர்களாக நீங்கள் இருக்கலாம்.

இதனை எல்லாம் ஏன் செய்கிறோம் என்று நினைக்காமல் அனைத்தையும் முடியும் என்று நினையுங்கள். இதனை எல்லாம் மூன்றாவது வீடு தான் செய்கின்றது. மூன்றாவது வீடு பலம் பெற்றால் மட்டுமே அந்த ஆள் சிறப்பாக செயல்படுவார்.

மூன்றாவது வீடு பலம் இழக்கும்பொழுது மட்டுமே ஒருவரால் செயல்பாடு இல்லாமல் போய்விடும். மூன்றாவது வீடு பலம் இழந்த நபர்க்கு செயல்பாடு இல்லாமல் போய்விடுகின்றது. உங்களால் ஒரு காரியம் செய்யமுடியவில்லை என்றால் மூன்றாவது வீடு சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 23, 2019

உங்களின் துணை இளைய சகோதரத்தோடு


வணக்கம் !   
                  இளைய சகோதரத்தைப்பற்றி நாம் சொல்லவேண்டிய ஒரு இடத்தில் நாம் இதனையும் சொல்லவேண்டிய ஒரு கட்டத்தில் இருப்பதால் இதனை சொல்லுகிறேன். இது அனைவருக்கும் நடக்கும் என்பது கிடையாது. ஒரு சிலருக்கு நடக்கலாம்.

          மூன்றாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டு அதிபதியோடு சேர்ந்தால் உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு ஒரு நட்பை வைத்திருப்பார்கள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் உங்களின் ஜாதகத்தில் பூர்வபுண்ணியாதிபதியும் உங்களின் ஏழாவது வீட்டு அதிபதியும் கூடவே மூன்றாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு தவறான கூட்டணியில் இருப்பார்.

மூன்றாவது வீட்டு அதிபதியோடு ஏழாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து அதோடு உங்களின் இரண்டாவது வீட்டு அதிபதியும் சேர்ந்து இருந்தால் அதுவும் உங்களின் துணையின் மீது சந்தேகத்தை உருவாக்கிவிடும். உங்களின் துணை உங்களின் இளைய சகோதரத்தோடு சேர்ந்துவிடுவார்

மூன்றாவது வீட்டு அதிபதி என்பது ஒரு மறைவுவீட்டு அதிபதி என்பதால் கெடுதலான குணத்தை கொடுத்துவிடுகின்றது. அப்பொழுது நாம் சந்தேக கண்ணோட்டத்தோடு பார்க்கவேண்டும் என்பதால் அதனைப்பற்றி சொல்லுகிறேன்.

இதனை தவிர்ப்பதற்க்கு நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் போதுமானது என்று சொல்லுகிறேன். ஜாதகத்தில் இப்படி இருக்கின்றது இதனை தவிர்ப்பதற்க்கு அவர்கள் இணைவது போல நீங்கள் சூழ்நிலையை உருவாக்கிவிடகூடாது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 22, 2019

அண்ணன் தம்பி


வணக்கம்!
          தற்பொழுது ஒருவருக்கு ஒரு யாகம் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் பதிவுகள் குறைந்து வருகின்றன. தொடர்ச்சியான பதிவுகளை எப்படியும் கொடுத்துவிடுவோம் ஆனால் இந்த நேரத்தில் யாகத்தில் கவனத்தை செலுத்தி செய்துக்கொண்டு இருக்கும்பொழுது அதற்கே நேரம் போய்விடுகின்றது.

நேற்று அண்ணன் தம்பியை பற்றி எழுதியவற்றைப்பற்றி நிறைய பேர் தொடர்புக்கொண்டு கேட்டார்கள். எங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது என்று சொன்னார்கள். கண்டிப்பாக அனைவருக்கும் இந்த பிரச்சினை என்பது இருக்கும்.

நூற்றில் ஒருவர் நன்றாக இருந்தால் அதுவே பெரிய ஒரு அதியசமாகவே இருக்கும். பல குடும்பங்களில் அண்ணன் தம்பிகளில் ஒருவர் தான் வாழ்க்கின்றார்கள். ஒருவர் ஒன்றுக்கும் உதவாமல் சென்றுவிடுகின்றனர்.

ஒரு அண்ணன் ஒரு தங்கச்சி இருந்தால் பரவாயில்லை ஒரளவு நன்றாக வாழ்ந்துவிடுவார்கள். அண்ணன் தம்பி இருந்தால் தான் பிரச்சினை இருக்கும் என்பது மட்டும் உண்மை. அண்ணன் தம்பி இருவரில் இருவரும் நன்றாக இருந்தால் அது பெரிய பாக்கியமாகவே இருக்கும்.

இதற்கு வழி என்ன என்றும் கேட்டார்கள். பொதுவாகவே அனைத்திற்க்கும் விடையை சொல்லிவிடமுடியாது அதற்கு காரணம் பல இருக்கின்றன. ஜாதககதம்பத்தை தொடர்ச்சியாக பின்பற்றி வாருங்கள் இதற்கு வழியை நானே செய்துவிடுவேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 21, 2019

அண்ணன் தம்பி வாழ்க்கை


வணக்கம்!
          பொதுவாகவே நாம் எல்லாேருரிடம் சொல்லும் வார்த்தை தொடர்ச்சியாக டச்சில் இருந்துக்காெண்டே இருங்கள் என்று சொல்லுவது உண்டு. தொழில் செய்பவர்களுக்கும் இது பொருந்தும். ஒருவர் ஒரு தொழில் தோல்வியை தழுவி வரும்பொழுது அவர்களிடம் நான் சொல்லுவது நல்ல நிலைக்கு வந்த பிறகு எனது போனை எடுக்காமல் இருக்ககூடாது என்பேன். 

மனிதனின் குணம் தெரிந்து தான் நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். அவன் பிரச்சினை முடிந்து அதன் பிறகு அவனின் குணம் மாறிவிடும். எத்தனையே பேரை பார்த்துக்கொண்டு தொழில் செய்துக்கொண்டு இருக்கின்ற எங்களுக்கு தெரியாதா இவர்களை எங்கு பிடித்தால் எங்கள் வழிக்கு வருவார் என்று தெரிந்து தான் செய்வேன்.

மூன்றாவது வீட்டைப்பற்றி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். இளைய சகோதர சகோதரிகளை காட்டும் வீடு என்பது உங்களுக்கு தெரியும். உங்களின் வீட்டில் இரண்டு வாரிசுகள் இருந்தால் இரண்டில் ஒருவர் மட்டும் தான் நன்றாக இருப்பார். மற்றோருவர் வாழ்க்கை அந்தளவுக்கு சோபிக்காது.

அண்ணன் தம்பி இருவரும் நன்றாக வாழ்வார்கள் என்பது கண்டிப்பாக நடக்கவே நடக்காது. நூற்றில் ஒன்று இரண்டு பேர் நன்றாக வாழலாம். இரண்டில் பேரில் ஒருவர் வாழ்க்கையில் தோல்வியை தழுவார்கள். ஒருவர் நன்றாக இருந்தால் கூட ஒருவர் நன்றாக வாழமாட்டார்கள்.

உங்களுக்கு பிறந்திருக்கும் குழந்தையை நன்றாக கவனித்து பாருங்கள். இரண்டில் ஒன்று சோபிக்காது. சுணக்கமாகவே வாழ்க்கை அவர்களுக்கு அமையும். முதலில் மற்றவர்களை நன்றாக கவனித்து பாருங்கள் உங்களுக்கு இது புரியவரும்.

ஒருவருக்கு மூன்று பேர் இருந்தால் நடுவில் பிறந்திருப்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் நன்றாக இருக்காது. அவர்களுக்கு இயற்கை அந்தளவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொடுக்காது. அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருக்கும்பொழுது தம்பியின் வாழ்க்கை நன்றாக இருக்காது. தம்பியின் வாழ்க்கை நன்றாக இருக்கும்பொழுது அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருக்காது.

உங்களுக்கு இரண்டு குழந்தை இருந்து அந்த குழந்தை நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் ஜாதகத்தில் தொடர்ச்சியாக ஒரு ஈடுபாட்டை வையுங்கள் என்று மட்டும் சொல்லுவேன். ஒரு திமிராகவே இதனை சொல்லுகிறேன் நீங்கள் எங்கு சென்றும் இதற்கு பரிகாரம் தேடமுடியாது என்னை நம்பினால் மட்டும் இதற்கு வழி இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 20, 2019

மூன்றாவது வீடும் வில்லங்கமும்


வணக்கம்!
          மறைமுகவீடுகள் பலம் பெறக்கூடாது என்று சொல்லுவார்கள். மூன்றாவது வீடும் ஒரு மறைமுகவீடு. மறைமுகவீடு பலம்பெறும்பொழுது அந்த நபர் சாதாரணமான நபராக இல்லாமல் கொஞ்சம் அதிகமான வேகத்தோடு இருப்பார்.

சமுதாயம் எப்படி ஒருவரை விரும்புகின்றது என்றால் ஒரு மனிதர் அவரால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்று விரும்பும். அமைதியான நபர் எந்தவித சண்டை சச்சரவுக்கும் செல்லமாட்டார் என்று சொல்லுவார்கள்.

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் அந்த வீடு பலம் பெறும் அந்த நபர் சாதாரமானவராக இருக்கமாட்டார். பிரச்சினை மேல் பிரச்சினையை கொடுப்பவராகவே இருப்பார். இந்த காலத்தில் எல்லோரும் அமைதியாக தான் காணப்படுகின்றனர் இந்த அமைதி என்பது வில்லங்கமாக வந்துவிடுகின்றது.

ஒருத்தன் அமைதியாக இருந்தால் அவர் பெரிய வில்லங்கத்தை செய்துக்கொண்டு இருக்கின்றார் என்று அர்த்தம் கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றது. உங்களின் ஊரில் ஒருவர் அமைதியாக இருந்தால் அவர் தான் தற்பொழுது பெரிய வில்லங்க வேலையை செய்துக்கொண்டு இருப்பார் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றாவது வீடும் பலம்பெறும்பொழுது அந்த நபரால் ஏதோ ஒரு பிரச்சினை அவரின் குடும்பத்திற்க்கு அல்லது அவரை சார்ந்த சமுதாயத்திற்க்கு ஒரு பிரச்சினையை கண்டிப்பாக தோற்றுவிப்பார் என்பதை சொல்லுகிறேன். இதனை அறிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார்போல செயல்பட்டால் நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 19, 2019

புனிதமான செயல்


வணக்கம்!
          ஒரு புனிதமான காரியம் என்றால் அது இறந்தவர்களின் வீட்டிற்க்கு சென்று துக்கம் விசாரிப்பது அதோடு அந்த இறந்த உடலை அடக்கம் செய்வதற்க்கு சென்று உதவதும் மிக மிக புனிதமான ஒன்று. இதனை நாம் செய்தால் நம்முடைய அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்துக்கொள்ளலாம்.

ஒரு கோவிலுக்கு செல்வதை விட இந்த காரியம் மிக மிக புனிதம் என்று தான் சொல்லவேண்டும். இந்த காலத்தில் ஒரு உறவினர்கள் இறந்தால் கூட வேலை இருப்பதால் வரமுடியவில்லை என்று அதனை தவிர்க்கும் நபர்கள் அதிகமாக இருக்கின்றனர்.

மனிதனாக பிறந்தால் கண்டிப்பாக அவனுக்கு இறப்பு என்பது ஒன்று இருந்து தான் ஆகவேண்டும். இந்த பூமியில் ஒரு உயிர் உருவத்தோடு வந்து அந்த உயிர் போகுது என்றால் முடிந்தவரை நாம் அதில் பங்குக்கொள்ளவேண்டும். 

உங்களால் முடிந்தவரை இதில் பங்குக்கொள்ள வேண்டும் என்று நினைத்து செயல்படுங்கள். கண்டிப்பாக இதில் நீங்கள் கலந்துக்கொண்டால் உங்களின் வாழ்க்கை சிறக்கும். பல தோஷங்கள் இதனால் போகின்றது என்பதும் அனுபவத்தில் தெரியவருகின்றது.

சிவனின் முழுமையான அருளை பெறுவதற்க்கு இந்த காரியத்தை நீங்கள் செய்தால் போதுமானதாகவே தோன்றுகின்றது. நாம் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதை விட ஒரு இறப்பில் கலந்துக்கொண்டு சுடுகாடு வரை சென்று வந்தாலே போதுமானது சிவனின் முழுமையான அருள் உங்களுக்கு கிடைக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 16, 2019

மூச்சுசுவாசமும் மூன்றாவது வீடும்


வணக்கம்!
          மூச்சு சுவாசத்தை குறிக்கும் வீடும் மூன்றாவது வீடு தான் இந்த மூன்றாவது வீட்டில் இருக்கும் தீயகிரகம் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு உங்களுக்கு பெரிய பிரச்சினையை கொடுக்ககூடிய ஒரு வகையில் செயல்படும்.

உங்களின் மூச்சு காற்று உடலுக்கு ஒழுங்காக செல்லாமல் கொஞ்சம் இடைவெளிவிட்டு உள்ளே வாங்குவது போல செய்யும். பலர் இதனை மூச்சு வாங்குகிறது என்பது போலவும் சொல்லுவார்கள். மூச்சுகாற்று உள்ளே சென்று மறுமுறை வெளியில் வந்து மூச்சை வாங்குவதற்க்கு ஒரு சில இடைவெளி வருகின்றது.

பகலில் இது தெரியாமல் இருந்தால் கூட இரவில் இது நடக்கும் இதனை நன்கு கவனித்து பார்த்தால் உங்களுக்கு தெரியவரும். மூன்றாவது வீட்டில் உள்ள தீயகிரகம் மூச்சுகுழாய் வழியாக காற்றை இழுப்பதற்க்கு தடை செய்யும் என்று கூட சொல்லலாம்.

ஒரு சிலருக்கு மூச்சு காற்று வேகமாக இழுத்து இழுத்து அடிப்பது போல கூட செயல்படுகின்றது. இது அனைத்திற்க்கும் காரணம் மூன்றாவது வீட்டில் உள்ள கிரகம் தான் பாதிப்பை தருகின்றது என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

உங்களுக்கு இப்படி நடந்தால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை பார்ப்பது கூட ஒரு சோதிடரிடமும் ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு பரிகாரமும் அவசியம் மருத்துவமும் அவசியமாக இருக்கின்றது. இது சரி செய்யக்கூடிய ஒரு அமைப்பு என்று சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 15, 2019

பெண்பிள்ளை பெற்ற பெற்றோர்களுக்கு


வணக்கம்!
          இன்றைய காலத்தில் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தது எதில் நடக்கின்றதோ இல்லையோ அவர்களின் காதல் விவகாரத்தில் கண்டிப்பாக நடந்துவிடுகின்றது. அவர்களின் விரும்பம் போல ஒரு பையனை தேர்ந்தெடுத்து மணம்புரிந்துக்கொள்கின்றனர். இது நல்லபடியாக சென்றால் நல்லது தான் ஆனால் முக்கால்வாசி பேர் இதில் சிக்கலில் தான் இருக்கின்றனர்.

காதல் திருமணத்திற்க்கு எதிர்ப்பு என்பதை காட்டவில்லை அவர்களின் வாழ்க்கை இத்தோடு முடிந்துவிடுவதில்லை. நீண்டகாலம் வாழவேண்டும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். பெண்களை பெற்ற பெற்றோர்கள் அவர்களின் ஜாதகத்தை நன்றாக அலசி பார்த்து விடவேண்டும். 

தற்பொழுது காதல் திருமணங்கள் ஏதோ ஒரு நோக்கத்திற்க்காக நடைபெறுகின்றது. பெண்களை குறிவைத்து பல மோசமானவர்களும் இதனை நன்றாக பயன்படுத்திக்கொள்கின்றனர். ஒன்றுமே இல்லாதவர் நன்றாக வளர்ந்தவர்களை வளைத்துவிடுகின்றனர். 

உங்களின் பெண் குழந்தைகள் இருந்தால் அவர்களின் ஜாதகத்தை நீங்கள் பார்த்து தெரிந்துக்கொண்டால் உங்களால் உங்களின் வாரிசுகளுக்கு சரியான ஒரு வரனை தேர்ந்தெடுத்துக்கொள்ளமுடியும். அவர்களே தேர்ந்தெடுந்து வீணாக போய்விடுவதை விட நீங்களே ஒன்றை நன்றாக தேர்ந்தெடுக்கலாம்.

பெண்கள் திருமணம் செய்த பிறகு அந்த மாப்பிள்ளை நல்லவரா அல்லது கெட்டவரா என்று ஜாதகம் பார்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். திருமணம் முடிந்தபிறகு இதனை பார்ப்பது வீணான ஒரு வேலை என்பதால் இதனை தவிர்க்க முயலுங்கள். காதலித்துக்கொண்டே இருந்தால் கூட அந்த நேரத்தில் ஜாதகம் பார்ப்பது கூட உங்களுக்கு பயன்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள்

வணக்கம்!
                        நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு



Tuesday, May 14, 2019

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள் விபரம்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.  
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள்.
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள்.

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.  
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.    

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள்.
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.    
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.      

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.  
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.  
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள்.
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

 வழக்கம்போல்            
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள்.

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம்.

எப்பொழுது போல் அம்மன் பூஜை தொடர்ந்து நடைபெறும். அம்மன் கோவில் அடிக்கல் நட்டு இருப்பதால் குறைந்த செலவில் இந்த அம்மன் பூஜையை நடத்துகிறேன். மீதி பணம் அம்மன் கோவில் கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 13, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          பெரும்பாலும் பெண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு பலம் பெறக்கூடாது என்பார்கள். இதுவும் தற்பொழுது உள்ள காலத்தில் இதனை பார்க்கவேண்டியதில்லை. ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கின்றார்கள். 

பெண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் அந்த பெண் ஆண்களை போலவே செயல்படுவார்கள். எதற்கும் பயப்படாமல் அவர்கள் இஷ்டம் போலவே செயல்பட்டுக்கொண்டு இருப்பார்கள். வீட்டில் ஒருவரின் பேச்சையும் கேட்கமாட்டார்கள்.

ஒரு சில இளைஞர்கள் என்னிடம் வந்து சொல்லிருக்கின்றனர். என் மனைவி எதனை சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்று சொல்லுகிறார். நான் என்ன செய்வது என்று கேட்பார்கள். அவர்களின் மனைவியின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு பலம் பெற்று காணப்படுவதால் தான் இப்படி இருக்கின்றனர்.

இன்றைய காலத்தில் அனைவரும் இதுபோலவே இருப்பதற்க்கும் இந்த தகவல் தொழில்நுட்பமும் ஒரு காரணமாகவே இருக்கின்றது என்று சொல்லலாம். அனைத்தையும் தெரிந்துவைத்துக்கொண்டு ஒருவர் சும்மா இருப்பார்களா அதனால் தான் தைரியமாக இருக்கின்றனர்.

ஒரு சில ஆண்களின் ஜாதகத்தில் மூன்றாவது வீடு பலம் இழந்து காணப்படும். இவர்கள் பெண்கள் போலவே செயல்படுவார்கள். பெண்களுக்குள்ள வெட்கம் போன்றவை காணப்படும். எந்த ஒரு செயலையும் வேகமாக செய்யமாட்டார்கள்.

ஆண்மைதனம் ஆண்களுக்கு மின்னவேண்டும் என்பார்கள் அல்லவா. இவர்களுக்கு பெண்கள் தனம் தான் மின்னும். ஒரு சில பெற்றோர்கள் கூட இதனை என்னிடம் சொல்லிருக்கின்றனர். என் பையன் பெண் பிள்ளை போலவே இருக்கிறான் என்பார்கள் இதற்கு எல்லாம் மூன்றாவது வீடு பலம் இழந்து காணப்படுபவதும் ஒரு குறை என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 12, 2019

நல்ல ஜாதகமும் வாழ்க்கையும்



வணக்கம்
                   நம்முடைய ஜாதகம் மோசமான ஒரு ஜாதகமாக இருக்கும்பட்சத்தில் அதனை சரி செய்ய நாம் பரிகாரம் மற்றும் வழிபாடுகளை செய்தாலும் அதனோடு நாம் கொஞ்சம் நன்றாக யோசித்து அதற்கு தகுந்த ஏற்பாட்டை செய்து ஒரு வழிகளை செய்துக்கொள்ளலாம்.  இளைஞர்களாக இருந்தால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்துக்கொள்ளலாம்.

நீங்கள் திருமணம் செய்யும்பொழுது உங்களுக்கு வரும் துணையின் ஜாதகத்தை நன்றாக தேர்வு செய்து உங்களுக்கு  ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக்கொள்ளலாம். துணையின் ஜாதகம் நன்றாக இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு நல்ல வாழ்க்கை அவர்களின் வழியாகவே அமைந்துவிடும்.

இளைஞர்களாக இருந்தால் இளம்வயதிலேயே நீங்கள் தேர்வு செய்யவேண்டும். ஒரு நல்ல ஜாதகம் அமைவதற்க்கு நிறைய போராட்டம் செய்து அதன்பிறகு உங்களுக்கு அமையும். காதல் மணம் புரிந்தால் உங்களுக்கு இருக்கும் கிரகத்தோடு அதிகபட்சம் உங்களுக்கு கெட்ட கிரகமாக தான் வரும் ஒன்றும் செய்யமுடியாது.

நம்முடைய ஜாதகம் சரியில்லை எனும்பொழுது சேரும் ஜாதகமும் அப்படியே தானே அமையும் எப்படி நல்ல ஜாதகம் அமையும் என்று கேட்கலாம். மனிதன் போராடினால் அதற்கு தகுந்த மாதிரி ஏதோ முன்ஜென்ம புண்ணியப்படி நல்லது நடப்பதற்க்கு வாய்ப்பு இருக்கும்.

திருமணம் செய்யும்பொழுது ஏதோ திருமணம் செய்தால் போதும் என்று இருக்காமல் நீங்கள் நல்ல ஜாதகத்தை தேர்ந்தெடுக்க முயற்சி செய்தால் உங்களுக்கு நல்ல ஜாதகம் அமைவதற்க்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். திருமணம் செய்யும்பொழுது உங்களின் முயற்சியை அதிகமாக போடுங்கள். நன்றாக உங்களுக்கு வாழ்க்கை அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, May 10, 2019

பிரச்சினைகள் தீர எளிய வழி


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நமக்கு வரும் பிரச்சினையை சமாளிக்க ஒரு வழி இருந்தால் சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் என்னை தொடர்புக்கொண்டு கேட்டார். இதற்கு ஒன்று நம்மை ஒரு சக்தி வாய்ந்த மனிதர்களாக மாற்றிக்கொள்வது தான் சிறந்த வழி என்று சொன்னேன்.

நமது ஆத்மாவிற்க்கு நல்ல சக்தி இருந்தால் நம்மை நோக்கி பெரும்பாலும் பிரச்சினை வராது. பிரச்சினை வந்தாலும் அதனை எளிதாக சமாளித்து முன்னேற்றம் காண்பார்கள். நமது ஆத்மாவில் சக்தி இல்லை என்றால் ஊரில் உள்ள அனைத்து பிரச்சினையும் நம்மை நோக்கி வந்துவிடும்.

முதலில் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜையறையில் சிறிது நேரம் பூஜை செய்யுங்கள் அதன்பிறகு உங்களின் வேலையை பார்க்க தொடங்குங்கள். அன்றைய நாள் முழுவதும் பெரும்பாலும் இது வேலை செய்யும். மாலை வீட்டிற்க்கு வந்தவுடன் பூஜையறையில் விளக்கை ஏற்றி சாமி கும்பிட்டு அதன்பிறகு வீட்டில் இருங்கள்.

உங்களின் வீட்டிற்க்கு அருகில் ஏதாவது கோவிலில் யாகம் நடந்தால் அந்த யாகத்தில் சிறிது நேரமாவது சென்று கலந்துக்கொள்ளுங்கள். எந்த கோவிலாக இருந்தாலும் பரவாயில்லை எந்த மாதிரியான யாகமாக இருந்தாலும் பரவாயில்லை கலந்துக்கொள்ளுங்கள்.

ஒரு யாகத்தில் சிறிது நேரம் பங்குக்கொண்டாலே உங்களின் ஆத்மாவிற்க்கு தேவையான சக்தி கிடைக்கும். தியானம் யோகம் எல்லாம் தினமும் செய்வதற்க்கு கடினமாக இருந்தாலும் மேலே சொன்ன விசயத்தை நீங்கள் பின்பற்றி வந்தாலே உங்களின் பிரச்சினையை எளிதில் நீங்கள் தீர்த்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 9, 2019

மூன்றாவது வீடு


வணக்கம்!
          மூன்றாவது வீடும் ஒரு மறைமுகவீடு. பொதுவாக மறைமுகமாக வீடுகளுக்கு உள்ள குணம் நம்மிடம் இருக்கும் ஏதோ ஒன்றை பிடுங்கிவிடும் தன்மையில் வேலை செய்யும். உதாரணத்திற்க்கு பணத்தை கூட வைத்துக்கொள்ளலாம் எதிர்பாராமல் ஏதோ ஒரு செலவை ஏற்படுத்திக்கொடுக்கும்.

மறைமுகவீடுகள் என்றால் உங்களை தூண்டி தூண்டி வேலை செய்வதாகவே வைத்திருக்கும். உங்களை இயக்கிக்கொண்டு இருக்கும் வீடுகளாகவே இந்த வீடுகள் இருக்கின்றன. மூன்றாவது வீட்டில் உள்ள காரத்துவத்திற்க்காக உங்களின் காசு செலவு வைக்கப்படும்.

நமக்கு மூன்றாவது வீட்டிற்க்காக செலவு செய்ய நேரிட்டால் அதனால் வரும் பெரிய பாதிப்பை குறைத்துக்கொள்ளமுடியும். படிப்பிற்க்கு செலவு செய்தால் உங்களின் மூன்றாவது வீட்டிற்க்கு நீங்கள் பரிகாரம் செய்வது போலவே இருக்கும்.

நான் இதற்கு எல்லாம் செலவு செய்யமாட்டேன் என்று ஒரு நிலையில் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நாம் தப்பித்துக்கொண்டால் சிறப்பு ஆனால் திடீர் என்று வரும் பெரிய இழப்பை நீங்கள் தாங்கிக்கொண்டு இருக்கவேண்டியதாகிவிடும்.

உங்களிடம் எதுவுமே இல்லை என்றாலும் எப்பொழுது உங்களிடம் வருகின்றதோ அப்பொழுது அதற்கு என்று நீங்கள் ஒரு குறிப்பிட்ட செலவை செய்துவிட்டால் அந்த காரத்துவத்தின் கெடுதல் பலனை குறைத்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மூன்றாவது வீடு :: குழந்தையும் தெய்வமும்


வணக்கம்!
         குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். குழந்தையும் கொண்டாடவேண்டும் தெய்வத்தையும் கொண்டாடவேண்டும். இரண்டையும் கொண்டாடும்பொழுது தான் நமக்கு நல்லதை செய்யும் என்பார்கள்.

ஒவ்வொரு குழந்தையும் அது வளரும் சூழ்நிலையை பொறுத்து அதன் வாழ்க்கை அமையும். பிறந்த குழந்தைக்கு உலகத்தை பார்க்கும் விதத்தை அவர்களின் பெற்றோர்கள் தான் ஏற்படுத்தி கொடுக்கின்றனர். நல்ல விதமாக ஒரு சூழ்நிலையை தேர்ந்தெடுத்து கொடுத்தால் அது நன்றாக வளரும்.

சூழ்நிலை சரியில்லாமல் வளர்ந்தால் அது போலவே தான் குழந்தையின் எதிர்காலம் இருக்கும். ஒவ்வொரு குழந்தையும் ஒரே மாதிரியாக உள்ளவர்கள் தான் நாம் கொடுக்கும் விதத்தில் தான் அவர்களின் அறிவு வளர்ச்சி இருக்கும்.

நீங்கள் சரியில்லாமல் ஒரு சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிட்டு குழந்தையா இது மக்கு போலவே இருக்கின்றது என்று சொன்னால் கண்டிப்பாக தவறு உங்களுடையது. ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுக்காமல் விட்டது உங்களின் தவறாகவே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்கி கொடுத்துவிட்டு அதன்பிறகு அந்த குழந்தை படிப்பில் சரியில்லை என்றால் அப்பொழுது சோதிடத்தில் மூன்றாவது வீட்டை பார்த்து எப்படி வேலை செய்கின்றது என்று பார்க்கவேண்டும்.

ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாலும் உங்களின் முதலீடு அதிகபட்சம் உங்களின் குழந்தை மேலே செய்து உங்களின் குழந்தைகளுக்கு ஒரு நல்ல சூழ்நிலையில் உள்ள கல்வியை ஏற்பாடு செய்து கொடுத்துவிடுங்கள். ஜாதககதம்பத்தில் உள்ளவர்கள் முக்கால்வாசி பேர் நல்ல சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றார்கள். ஒரு சிலர் மட்டும் அவர்களின் குழந்தையை அவர்களே கெடுத்து இருக்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 8, 2019

கல்வியும் மூன்றாவது வீடும்


வணக்கம்!
          இளம் வயது கல்வியை காட்டக்கூடிய அமைப்பு என்றால் அது மூன்றாவது வீடு என்று சொல்லுவார்கள். மூன்றாவது வீடு ஒருவருக்கு நன்றாக இருந்தால் அவர்களுக்கு இளம் கல்வி அறிவு நன்றாக இருக்கும்.

உண்மையில் மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்து மூன்றாவது வீடு கெட்டவர்கள் என்று சொல்லும் நபர்களும் நன்றாக படித்துவிடுகின்றார்கள். இவர்களும் நல்ல வேலைக்கு சென்று இன்று நல்ல இடத்தில் இருக்கின்றனர்.

இளம் வயதில் படிப்பு கெடுவதற்க்கு காரணமாக இருப்பது மூன்றாவது வீட்டில் இராகு அல்லது கேது இருப்பதால் நடைபெறும்.  இராகு கேது இருந்து அந்த தசா இளம்வயதில் நடந்தால் அவர்களுக்கு படிப்பில் கவனம் சிதறிச்செல்லும்.

உங்களின் குழந்தைகளுக்கு இந்த மாதிரி அமைப்பு இருந்தால் அவர்கள் படிக்கும்பொழுது கூடுதல் கவனத்தை அவர்களின் மேல் வையுங்கள். கொஞ்சம் முயற்சித்து அவர்களை பாதுகாத்து பள்ளிபடிப்பை நீங்கள் தொடர வைத்தால் அவர்களும் படித்துவிடுவார்கள்.

ஒரு பக்கம் அவர்களுக்கு படிப்பை நல்ல முறையில் பயிற்றுவிக்கும் வகையில் இருக்கும் காரணிகளை செய்யவேண்டும் மறுபக்கம் அவர்களுக்கு என்று இருக்கும் பரிகாரத்தை செய்துக்கொண்டு வந்தால் இவர்களின் வாழ்க்கையும் வீணாக போய்விடாது.

ஒரு சில காலக்கட்டத்திற்க்கு முன்பு தான் இந்த தோஷத்திற்க்கு வழி கிடைக்காமல் இருந்தது. தற்பொழுது இந்த தோஷத்திற்க்கு வழி இருக்கின்றது. இதனைப்பற்றி விவரம் தெரியவருகின்றது அல்லவா. விபரம் தெரிந்தாலே அதில் இருந்து மீண்டு வந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, May 7, 2019

இளைய சகோதரை காட்டும் மூன்றாவது வீடு



வணக்கம்!
          மூன்றாவது வீடு என்பது இளைய சகோதரத்தை காட்டக்கூடிய ஒரு அமைப்பு. மூன்றாவது வீட்டில் ஒரு தீயகிரகம் இருந்தால் அவர்களுக்கு இளம் சகோதர்கள் இருக்கமாட்டார்கள் அப்படியே இருந்தால் அவர்கள் வீணாக போய்விடுவார்கள்.

நான் பார்த்தவரையில் இப்படிப்பட்ட ஜாதக அமைப்புடையவர்களுக்கு இளம் சகோதர்கள் பிறப்பின்பொழுதே மருத்துவமனையில் சில நாட்கள் தங்கவைத்து மருத்துவம் பார்த்து அதன்பிறகு வீட்டிற்க்கு வருவது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துவார்.

உங்களுக்கு மூன்றாவது வீடு என்பது இளைய சகோதர்களுக்கு லக்கனமாக வரும் லக்கனத்தில் தீயகிரகங்கள் இருந்தால் அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும். பெரும்பாலான நபர்களுக்கு வளர்ச்சியே இல்லாமல் இருந்துக்கொண்டு இருக்கும்.

உங்களின் சிபாரிசில் நீங்கள் ஒரு வேலைக்கு உங்களின் சகோதரை அனுப்பி வைத்தால் உங்களின் பெயரை கெடுத்துவிட்டு வந்துவிடுவார். அவர்க்காக நீங்கள் அவமானப்படுவது போலவே இருக்கும். முக்கால்வாசி சகோதர்களுக்கு வேலை செய்யவே பிடிக்காமல் இருக்கின்றது.

உங்களின் ஜாதகத்தில் வந்து அமரும் தீயகிரகம் நன்றாக அமைந்தால் உங்களின் சகோதர்க்கு பிரச்சினை இல்லாமல் இருப்பார். தீயகிரகம் நன்றாக அமரவில்லை என்றால் அதனால் உங்களின் சகோதர்க்கு ஆபத்து தான் உருவாக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மூன்றாவது வீடும் சிந்தனையும்


வணக்கம்!
          சோதிடத்தில் மூன்றாவது வீடு மனதையும் காட்டக்கூடிய ஒரு அமைப்பு என்பதால் அதனைப்பற்றி தான் இந்தளவுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறேன். ஏன் என்றால் நம்முடைய வாழ்வில் நிறைய மனத்திற்க்காக செய்யவேண்டும் அப்படி செய்தால் நீங்கள் எந்தவித சிக்கலும் இன்றி எளிதாக இலக்கை அடைய முடியும் என்பதற்காக அனைத்து விசயத்தையும் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.

ஒரு நண்பர் நேற்று கேட்டார். நீங்கள் சொல்லுவது உண்மை தான் ஆனால் நாங்கள் முழுமையாக சிந்தித்துக்கொண்டே தான் எங்களுடைய வேலையை செய்யமுடியும் என்றார். அவர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். புதிய புதியதாக சிந்தித்தால் மட்டுமே எங்களால் பணிபுரியமுடியும் சிந்திக்காமல் இருந்தால் எங்களால் வேலையை செய்யமுடியாது என்றார்.

உங்களின் வேலையில் இருக்கும்பொழுது நீங்கள் சிந்திக்கவேண்டும். வேலையை முடித்தவுடன் ஒய்வாக இருக்கவேண்டும். ஒய்வாக இருக்கும் நேரத்தில் சிந்தித்துக்கொண்டே இருந்தால் உங்களுக்கு சிக்கல் தான் வரும் என்றேன்.

வேலைக்கு செல்பவர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனை தேவையான ஒன்று தான் அப்பொழுது தான் உங்களுக்கு வேலையில் நல்ல உயர்வு கிடைக்கும். தேவையற்ற விசயத்தில் மனதைப்போட்டுக்கொண்டு குழப்பிக்கொண்டு இருக்கும்பொழுது உங்களுக்கு  சிக்கல் வந்துவிடும்.

எனக்கும் நிறைய வேலைகள் வந்துக்கொண்டே இருக்கின்றன. உங்களின்  வேலையை விட மிகவும் மோசமான வேலையாக தான் எனது வேலையும் இருக்கின்றது. இதனை நான் செய்யும்பொழுது அப்படி நினைப்பதில்லை அதனால் எளிதில் வெளியில் வந்துவிடுகிறேன். ஒய்வு நேரத்தில் அதிகமாக சிந்திப்பது கிடையாது.

பல பேர் இன்றைய தேதியில் நடப்பதைப்பற்றி சிந்திப்பதில்லை கடந்த காலத்தில் நடந்ததைப்பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள் அல்லது எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்துக்கொண்டு இருப்பார்கள். நல்ல சிந்தனையாக இருந்தால் பரவாயில்லை அனைத்தும் வீணான சிந்தனையாக இருந்தால் பிரச்சினை உங்களுக்கு தான் வரும். உங்களின் மனது தான் பாழ் ஆகும். உங்களால் முடிந்தவரை தேவையானவற்றை மட்டும் சிந்தித்துக்கொள்ளுங்கள்.

புதிய சிந்தனை செய்யும்பொழுது புதிய விடியல் பிறக்கும் என்று சிந்தனை செய்யலாம் ஆனால் அமைதியான மனது சிந்திக்கும்பொழுது பல வருடம் சிந்தித்த ஒரு காரியத்தை மிக எளிமையாக சிந்தனை செய்து சாதித்துவிடும். குழம்பிய மனதிற்க்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, May 6, 2019

மூலாதார சக்தி


வணக்கம்!
          காலையில் தந்த பதிவை படித்துவிட்டு நண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். நான் ஆறு வருடமாக யோகா தியானம் செய்கிறேன் எனக்கு இன்று வரை பல தடைகள் இருக்கதான் செய்கின்றது. தினசரி விநாயகரையும் வணங்கி வருகிறேன் என்று சொன்னார். இதற்கு என்ன செய்வது என்று கேட்டார்.

இங்கு இது தான் பெரிய பிரச்சினையாகவே இருக்கின்றது. இதற்கு காரணமாக இருப்பது யோகா நடத்தும் நபர் அல்ல. முறையான வழியில் இதனை கொண்டு செல்லாமல் போவதும் கூட இதற்கு வழி வகுக்கும்.

பெரும்பாலும் உடலில் சக்தி குறைவாக இருந்தாலும் பெரியளவில் பயன் கிடைப்பதில்லை என்று தோன்றுகிறது. இதனைப்பற்றி பழைய பதிவில் கூட சொல்லிருக்கிறேன். உடலுக்குள் நன்றாக வேலை செய்யும் விசயங்களையும் தேடி எடுத்து இதனை செய்யவேண்டும்.

யோகா மற்றும் தியானம் செய்து மூலாதாரம் சரியாக வேலை செய்யவில்லை எனும்பொழுது மூலாதாரத்திற்க்கு நல்ல சக்தியை வெளியில் இருந்து கொடுக்கும் விசயத்தை எடுத்து செய்து பாருங்கள். வெளியில் இருந்து இதனை வேலை செய்து இயக்க வைப்பார்கள்.

ஒரு சில ஆன்மீகவாதிகளை சந்திக்கும்பொழுது நமது உடலில் மாற்றம் வரும் இது எங்கு கிடைக்கின்றது என்பதை பார்த்து அவர்களை சந்தியுங்கள். நல்ல ஆன்ம நிலையில் இருப்பவர்களை சந்தித்தால் உடலில் மூலாதாரம் முதலில் திறந்து ஒவ்வொரு சக்கரங்களாக திறக்கின்றது. இதனை தேடிச்செய்யுங்கள்.

உங்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் திருமணத்தை செய்யுங்கள். பலருக்கு திருமணம் முடிந்த பிறகு தான் நல்ல வாழ்க்கை அமையும். இதுவும் மூலாதாரத்திற்க்கு நல்ல ஒரு விசயமாகவே எடுத்துக்கொள்ளலாம். திருமணம் முடிந்த பிறகும் சரியில்லை என்றால் அதற்க்கும் வழி இருக்கின்றது. தடை ஏற்படுத்தும் காரணத்தை சோதிடம் வழியாகவும் கண்டுபிடிக்கலாம்.

ஜாதகத்தில் தடை ஏற்படுத்தும் கிரகங்கள் என்று இருக்கின்றன. ஒருவரை போட்டு முடக்கி வைக்கும் விசயங்கள் இருக்கின்றன அதனை பார்த்து நாம் சரி செய்துக்கொள்ளவேண்டும். அனைத்து கிரகங்களும் உங்களுக்கு எதிராக செயல்படும் காலங்களில் இப்படிப்பட்ட தடை வருகின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மனதுக்கு பரிகாரம்


வணக்கம்!
          என்னிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது. ஒரு காரியம் எடுத்து செய்யும்பொழுது என்னால் தனிப்பட்ட முறையில் எந்தளவுக்கு செய்யமுடிகின்றது. என்னுடைய தனிப்பட்ட சக்தி எந்தளவுக்கு வேலை செய்கின்றது என்பதை பார்த்து செய்வது உண்டு.

ஒரு வேலை என்பது என்னுடைய உடல் சம்பந்தமாக எந்தளவுக்கு உழைக்கின்றோம் என்பதை பொறுத்து வேலை நடக்கும். என்னுடைய உடல் உழைப்பு மற்றும் மன உழைப்பை போட்டு வேலையை செய்வேன்.

ஒரு சில காரியத்தில் இது எளிமையாக நடந்துவிடுவது உண்டு ஒரு சில காரியத்தில் இது நடக்காமல் போய்விடும். ஒரு ஐம்பது சதவீதம் செல்லும் அதன்பிறகு அந்த வேலை அப்படியே நின்றுவிடுவது உண்டு.

ஒரு கட்டத்திற்க்கு மேல் என்னால் முடியவில்லை என்ற நிலை வரும்பொழுது பூஜையை ஆரம்பித்து அதில் வெற்றியை கொண்டுவருவது உண்டு. ஒரு வேலையை எடுத்தவுடன் பூஜையை செய்யவேண்டும் என்பது கிடையாது. வேலை எப்படி நடக்கின்றது என்பதை பொறுத்து இதனை செய்கிறேன்.

சராசரியாக ஒரு மனிதன் எப்படி செய்கின்றானோ அதன் வழியாகவே முயற்சிக்க வேண்டும் அதன்பிறகு ஆன்மீக பக்கம் வேலையை தொடங்குவது உண்டு. சாதாரணமான மனிதன் போல வேலை செய்யும்பொழுது எனது கர்மா விலகும் என்பதால் அதன் வழியாகவே நடக்க விரும்புகிறேன்.

எப்படி வேலை நடக்கின்றது என்பதையும் சொல்லவேண்டும் 

என்னுடைய மனதால் தான் இதனை எல்லாம் செய்வது உண்டு. நம்முடைய மனதிற்க்கு அதிக சக்தி உண்டு என்பதை அறிந்து செயல்பட்டால் அனைத்தும் சாத்தியமே. எல்லா மனிதர்களுக்கும் மனது இருக்கின்றது ஆனால் அனைவராலும் இது சாத்தியபடுவது கிடையாதே என்று தோன்றும்.

மனதைப்போட்டு அலைகழித்துக்கொண்டே இருக்ககூடாது. அதிகமான சிந்தனையும் மனதின் சக்தியை வீணடிக்கும் ஒரு வழியாகவே இருக்கின்றது. இந்த காலத்தில் ஒரு மனிதன் சும்மா எப்படி இருக்கிறான் நாள் முழுவதும் சும்மா இருப்பதில்லை செல்போனில் ஏதாவது பார்த்துக்கொண்டே தான் இருக்கிறான்.

நானும் செல்போன் பார்க்கிறேன் எப்படி பார்ப்பேன் என்றால் எனக்கு எப்பொழுது தேவையோ அந்த நேரத்தில் அதனை பார்த்துவிட்டு அதன்பிறகு அதனை தூக்கி போட்டுவிடுவது உண்டு. தேவை இருக்கும்பாெழுது அதனை செய்தால் அதனால் பெரிய இழப்பு இருக்காது. 

நான் ஒரு காரியத்தில் மனதை செலுத்திவிட்டால் அது பெரும்பாலும் தோற்பதில்லை அதற்கு காரணம் மனதை சரியான வழியில் கொண்டு செல்வதால் மட்டுமே இது முடியும். மனதை சரியாக இருக்க வைக்கவேண்டும் என்றால் நல்லவனாக இருக்கவேண்டும் கெட்டவனாக இருக்கவேண்டும் என்பது எல்லாம் கிடையாது. நமக்கு தேவை ஏற்பட்டால் மட்டுமே மனதிற்க்கு வேலை கொடுப்பது போல நாம் பார்த்துக்கொண்டால் போதும் அனைத்தும் சாத்தியமே.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

காரியதடையை சரிசெய்ய வழி


வணக்கம்!
          இன்றைய காலத்தில் மனிதர்கள் முயற்சி செய்கின்றனர் ஆனால் அந்த முயற்சி எடுத்தால் அது தடை ஏற்பாடாமல் தொடர்ச்சியாக நடைபெறவேண்டும். தடை ஏற்பட்டால் எடுக்கும் முயற்சியில் தோல்வியை சந்திக்க நேரிடும். ஒரு தொடர்ச்சியான தோல்வியாக இருக்கும்பட்சத்தில் எடுக்கும் முயற்சியில் கடுப்பாகிவிடும்.

ஒருவருக்கு ஏற்படும் தடை என்பது அவர்களின் உடலும் ஒரு காரணமாக இருக்கின்றது. உடலில் உள்ள மூலதார இயக்கம் தடை ஏற்படும்பொழுது காரிய தடையும் ஏற்பட்டுவிடுகின்றது. மூலதாரத்தை சரிசெய்யும்பொழுது உங்களுக்கு காரிய தடை என்பது ஏற்படாது.

மூலாதாரத்தை சரி செய்யும் வழி என்பது யோகத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றது. நீங்கள் ஒரு யோக பயிற்சி நிலையத்திற்க்கு சென்றால் உங்களுக்கு இந்த காரியதடையை சரிசெய்யும் பயிற்சியை கற்று தந்துவிடுவார்கள்.

என்னால் யோக வகுப்பிற்க்கு செல்லமுடியாது வேறு வழிகளை சொல்லுங்கள் என்று சொல்லும் நண்பர்கள் விநாயகர் வழிபாட்டை மேற்க்கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு உங்களின் மூலாதாரத்தை சரி செய்து உங்களுக்கு காரியதடை என்பதை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

நாம் எந்த ஒரு பூஜை செய்தாலும் முதலில் விநாயகருக்கு பூஜை செய்த பிறகு தான் அடுத்த பூஜையை தொடங்கவேண்டும் என்று சொல்லுவார்கள். விநாயகருக்கு பூஜை செய்துவிட்டால் அது காரியதடை இல்லாமல் நடைபெறும் என்பதற்க்காக தான் சொல்லிருக்கின்றனர்.

இது எல்லாம் எங்களுக்கு முன்பே தெரியும் நீங்கள் வித்தியாசமாக சொல்லுங்கள் என்று கேட்பவர்களும் இருக்கதான் செய்வார்கள். யோகத்திற்க்கு சென்றும் காரியதடை வருகின்றது என்று சொல்லுவார்கள். 

விநாயகர் வழிபாட்டை சரியாக செய்யாமல் இருந்தாலும் யாேகத்தை ஒழுங்காக கற்க முடியாமல் இருந்தாலும் இந்த பிரச்சினை வருகின்றது. சரியான ஒரு குருவை நாடி யோககலையை கற்றுக்கொள்ளுங்கள். விநாயகர் பக்தர் இருப்பார்கள் அவர்களிடம் ஆசி பெற்று விநாயகர் மந்திரம் மற்றும் வழிபாட்டை செய்யுங்கள் இது சரியாகும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தலாம். கல்வி உதவி தொகை அனுப்பவிரும்பும் நண்பர்கள் அனுப்பலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, May 5, 2019

அவமானங்களில் இருந்து எப்பொழுது தப்பிக்கலாம்?


வணக்கம்!
          ஒரு குடும்பத்தில் உள்ளவர்களில் யாராவது ஒருவர் ஒன்றுமே சரியில்லாமல் இருப்பார். அவரை அந்த குடும்பத்தில் உள்ள நபர்கள் அனைவரும் சேர்ந்து திட்டிக்கொண்டே இருப்பார்கள். என்ன தான் திட்டினாலும் என்ன தான் முயற்சி செய்தாலும் அவரால் ஒரு முன்னேற்றம் என்பதே அவரிடம் இருக்காது. அவர் யார் என்றால் அவர் தான் லக்கனாதிபதி மறைவுஸ்தானத்தில் ஏறிய நபராக இருப்பார்.

லக்கனாதிபதி மறைவுஸ்தானத்தில் ஏறிய நபர்கள் குடும்பத்தினர்களின் திட்டுதலுக்கு ஆளாக நேரிடும். நிறைய வசப்பாடல் நிறைய அவமானங்களை எல்லாம் சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் முயற்சி எடுக்காமல் இல்லை ஆனால் இவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகவே போய்விடுகின்றது அது தான் பிரச்சினை.

ஒரு ஊரில் உள்ள பத்து லக்கினாதிபதி மறைவுஸ்தானத்தில் உள்ளவர்களை எடுத்து பார்த்தால் இந்த பத்து பேரும் மேலே சொன்ன ரகத்திலேயே இருப்பார்கள். வாழ்க்கை முழுவதுமே மிகுந்த ஒரு போராட்டத்தை காண்பவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் முன்னேற்றம் அடையமுடியாத பிறர்கள் ஏளனம் செய்வதில் இருந்து தப்பிக்க முடியாத என்று கேட்கலாம் அல்லது ஏதோ ஒரு காலக்கட்டத்தில் இவர்கள் முன்னேற்றபாதைக்கு செல்லமாட்டார்களா என்று கேட்கலாம்.

இவர்கள் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு முன்னேற்றத்தை அடைவார்கள் ஆனால் அதற்கு அவர்கள் பெரும்பாடுபட்டு ஒன்றை உருவாக்கி அதன்பிறகு வெற்றி காண்பவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு நல்ல தசா வந்தால் முன்னேற்றத்தை காண்பவர்களாக இருப்பார்கள்.

உங்களின் ஜாதகத்தில் லக்கனாதிபதி மறைவு பெற்று அதில் நீங்கள் சிக்கி இருக்கின்றீர்கள் இதனை என்ன செய்தால் இதில் இருந்து மீண்டு வரலாம் என்று நீங்கள் ஆலோசனை கேட்க நினைத்தால் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

கடவுள் அனுப்பும் ஆள்


வணக்கம்!
          ஒருவர் வந்து உங்களிடம் பிச்சை கேட்கின்றார் என்று வைத்துக்கொள்வோம். உடனே உங்களுக்கு தர்மம் செய்யவேண்டும் என்ற ஒரு எண்ணம் வந்துவிட்டால் அது புண்ணியம். அவர் பிச்சை கேட்டவுடன் அவரைப்பற்றி ஒரு கணிப்பை உங்களின் மனது போட்டுவிட்டு அதன்பிறகு தர்மம் செய்வது தவறான ஒன்றாகவே இருக்கும்.

இவன் நன்றாக தானே இருக்கிறான் இவனுக்கு என்ன வந்தது இவனுக்கு தர்மம் செய்யவேண்டும் என்று உங்களின் மனது எடைபோட்டால் பிச்சை கேட்பவனின் கர்மாவை நீங்கள் வாங்கிக்கொள்வது போலவே இருக்கும். ஒரு சிலர் பார்க்கும் பார்வையிலேயே கணக்கை போட்டுவிடுவார்கள்.

ஒருவன் பிச்சை கேட்கும் நிலைக்கு தள்ளியது கிரகங்களின் வேலையாக தான் இருக்கும். அவனின் நிலைக்கு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. நீங்கள் பிச்சை போடுங்கள் அல்லது இல்லை என்று சொல்லுங்கள் ஆனால் பிச்சை போடும்பொழுது கணக்கு போடுவது ஒரு தவறான ஒன்றாகவே இருக்கின்றது.

பல இடத்தில் இதனை நான் நேரிடையாகவே பார்த்து இருக்கிறேன் அதாவது வெளிப்படையாகவே பேசுவார்கள். உடம்பு நன்றாகவே தானே இருக்கின்றது இவன் உழைத்து சாப்பிட்டால் என்ன இதனை எல்லாம் தடுக்க ஒரு சட்டம் இல்லையா என்று எல்லாம் பேசுவார்கள். 

நான் சொல்லுவது பிச்சை மட்டும் இல்லை பல இடங்களில் பல்வேறு வேலைகளிலும் தினமும் நடைபெறும் ஒரு செயலாகவே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தை கொண்டு உங்களிடம் வந்து ஒன்றை கேட்கின்றார்கள் என்றால் அதற்கு ஒன்று ஆம் என்று சொல்லவேண்டும் இல்லை என்று சொல்லவேண்டும்.

ஒருவரை போட்டு இழுக்கப்படுவது அல்லது அவரைப்பற்றி சிந்தனை செய்து அதாவது கணக்குபோட்டு பார்ப்பது எல்லாமே பிறரின் கர்மாவை வாங்கும் ஒரு செயலாகவே இருக்கும். இதனை எல்லாம் நீங்கள் தெரிந்துக்கொண்டு செயல்படும்பொழுது உங்களின் வாழ்க்கை நன்றாக அமையும்.

நம்முடைய கர்மாவை வாங்கிக்கொள்ள கடவுளே ஒரு ஆளை தேர்வு செய்து இப்படி அனுப்புகின்றார்கள். பல இடங்களில் பல நேரங்களில் இதனை நானே உணர்ந்து இருக்கிறேன். கடவுள் நமக்கு கொடுக்கும் வாய்ப்பை நாம் தவறாக பயன்படுத்திக்கொள்ள கூடாது என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

குரு கிரகம்


வணக்கம்!
          பெரும்பாலும் நான் பார்த்தவரையிலும் குரு கிரகம்  சனியின் வீடான மகரம் மற்றும் கும்பத்தில் இருந்தால் பலன் அதிகம் தருவதில்லை. குரு கிரகம் மகரத்தில் நீசம் என்றாலும் கும்பத்தில் அமர்ந்தாலும் கூட அது பலனை அதிகமாக கொடுப்பதில்லை.

குரு கிரகம் அமர்ந்த இடத்தில் இருந்து பார்க்கும் வீடு சுபிட்ஷம் பெறும் என்பது சோதிடவிதியாக இருந்தாலும் மகரம் கும்பத்தில் இருந்து பார்க்கும்பொழுது பார்க்கும் வீடு அந்தளவுக்கு சுபிட்ஷம் பெறுவதில்லை என்பது போன்றே இருக்கின்றது.

குருவோடு சேரும் தீயகிரகம் குருவின் தன்மையும் கெடுகின்றது. ஏதோ ஒரு தீயகிரகம் குருவோடு சேர்ந்து அமர்ந்து இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். குருவோடு அமர்ந்த வீட்டையும் கெடுத்து குரு பார்க்கும் வீட்டையும் கெடுத்துவிடுகின்றது.

உங்களின் ஜாதகத்தில் இப்படி அமர்ந்து இருந்தால் குரு கிரகத்தை விட்டுவிட்டு அசுரகுருவான சுக்கிரன் எப்படி அமர்ந்து இருக்கின்றது என்பதை பாருங்கள். சுக்கிரன் நன்றாக அமர்ந்து இருந்தால் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம்.

குருவும் கெட்டு சுக்கிரனும் கெட்டால் உங்களுக்கு நடக்கும் தசாநாதன் எப்படிப்பட்டவர் என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு தகுந்தார் போல் நீங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும். நீங்கள் இதனைப்பற்றி எல்லாம் கண்டுக்கொள்ளவில்லை என்றால் உங்களின் வாழ்க்கை பெரும்பாலும் வீணாக தான் சென்றுக்கொண்டு இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, May 4, 2019

வைராக்கிய மனதை தரும் மூன்றாவது வீடு


வணக்கம்!
          ஆன்மீகவாதிகளின் மனது என்பது வைராக்கியம் நிறைந்த ஒன்றாகவே இருக்கும். ஒரு விசயத்திலேயே நம்பிக்கை வைத்து அந்த நம்பிக்கையை கடைசி வரை வைப்பது வைராக்கியமான ஒன்றாகவே கருதவேண்டும். உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மீகவாதிகளுக்கும் இந்த வைராக்கிய எண்ணம் என்பது இருக்கும்.

வைராக்கியமான எண்ணம் இல்லாதவர்கள் ஆன்மீக வாழ்க்கைக்கு வரவே முடியாது. மனதை திடப்படுத்தி வைக்கும் காரத்துவத்தையும் மூன்றாவது வீட்டை வைத்து தான் கணிக்கவேண்டும். மூன்றாவது வீட்டில் பெரும்பாலும் கேது இருக்கும் நபர்களுக்கு நல்ல ஆன்மீக ஞானம் கிடைக்கும்.

இளம்வயதில் தோஷமாக இருந்தாலும் வளர வளர இது ஞானத்தை கொடுத்துவிடுகின்றது. கஷ்டபடாமல் ஞானத்தை நோக்கி செல்வது என்பது கோடியில் ஒருவருக்கு கிடைக்கும். நிறைய கஷ்டத்தை இளம்வயதில் பார்ப்பவர்களுக்கு நல்ல ஞானம் இருக்கும்.

கேது தோஷத்தை கொடுத்து அவர்களின் இளம்வாழ்க்கையை வீணாக்கினாலும் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு நல்ல வைராக்கியமான எண்ணத்தோடு அவர்கள் விளங்குவதற்க்கு இந்த மூன்றாவது வீட்டில் கேது இருப்பதும் ஒரு காரணமாக இருக்கின்றது.

ஆன்மீகத்தில் தான் வைராக்கியம் வைக்கவேண்டும் என்பதில்லை வேறு விதத்திலும் வைராக்கியம் வைப்பவர்களும் இருக்க தானே செய்கின்றனர். காதல் விசயத்தில் வைராக்கியம் வைப்பவர்களும் இருக்கதான் செய்கின்றனர். 

நான் காதலித்த பெண்ணை அல்லது ஆணை திருமணம் தான் செய்வேன் மற்றவரை நான் திருமணம் செய்யமாட்டேன். நான் இப்படியே காலத்தை தள்ளுவேனை தவிர நீங்கள் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யமாட்டேன் என்று சொல்லுபவர்களும் இருக்கதான் செய்கின்றனர்.

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருக்கும் நபர்களுக்கு இப்படிப்பட்ட வைராக்கியமான மனது இருக்கின்றது என்பதை நான் பார்த்து இருக்கிறேன். இந்த வைராக்கியமான மனதை கொடுப்பதும் மூன்றாவது வீடாக தான் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, May 2, 2019

மூன்றாவது வீட்டில் சனி


வணக்கம்!
                 மூன்றாவது வீட்டில் அமரும் சனி தன்னுடைய பார்வையை ஐந்தாவது வீட்டிற்க்கும் பனிரெண்டாவது வீட்டிற்க்கும் செலுத்திவிடும். சனி மூன்றில் அமரும் வீட்டை விட அது பார்க்கும் வீட்டிற்க்கு அதிகமாகவே கவனம் எடுத்துக்கொண்டு நாம் பலனை பார்ப்பது நல்லது.

மூன்றாவது பார்வையாக ஐந்தாவது வீட்டை பார்ப்பதால் பூர்வபுண்ணியம் கெடும் என்று சொல்லலாம். பூர்வபுண்ணியம் கெட்டால் நிறைய தடைகளை அது கொடுத்துவிடுகின்றது. எந்த காரியத்தை எடுத்தாலும் அது தடையோடு தான் செய்யவேண்டியிருக்கும்.

விரைய வீட்டிற்க்கு சனியின் பார்வை கிடைப்பதால் எந்த காரியமும் அதிகமான் செலவுகளை கொண்டுவந்துவிடும். ஒரு வேலையை செய்தால் அவர்க்கு அதனைவிட பல மடங்கு நஷ்டம் ஏற்பட்டு கவலை அடைய செய்யும்.

மூன்றாவது வீட்டில் நல்ல படியாக அல்லது உச்சம் பெற்று அமைந்தாலும் கூட இந்த பலனை கொடுத்துக்கொண்டு தான் இருக்கும். சனி என்பது ஒரு தீயகிரகம். தீயகிரகத்தின் பார்வையில் படும்வீடு நாசம் அடையும் என்பது பொதுவான பலன்.

இன்றைக்கு கூட ஒரு ஜாதகத்தின் பலனை ஒருவருக்கு சொன்னேன். அவர்களுக்கு சனி மூன்றில் தான் இருந்தது. பல சோதிடர்கள் இந்த ஜாதகருக்கு ஆபத்து குறைந்த வயது என்று சொல்லிருக்கின்றார்கள். நான் அவர்களிடம் சொன்னேன் நல்ல ஆயுள் இருக்கின்றது என்று சொன்னேன். 

மூன்றாவது வீட்டில் சனி அமர்ந்தால் எட்டாவது வீட்டிற்க்கு எட்டாவது வீடாக மூன்றாவது வீடு வரும் அதில் அமரும் சனி ஜாதகருக்க நல்ல ஆயுளை கொடுக்க கூடிய ஒன்றாகவே இருக்கும் என்பதால் நல்ல ஆயுள் இருக்கும் என்று சொல்லிருக்கிறேன்.

மூன்றாவது வீட்டில் சனியைப்பற்றியே சொல்லிக்கொண்டு இருக்கின்றார் என்று நினைக்கவேண்டாம். இதன் பார்வையும் நாம் தெரிந்துக்கொண்டு பலனை சொல்லவேண்டும் என்பதற்க்காக கூறினேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

மூன்றாவது வீட்டின் நன்மை


வணக்கம்!
          மூன்றாவது வீட்டில் நல்லது நடந்து வெற்றி பெற்றவர்களும் இருக்கின்றனர். மூன்றாவது வீடு என்றாலே அது பிரச்சினையை தான் தரும் என்று இல்லை பலருக்கு நல்லதையும் செய்துக்கொண்டு தான் இருக்கும்.

மூன்றாவது வீட்டு அதிபதி நன்றாக அமைந்து மூன்றாவது வீட்டில் அமரும் கிரகம் நல்ல கிரகமாக அமைந்து அந்த தசா வரும் காலங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுக்கும். ஒரு சிலர் தொழில் செய்தால் அந்த தொழில் சிறப்பான ஒரு நிலைக்கு வரும்.

மூன்றாவது வீடு என்பது கமிஷன் தொழிலையும் குறிக்ககூடிய ஒரு இடமாக தான் இருக்கின்றது. மூன்றாவது வீட்டு தசா உங்களுக்கு நடந்தால் நீங்கள் பெரியளவில் முதலீடு போட்டு ஒரு தொழிலை ஆரம்பிக்கவேண்டும் என்பதில்லை நீங்களே உங்களின் மொபைல் போனில் இருந்து தொழிலை செய்துவிடலாம்.

சேவை வழியாக தொழில் செய்யும் நபர்களுக்கு எல்லாம் மூன்றாவது வீடு நன்றாக வேலை செய்துக்கொண்டு இருக்கும். இவர்கள் மூளை மட்டும் முதலீடாக வைத்து தொழில் செய்துக்கொண்டு இருப்பார்கள்.

மூன்றாவது வீட்டில் புதன் அமர்ந்தாலும் ஒரு சிலருக்கு நல்லதை தரும். மூன்றாவது வீட்டில் புதன் அமர்ந்து சேவை தொழிலில் கொடிகட்டி பறந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, May 1, 2019

மூன்றாவது வீட்டில் சனி


வணக்கம்!
          ஒரு சில மக்களிடம் அதிக பொறாமை இருக்கும். முக்கால்வாசி பேர்களிடம் பொறாமை இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும். எதற்கு எடுத்தாலும் பொறாமைபடுபவர்களாகவே இருக்கின்றனர். 

ஒரு சில காலக்கட்டத்திற்க்கு முன்பு இது கிராமபுறங்களில் தான் இருந்தது. தற்பொழுது இது நகர்புறங்களிலும் இருக்கின்றது. மூன்றாவது வீடு உங்களின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களையும் காட்டக்கூடிய ஒரு வீடாக இருக்கும். 

மூன்றாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தால் உங்களின் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உங்களோடு அதிக பொறாமைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் இதற்கு எல்லாம் கவலைப்படாமல் இருந்தாலும் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களின் துணையும் வேண்டும் அல்லவா.

உங்களின் அவசர தேவைக்கு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தான் உடனே உதவ முடியும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உங்களின் மேல் பாசத்தோடு நடப்பதற்க்கு நீங்கள் அடுத்தவர்களை பார்த்து பொறாமைபடாமல் இருக்கவேண்டும்.

ஒரு சில மூன்றாவது வீட்டில் சனி இருக்கும் நபர்கள் அடுத்தவர்களை பார்த்து அதிக பொறாமைப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். இதனால் இவர்களுக்கு நிறைய பிரச்சினையை அடுத்தவர்களிடம் வாங்கிக்கொள்கின்றனர்.

மூன்றாவது வீட்டில் சனி இருக்கும் நபர்களும் அதிக பொறாமைக்கொள்கின்றனர். இவர்களை பார்த்தும் அடுத்தவர்களும் பொறாமைக்கொள்கின்றனர். இதனை அறிந்துக்கொண்டு நீங்கள் இதில் இருந்து மீண்டு வந்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

இனிய தொடக்கம்


வணக்கம்!
           அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.

பல பேர்கள் நம்மிடம் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களுக்கு தகுந்தமாதிரி ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து அந்த கோவிலுக்கு சென்று வாருங்கள். ஒரு முறை சென்று வந்தாலும் போதுமானது என்று சொல்லிருக்கிறோம்.

பரிகாரம் என்றால் அந்த கோவிலுக்கு சென்று வருவது மட்டுமே பரிகாரமாக அமையும் என்பதால் இதனை பலரிடம் வலியுறுத்தி சொல்லிருக்கிறேன். நாம் பலன் சொல்லும் நேரத்தில் கேட்டுக்கொண்டு அதன் பிறகு அந்த கோவிலுக்கு சென்று வருவது கிடையாது.

பல வருடங்கள் சென்ற பிறகு கூட நம்மை நாடி மறுபடியும் வரும்பொழுது அந்த கோவிலுக்கு சென்று வந்திருக்கிறீர்களா என்று கேட்டால் அவர்கள் செல்லவில்லை என்று சொல்லுவார்கள். அவர்கள் சொன்ன பிரச்சினை தற்பொழுதும் இருக்கின்றது என்பார்கள்.

உங்களின் பிரச்சினையை தீர்ப்பதற்க்கு தான் கோவிலுக்கு சென்று வரச்சொன்னேன் என்று நான் சொல்லுவது உண்டு. எப்படியும் இந்த முறை சென்று வருகிறேன் என்று சொல்லுவார்கள். எந்த பரிகாரமாக இருந்தாலும் ஒரு கோவிலுக்கு சென்று வந்தால் அதன் பலன் நன்றாக இருக்கும் என்று எண்ணி தான் இதனை சொல்லுவது உண்டு. அனைவரும் நாம் சொல்லக்கூடிய கோவிலுக்கு எப்படியும் சென்று வந்துவிடுங்கள்.

பரிகாரம் என்றால் பூஜை மட்டும் கிடையாது ஒரு குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வந்தாலும் நல்ல பலன் உங்களுக்கு கிடைத்துவிடும். கோவிலுக்கு சென்ற பிறகும் நமக்கு நல்லது நடக்கவில்லை என்ற நிலை ஏற்பட்டால் பூஜைகள் மீது கவனம் செலுத்தலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு