Followers

Friday, February 28, 2020

ஆரா


வணக்கம்!
         நமது வீடியோ பதிவில் ஆராவைப்பற்றி சொல்லிருக்கிறேன். பல நண்பர்கள் இதனைப்பற்றி கேள்வி கேட்டனர். நான் ஆராவை பார்க்கவேண்டும் அதற்கு வழி சொல்லுங்கள் என்றனர். ஒரு சிலர் ஆராவைப்பற்றி நிறைய பதிவை உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்றும் சொல்லிருந்தனர். எளிமையான ஒரு விசயத்தை வீடியோவிலேயே நான் சொல்லிருக்கிறேன் அதனை வைத்து நீங்களே பார்த்துக்கொள்ளலாம்.

ஒரு ஆன்மீககுருவிடம் நாம் ஆன்மீகம் கற்றுக்கொள்ளவேண்டும் என்று அவரை நாடி நாம் சென்றால் அந்த காலத்தில் உள்ள குரு எல்லாம் அவ்வளவு எளிதில் உங்களுக்கு எதுவும் கொடுத்துவிடமாட்டார்கள். உங்களை நன்றாக பரிசாேதனை செய்துக்கொண்டே இருப்பார். உங்களுக்கு தெரியாமல் உங்களை சோதனை செய்துவிட்டு உங்களுக்கு உகந்த காலம் என்பது எது என்பதற்க்காக காத்துக்கொண்டு இருப்பார். எப்படி அவர் சோதனை செய்வார் என்றால் அவர் உங்களின் ஆரா எப்படி இருக்கின்றது என்பதை தான் பார்ப்பார்.

உங்களின் ஆரா உங்களை காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் எப்படிபபட்ட ஆள் எந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பதை காட்டிக்கொடுத்துவிடும். நீங்கள் என்ன தான் பொய் சொன்னாலும் இவர் பொய் சொல்லுகின்றார் என்பதை ஆராவை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளமுடியும். நீங்கள் அணுகி குரு உங்களின் ஆரா நன்றாக வளர்ந்து வரும் காலக்கட்டம் வரை உங்களுக்காக காத்துக்கொண்டு இருப்பார்.

உங்களின் ஆரா நல்ல வளர்ச்சியை நோக்கி சென்றால் மட்டுமே அவர் உங்களுக்கு தன்னுடைய கல்வியை கொடுப்பார் அதுவரை அவர் பொறுமையாக காத்துக்கொண்டு இருப்பார். ஆரா நல்ல வளர்ச்சியை நோக்கி செல்லும்பொழுது மட்டுமே உங்களால் ஆன்மீகத்தை கற்றுக்கொள்ளும் நிலை வரும் என்பது அவர்க்கு தெரியும்.

இன்றைய காலத்தில் ஆறுமாதம் கோவில் குளங்களை சுற்றிவிட்டு அடுத்த ஆறு மாதத்தில் நான் சாமியார் என்று சொல்லிக்கொள்ள தான் மனம் நினைக்கின்றது. இந்த காரணத்தால் மட்டுமே ஒருவரால் நல்ல ஆன்மீகவாதியாக ஆவதற்க்கு முடிவதில்லை. மனம் சொல்லுவதை நீங்கள் கேட்டுவிட்டு அதன்படி நடிக்க ஆரம்பித்துவிடுகின்றீர்கள்.

ஒரு குழந்தை பிறக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதனை ஆரா பார்க்கும் ஒருவர் வந்து பார்த்தால் அந்த குழந்தை இறக்கும் நிலையில் இருந்தால் ஆரா பார்க்கும் நபர் உடனே சொல்லுவார் குழந்தை இறந்துவிடும் என்பார். ஒருவர் இறப்பதை ஆரா பார்க்கும் ஒருவரால் மிக துல்லியமாக சொல்லிவிடமுடியும் அதே நேரத்தில் மருத்துவரால் இதனை சொல்லமுடியாது. 

எல்லோருடைய மனதிலும் நான் பெரிய சாமியார் என்ற ஆணவம் இருந்தால் அப்புறம் அடுத்தவன் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். முதலில் உங்களை வளர்க்கும் விதத்தை ஆரம்பியுங்கள் அதன்பிறகு ஒரு குருவை நாடி செல்லுங்கள். அவர் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டும் என்பதில்லை நீங்கள் நல்ல நிலையில் இருந்தால் அவரின் ஆராவே உங்களை வளப்படுத்திவிடும்.

ஜாதககதம்பத்தில் உள்ள நண்பர்களிடம் நான் அடிக்கடி சொல்லுவது நீங்கள் அடிக்கடி வந்து என்னை பாருங்கள் என்று சொல்லுவேன். எல்லாேரின் மனதிலும் என்ன ஓடுகின்றது என்றால் இவர்க்கு வேலை இல்லை ஏதாவது ஒன்றை சொல்லுவார் என்று இருந்துவிடுவார்கள். ஒரு சிலர் நீங்கள் வேண்டுமானால் எங்க ஊருக்கு வரும்பொழுது சொல்லுங்கள் நான் வந்து சந்திகிறேன் என்று சொல்லுவார்கள். என்னை வந்து சந்திக்கவேண்டும் என்பது அவசியம் கிடையாது ஆனால் உங்களின் ஆன்மீக பயணத்திற்க்கு என்னால் எதையாது செய்யமுடியும் என்றால் அது என்னை சந்திக்கும்பொழுது மட்டுமே அதிக வாய்ப்பு இருக்கும்.

என்னை விடுங்கள் உங்களின் ஆன்மீக குருவை அடிக்கடி சென்று நீங்கள் சந்தித்துக்கொண்டே இருங்கள். நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் அடிக்கடி அவரிடம் செல்லுங்கள். உங்களின் ஆரா வளர்ச்சிக்கு அவர் பெரிதும் உதவுவார். அவர் வெளியூர் இருந்துக்கொண்டு நீங்கள் உங்களின் ஊரில் இருந்துக்கொண்டு போனில் பேசிக்கொண்டு இருந்தால் அவரால் உங்களுக்கு உதவவே முடியாது. ஆரா நன்றாக இல்லை என்றால் ஆன்மீகம் என்பது இல்லை. 

ஆராவைப்பற்றி ஒரு வீடியாே பதிவு வர இருக்கின்றது அதனை தவறவிடாதீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 26, 2020

ஆலயமணி


வணக்கம்!
         நாம் வீடியோ பதிவுகளை தயார் செய்வதால் ஜாதககதம்பத்தை எழுதாமல் விட்டுருந்தேன். தற்பொழுது அதன் பணி விரைவில் நடைபெறுவதால் ஜாதககதம்பத்திலும் பதிவுகளை கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் தீர்மானித்து இருக்கிறோம். 

உங்களின் ஒத்துழைப்பால் வீடியோ பதிவுகள் நல்ல முறையில் வளர்ச்சியை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கின்றது. அனைவரும் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள். தற்பொழுது கோவிலில் உள்ள ஆலயமணி எதற்க்கு என்பதைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டேன் அதில் ஆலயமணி கோவிலில் தனித்தன்மையாக அதற்கு என்று கோபுரம் வைத்து கட்டும்பொழுது அது தன்னுடயை ஆற்றலை வழங்கும்.

ஆலயமணியின் அடியில் நிற்க்கும்பொழுது அது பாவத்தை போக்ககூடிய தன்மை உடையது. இந்த ஜென்மத்தில் நாம் செய்த எந்த ஒரு பாவமும் ஆலயமணியின் அடியில் நிற்க்கும்பொழுது போய்விடும். மின்னசாரமணியில் நாம் நின்றால் போகாது. ஆலயமணி மனிதர்கள் அடிப்போது போல இருக்கும்பட்சத்தில் மனிதனின் பாவங்கள் போய்விடுகின்றன.

இதனைப்பற்றி முழுமையான வீடியோ பதிவை பார்க்க


நமது அம்மன் பூஜை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளேன். பிரதி மாதம் 4 தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் அதற்கு தகுந்தார் போல் தங்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 21, 2020

மகாசிவராத்திரி


வணக்கம்!
         மகாசிவராத்திரி அன்று அம்மன் வழிபாட்டை மேற்க்கொள்வது நல்லது சிவ வழிபாட்டை செய்ய சொல்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ள சொல்லுகிறேன் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் சிவன் வழிபாட்டையும் செய்வேன் அதே நேரத்தில் சிவராத்திரி அன்று அம்மன் வழிபாட்டை செய்யும்பொழுது மிகப்பெரிய நன்மை கிடைக்கும் என்பதால் இதனை செய்ய சொல்லுகிறேன்.

சிவராத்திரி அன்று அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் இருக்கும் அனைத்து ஊர்களிலும் திருவிழா நடைபெறும். சிவராத்திரி என்பது மற்ற அம்மனை விட அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பான ஒரு நாளாக இருப்பதால் தான் அன்று திருவிழா நடைபெறுகின்றது. இந்த நாளில் நீங்கள் அம்மனை வழிபடுங்கள்.

மாதம் மாதம் வருகின்ற சிவராத்திரி அன்று நீங்கள் வழிபட்டாலும் வழிபடலாம். மகாசிவராத்திரி அன்று நிறைய சக்தி அதாவது பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தி பூமிக்கு வருவதால் அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளமுடியும். தியானம் அல்லது வழிபாடு செய்து இந்த சக்தியை உங்களுக்குள் கொண்டு வரமுடியும்.

சிவ வழிபாட்டை மேற்க்கொள்ளும் நண்பர்கள் உங்களின் வீட்டிலேய வழிபாடு செய்துக்கொள்ளலாம் அதனோடு உங்களின் அருகில் இருக்கும் சிவலாயங்களிலும் வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். உங்களின் வீட்டில் நடராஜர் சிலையை வைத்து வழிபாட்டை மேற்க்கொள்ளலாம். நடராஜருக்கு அபிஷேகம் செய்து உங்களின் சிவராத்திரி பூஜையை மேற்க்கொள்ளலாம்.

மகா சிவராத்திரியை பற்றி ஒரு வீடியோ பதிவை தந்து இருக்கிறேன் அதனை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 19, 2020

வீடியோ பதிவுகள்


வணக்கம்!
          நமது வீடியோ பதிவுகளை பார்த்து இருப்பீர்கள் இதில் என்ன மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதைப்பற்றி எனக்கு தெரிவிக்கலாம். ஜாதககதம்பம் ஆரம்பித்த காலத்திலேயே முதல் குறைவாக தான் நமக்கு நட்பு வட்டம் கிடைத்தது. தினமும் பதிவுகளை தொடர்ச்சியாக தந்த காரணத்தால் நிறைய நட்பு வட்டம் கிடைத்தது. வீடியோ பதிவுகளில் தினமும் பதிவுகள் வந்துக்கொண்டே இருக்கும். ஒரே நாளைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை தரவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் அது எப்படி சாத்தியப்படுகின்றது என்பதை போக போக தான் தெரியும்.

தற்பொழுது வீட்டில் இருந்து இந்த வீடியோ பதிவுகளை தந்துக்கொண்டு இருக்கிறேன். இனி வரும் காலங்களில் வெளி இடங்களுக்கும் சென்று வீடியோ பதிவுகளை தரவேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறேன். தற்பொழுது இருக்கும் குறைந்தபட்ட உபகரணங்களை கொண்டு வீடியோ தருகிறேன் விரைவில் மாற்றம் ஏற்பட்டு நிறைய உபகரணங்களை வாங்கி உங்களுக்கு தரமான வீடியோ பதிவுகள் தருகிறேன்.

வீடியோ பதிவுகளை தங்களின் நட்பு வட்டத்திலும் பகிருங்கள். நிறைய பேர்கள் வீடியோவை பார்க்கும்பொழுது எனக்கு ஒரு உத்வேகம் கிடைத்து நிறைய கருத்துகளை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளமுடியும். என்னால் முடிந்தளவுக்கு அனைத்து கருத்துகளும் புதுவிதமான கருத்துக்களை தருவதற்க்கு இருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது ஆதரவை மட்டும் தாருங்கள்.

நான் சொல்லுகின்ற கருத்துக்கு நிறைய கேள்விகளை என்னிடம் கேளுங்கள். கேள்வி கேட்கும்பொழுது மட்டுமே நிறைய ஞான கருத்துக்களை உங்களுக்கு என்னால் கொடுக்கமுடியும். ஞானம் என்பதை விட உங்களை உயர்த்திக்கொள்வதற்க்கும் இது வழி வகை செய்யும் என்பதால் கேள்வி கேளுங்கள்.

இன்றைய வீடியோ பதிவு லிங்க்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 17, 2020

இனிய உதயம்


வணக்கம்!
          இன்று முதல் நமது யூடீப் சேனல் ஆரம்பிக்கப்படுகின்றது. நீங்கள் எல்லாம் எப்படி இந்த ஜாதககதம்பத்திற்க்கு ஆதரவு தந்தீர்களாே அது போல அந்த சேனலுக்கும் ஆதரவை தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

முதலில் இந்த சேனலை ஆரம்பிக்க உதவிய நண்பர் திரு கிருஷ்ணப்ப சரவணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தற்பொழுது மொபைலில் தான் வீடியோவை எடுக்கிறேன். உங்களின் ஆதரவு நீங்கள் தந்தால் பெரிய அளவில் நமது வீடியோ பதிவுகள் இருக்கும். படிபடிப்பயாக வீடியோவின் தரமும் உயர்த்தி பல நல்ல வீடியோகளாக உங்களுக்கு வரும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

சேனலின் பெயர்  Rajeshsubbu

சேனலின் லிங்க்


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 16, 2020

கோவிலுக்கு செல்லும் பழக்கம்


வணக்கம்!
          ஒரு பிரச்சினையில் ஒருவர் சிக்குகின்றார் என்று வைத்துக்கொள்வோம். அவரின் பிரச்சினை மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்பொழுது அதில் இருந்து ஒருவர் மீள்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கின்றது என்று வைத்துக்கொண்டால் அவர் செய்யவேண்டியது நிறைய சிவன் கோவிலுக்கு தொடர்ச்சியாக செல்லவேண்டும். இதனை செய்வதற்க்கு அவரிடம் நிறைய வைராக்கியம் வேண்டும்.

நான் பார்த்தவரையில் பிரச்சினையில் சிக்குபவர்கள் அவர்கள் வெளியில் செல்வதில்லை. அதாவது கோவிலுக்கு செல்வதற்க்கு எல்லாம் பிடிக்காமல் இருப்பார்கள். கோவிலுக்கு செல்வதற்க்கு பிடிக்காத மற்றும் விரும்பாத நபர்களால் தான் இருப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த முறை அப்படிப்பட்ட ஒன்றாக இருப்பதால் தான் இதற்கு காரணமாக அமைக்கின்றது.

கோவிலுக்கு சென்றால் பிரச்சினை ஒய்ந்துவிடுமா அல்லது பிரச்சினை போய்விடுமா என்று கேட்கலாம். பிரச்சினை வரும் நேரத்தில் சென்றால் ஒய்ந்துவிடாது அந்த நேரத்தில் சென்றால் குறிப்பிட்ட காலத்தில் அந்த பிரச்சினையை தீர்க்கும் வழி தெரிந்துவிடும். நம்மிடமே ஒருவர் வருகின்றால் என்றால் அவர் அந்த நேரத்தில் பிரச்சினையில் இருந்தால் கோவிலுக்கு செல்லுங்கள் என்று தான் முதலில் சொல்லுவோம். கோவிலுக்கு சென்ற பிறகு அதன்பிறகு தான் நாங்கள் வேலை செய்ய ஆரம்பிப்போம்.

எல்லா வழியிலும் ஒருவர் மிக சரியாக இருக்கும்பொழுது தான் நாம் செய்யும் வேலைகள் எளிதில் அவருக்கு கிடைக்கும். பீடையை அதிகமாக வைத்திருக்கும் நபர்களுக்கு ஆன்மீகம் உடனே வேலை செய்வதில்லை. நீங்கள் உங்களின் குழந்தையை வளர்க்கும்பொழுதே நீங்கள் கோவிலுக்கு அழைத்துக்கொண்டு சென்று காட்டிக்கொடுங்கள். இப்படிப்பட்ட கோவிலுக்கு எல்லாம் நீங்கள் சென்றால் உங்களின் எந்த வித பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று சொல்லிவிட்டால் அவர்களுக்கு பிற்காலத்தில் அது உதவும்.

பல குடும்பங்களில் நான் பார்த்த விசயத்தை தான் உங்களிடம் பகிர்ந்துக்கொள்கிறேன். பல குடும்பத்தில் கோவிலுக்கு செல்வது என்பது பிடிக்காத ஒரு வேலையாக இருக்கின்றது. அவர்களிடம் நாம் என்ன தான் சொன்னாலும் நடக்கபோவதில்லை. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 14, 2020

காதல் திருமணம்


வணக்கம்!
          எப்பேர்பட்ட சூழ்நிலையும் தாங்கிக்கொள்ளலாம் ஆனால் ஒரு வீட்டில் தன்னுடைய பெற்றோர்களின் அனுமதி இன்றி தான் வளர்த்த பிள்ளைகள் தங்களின் அனுமதி இன்றி திருமணம் செய்துக்கொள்ளும்பொழுது அவர்களின் பெற்றோர்கள் படும்பாடு மிக கொடியதாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையை எந்த ஒரு பெற்றோர்களும் தாங்கிக்கொள்ளமுடியாது.

இன்றைய காலத்தில் காதல் திருமணம் சகஷம் என்றாலும் அது பெற்றோர்களின் அனுமதியின்றி நடைபெறும்பொழுது அது கண்டிப்பாக பாதிப்பை ஏற்படுத்தும். இன்றைய காலத்தில் படித்தவர்கள் இதனை எல்லாம் ஏற்றுக்கொள்வார்கள். இது ஒன்றும் பெரியது இல்லை என்று கூறப்பட்டாலும் அந்த நிலை வரும்பொழுது ஒவ்வொருவரும் மனதிற்க்குள் கஷ்டபடுகின்றனர். இதனை ஒரு சிலர் தாங்கள் வளர்த்த பிள்ளை என்பதால் காட்டிக்கொள்வதில்லை.

நாம் நிறைய இடத்தில் சோதிடம் பார்க்கும்பொழுது அவர்களின் வாரிசுகளின் ஜாதகத்தில் இராகு கேது களத்திர ஸ்தானத்தில் சம்பந்தப்படும்பொழுது அவர்களுக்கு பிள்ளைகள் திருமணம் காதல் திருமணமாக இருக்ககூடும் என்று சொல்லி எச்சரிக்கை விடுப்பது உண்டு. ஒரு சிலருக்கு இராகு தசா நடைபெறும்பொழுது இந்த மாதிரியான சூழ்நிலை உருவாகும் என்று சொல்லிருக்கிறோம்.

காதல் திருமணங்கள் இராகு கேது இல்லாமல் நடைபெறுவதில்லை. இராகு கேது ஒரு ஜாதகத்தில் பலம் பொருந்தி அமைந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றுவிடும். சந்திரன் செல்லும் நட்சத்திரம் இராகுவின் நட்சத்திரமாக இருந்தால் அவர்களுக்கு காதல் திருமணம் நடைபெற்றுவிடும். சந்திரன் இராகுவோடு இணையும்பொழுதும் காதல் திருமணத்திற்க்கு வாய்ப்புகள் அதிகம்.

காதல் திருமணம் நடைபெற்றுவிட்ட தம்பதிகள் நன்றாக வாழ்க்கின்றார்களா என்று கேட்கலாம். முக்கால்வாசி பேர் ஒழுங்காக வாழ்வதில்லை. ஒழுங்காக வாழ்கிறேன் என்று சொல்லும் தம்பதிகள் மிக மிக குறைவாகவே இருப்பார்கள். நான் காதல் திருமணம் செய்து இருக்கிறேன் நான் நன்றாக வாழ்கிறேன் என்று சொல்லும் தம்பதிகளாக நீங்கள் இருந்தால் உங்களை மாதிரி ஒரு ஏமாந்த ஆள் வேறு ஆள் இல்லை என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, February 13, 2020

ஆன்மீகத்தின் குரு


வணக்கம்!
          இந்த காலத்தில் பெரும்பாலும் குரு என்பவரை தேடிச்செல்வதை ஆன்மீகத்தின் நோக்கத்திற்க்காக அல்ல அவர் அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்க்கு குருவை தேடிச்செல்வதை வைத்திருக்கின்றனர். கலியுகத்தில் அப்படி தான் இருக்கும் என்றாலும் நல்லவர்களும் வீணாக போய்விடுகின்றனர் என்பதால் இதனை சொல்லுகிறேன்.

ஆன்மீகம் என்பது சொந்த தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்க்கு என்று இல்லாமல் தன்னுடைய பிறவி பயனை அடைவதற்க்கு என்று தேடும் நபர்களுக்கு கண்டிப்பாக ஆன்மீகம் கை கொடுக்கும். ஆன்மீகத்தின் துணைக்கொண்டு நம்முடைய வாழ்க்கை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் தான் அது குருவின் துணை இல்லாமல் தான் கற்ற ஆன்மீகத்தினை வைத்து நிறைவேற்றிக்கொள்ளவேண்டும்.

என்னையை உதாரணமாக எடுத்துக்கொண்டால் நான் குருவிடம் கேட்டது ஆன்மீகத்தை கற்றுக்கொடுங்கள் என்று கேட்டேன் அதன்பிறகு அதனை வைத்து என்னுடைய வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொண்டேன். சொந்த வாழ்க்கைக்கு என்னு பயன்படுத்தியது மிக மிக குறைவு என்று தான் சொல்லவேண்டும்.

உங்களிடம் என்னிடம் சொந்த தேவைக்கு கேட்க வேண்டாம் என்று சொல்லவில்லை மாறாக உங்களை நன்றாக வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை ஆன்மீக வழியில் வளர்த்துக்கொண்டால் சொந்த தேவைக்கு கேட்டதைவிட இது தான் காலம் காலமாக பிறவியோடு வரப்போகின்றது என்பது உங்களுக்கு புரியும்.

நமது அம்மன் கோவில் கட்டும் பணியை ஆரம்பிக்க இருப்பதால் உங்களின் உதவியை நாடுகிறேன். தங்களால் முடிந்த காணிக்கையை அனுப்பி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 11, 2020

சந்ததியை வாழவைக்கும் விரத முறை


வணக்கம்!
          நான் செல்லும் கோவில்கள் மற்றும் வழிபாடுகள் அனைத்தையும் பொதுவான இடத்தில் சொல்லுவதற்க்கு காரணம் அதனை நீங்களும் பின்பற்றி வரவேண்டும் என்பதால் இதனை சொல்லுகிறேன். ஒரு ஆன்மீகவாதி தன்னோடு கட்டுபாட்டில் தன்னை நாடி வருபவர்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்று தான் நினைப்பார்கள் அதற்கு மாறாக நான் அதனை செய்வதில்லை. ஏன் என்றால் நம்மை மீறி பல விசயங்கள் இருக்கின்றன இதனை அனைவரும் பயன்படுத்தவேண்டும் என்பதால் இதனை வெளியில் சொல்லி செய்ய வைக்கிறேன்.

உங்களைப்பற்றி கவலை என்பதை விட உங்களின் சந்ததி அதிகம் தழைத்து வாழ்வதற்க்கு என்ன செய்யவேண்டுமே அதனை செய்துக்கொடுத்துவிடவேண்டும். நீங்கள் மட்டும் என்றால் உங்களை நமது அம்மன் சக்தியால் காப்பாற்றிவிடலாம். நம்முடைய நோக்கம் உங்களின் தலைமுறை நன்றாக வாழவேண்டும் அதற்கு என்ன செய்யவேண்டுமாே அதனை செய்கிறேன்.

நீங்கள் மாதத்திற்க்கு ஒரு முறை அல்லது விஷேசமான நாட்களில் விரதம் இருந்து அந்த விரதத்தை கடைபிடித்தால் அது உங்களின் சந்ததியினரை தழைத்து ஓங்க செய்யும். உங்களின் வாரிசுகள் மிக பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள்.

நான் ஒரு சில காலக்கட்டத்தில் எல்லாம் விரதம் இருப்பது ஒழுங்காக ஒரு வழிபாடு செய்வது எல்லாம் பிடிக்காது ஏனோ தானோ என்று செய்துக்கொண்டு இருந்தேன். குரு வந்த பிறகு வழிபாடுகளில் சிறப்பு கவனம் செலுத்தினாலும் விரத முறையில் கவனம் இல்லாமல் இருந்தது. ஒரு சில சம்பங்களுக்கு பிறகு விரதமுறைகளிலும் நல்ல முறையில் கவனம் செலுத்தி வருகிறேன். இதனை நீங்களும் செய்தால் உங்களுக்கும் நல்லது.

உங்களுக்கு பிடித்த எந்த கடவுளாக இருந்தாலும் சரி ஏதோ ஒரு சிறப்பான நாளாக இருந்தாலும் சரி அதற்க்காக சிறப்பான வழிபாடு மற்றும் விரதத்தை கடைபிடிங்கள். உங்களுக்கு சிறப்பான ஒரு வாழ்க்கையும் மற்றும் உங்களின் வாரிசுகளுக்கு ஒரு சிறப்பான ஒரு வாழ்க்கையும் கொடுக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

விரைவில் வீடியோ பதிவுகள் வர இருக்கின்றன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 9, 2020

பழனி முருகன் தரிசனம்


வணக்கம்!
          நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் பல விசயங்கள் நம் கையில் இல்லை அப்படி தான் பல விசயங்கள் நடக்கும். கடந்த முறை பழனி பாதயாத்திரை சென்றேன் இந்த முறை பழனி பாதயாத்திரை செல்வதற்க்கு சூழ்நிலை ஒத்துழைக்கவில்லை. தை பூசம் முதல் நாள் ஒரு நண்பரிடம் சொல்லிருந்தேன் நாளை பழனி சென்றாலும் செல்வேன் என்று மட்டும் சொல்லிருந்தேன்.

காலையில் பூஜையை முடித்துவிட்டு அதன்பிறகு காலையில் எட்டு மணிக்கு முடிவு செய்து பழனி கண்டிப்பாக சென்று தரிசனம் செய்துவிடவேண்டும் என்று முடிவு செய்து கிளம்பிவிட்டேன். மாலை பழனி நான்கு மணிக்கு சென்றடைந்தேன் அதன்பிறகு ஐந்து மணிக்கு மலை ஏற ஆரம்பித்தேன். இருநூறு கட்டண தரிசனத்தில் சென்று காத்திருந்தேன்.

வரிசையில் இருந்துக்கொண்டு ஒரு வீடியோ பதிவை எடுத்து நமது நண்பர்களின் வாட்ஸஅப்பில் அனுப்பிருந்தேன். மாலை ஆறு இருபதுக்கு இராஜ அலங்காரத்தில் முருகனின் தரிசனம் கிடைத்தது. எப்படியோ நாம் இழுத்துக்கொண்டு ஒரு சக்தி கிளம்பி தரிசனம் செய்ய வைத்தது என்பது தான் உண்மை.

நமது நண்பர்களின் குடும்பத்திற்க்காவும் பிராத்தனையை வைத்தேன். நம்மை நம்பி இருக்கும் அனைத்து குடும்பத்தின் உறுப்பினர்களுக்காவும் நான் சென்று இதனை செய்தேன் என்று சொல்லவேண்டும். நமது ஜாதககதம்பதின் குடும்பங்களின் நபர்கள் வேலை பளுவில் இருப்பார்கள் அவர்களின் சார்பாக நான் வந்திருக்கிறேன். அனைத்து குடும்பங்களும் நன்றாக வாழவேண்டும் என்று பிராத்தனை செய்தேன்.

நான் கடந்த ஒரு வாரமாக தைபூசத்திற்க்காக விரதம் மேற்க்கொண்டு இருந்தேன். எப்பொழுதும் நம்முடைய வாழ்க்கையில் ஒரு சில கடமைகளை செய்யவேண்டும் அந்த கடமையில் இதுவும் ஒன்று. நல்ல திருப்திகரமாக இருந்தது என்று தான் சாெல்லவேண்டும். முருகனை தரிசனம் செய்தபிறகு தான் அந்த திருப்தி எனக்கு கிடைத்தது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, February 7, 2020

தைபூசம் சிறப்பு பூஜை


வணக்கம்!
          நாளை தைபூசம் என்பதால் ஏற்கனவே தங்களிடம் அன்னதானம் செய்ய சொல்லிருந்தேன். பலர் செய்வதாக சொல்லிருந்தீர்கள் அதனை நீங்கள் மறவாமல் செய்யுங்கள். ஜாதக கதம்பத்தின் வழியாக தைபூசம் சிறப்பு பூஜை செய்ய இருக்கிறோம் இதற்கு தாங்கள் கலந்துக்கொள்ள வேண்டுமானால் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை என்னுடைய வாட்ஸ்அப் எண்ணிற்க்கு அனுப்பி வையுங்கள்.

தங்களால்  முடிந்த கட்டணத்தை அனுப்பி வைக்கலாம். பணம் அனுப்பமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை தங்களின் பெயர் மற்றம் நட்சத்திரத்தை அனுப்பி வைக்கலாம் அவர்களுக்காகவும் இதனை செய்ய இருக்கிறோம். கட்டணம் அனுப்ப முடிந்தவர் அனுப்பி வையுங்கள் முடியாதவர்கள் பரவாயில்லை. வாட்ஸ் அப் எண் 9551155800.

ஒவ்வொரு வருடமும் தை பூசம் அன்று ஏதாவது ஒரு விஷேசத்தை நாம் செய்வோம். கடந்த முறை பாத யாத்திரை சென்றோம் இந்த முறை செல்லமுடியவில்லை இருந்தாலும் அதற்கு தகுந்தார் போல் ஏதோ ஒன்று செய்து தங்களின் வேண்டுகோளை முருகனிடம் வைப்பாேம். கடந்தமுறை போல இந்த முறையும் நல்லதாகவே உங்களுக்கு முருகனின் அருள் கிடைக்க வழி செய்வோம்.

கடந்த ஒரு வாரமாக விரதமுறையை அனுசரித்து வருகிறேன். இதுவரை நீங்கள் விரதமுறையை பின்பற்றவில்லை என்றாலும் நாளை மட்டும் முருகனுக்காக விரதம் இருக்கலாம். முருகனுக்காக எதனை செய்தாலும் முதலில் கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் ஆனால் அதன் பலன் நல்ல பலனை உங்களுக்கு கொடுத்துவிடும் அதனால் எந்த கஷ்டம் வந்தாலும் இதில் இருந்து மறவாமல் இருப்பேன் என்று இருங்கள். உங்களுக்கு நல்லது நடக்கும்.

உங்களுக்கு அருகில் இருக்கும் முருகன் கோவிலில் தங்களின் முடிந்த விதத்தில் ஏதோ ஒன்று நடப்பது போல செய்யலாம். அபிஷேகத்திற்க்கு உதவுவது அல்லது அன்னதானத்திற்க்கு உதவுவது என்று ஏதோ ஒன்றை செய்யுங்கள். எதுவும் செய்யமுடியவில்லை என்றாலும் பரவாயில்லை தங்களின் உடல் உழைப்பையாவது முருகனுக்கு கொடுக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, February 5, 2020

வாழ்க்கையின் இலக்கு


வணக்கம்!
          ஒவ்வொருவரும் நிறைய போராடி ஒரு இடத்தை தக்க வைப்பார்கள். ஒரு இடத்தை தக்க வைப்பதற்க்கு அவர்களின் போராட்டம் மிக கடுமையாக இருக்கும். ஒருவர் போராடி ஒரு இடத்தை தக்க வைக்க முடியவில்லை என்றால் அவர்களின் போராட்டம் தவறாக இருக்காது மாறாக அவர்களின் இலக்கு தவறாக இருக்கும். இந்த இலக்கிற்க்கும் அவர்களின் ஜாதகத்திற்க்கும் நிறைய தொடர்பு இருக்கும்.

ஒருவர் ஒரு இலக்கை தேர்ந்தெடுத்தால் முதலில் ஜாதகத்தில் அந்த இலக்கு இருக்கின்றதா என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளவேண்டும். அந்த இலக்கு ஜாதகத்தில் இல்லை என்றால் அவரால் அந்த இலக்கை தேர்ந்தெடுத்து வெற்றி பெறமுடியாமல் சென்றுவிடுகின்றது. ஒருவரின் ஜாதகத்தில் இதற்க்காக இவர் தோல்வி பெற்று போவார் என்றால் அதில் ஈடுபட்டு அவர் வாழ்க்கையின் காலத்தை இழக்க வேண்டியதில்லை.

முக்கியமாக மறைவுஸ்தானத்திற்க்கு செல்லும் கிரகத்தின் காரத்துவத்தை எடுத்துக்கொண்டு செயல்படும்பொழுது அவர் அதற்க்காக நிறைய போராட்டம் இருக்கும். அதே நேரத்தில் அவர் வெற்றி பெறுவதும் தோல்வி பெறுவதும் அவர்க்கு நடைபெறும் தசா முடிவு செய்யும்.

ஒரு இலக்கை தீர்மானிக்கும்பொழுது அவர் வெற்றி பெறுவாரா அல்லது இடையில் தோற்றுபோவாரா என்பதையும் தெரிந்துக்கொள்ளவேண்டும். ஒரு இலக்கை நோக்கி செல்லும்பொழுது அந்த இலக்கில் இருக்கும்பொழுது மற்றவர்களின் குறுக்கீடுகளால் வீணாக போவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது அல்லவா அதனையும் நாம் தெரிந்துக்கொண்டு செயல்படவேண்டும். 

ஒருவருக்கு இடையில் குறிக்கீடும் கிரகங்கள் அதிகபட்சம் கோச்சாரப்பலன்கள் அவர்களுக்கு பிரச்சினையை கொடுத்துவிடுகின்றது. கோச்சாரபலன்களால் ஏதோ ஒரு குறிக்கீடு வந்து நின்றுவிடுவதும் உண்டு. ஒரு சிலருக்கு ஒரு சில புத்திகள் பிரச்சினையை கொடுத்துவிடுகின்றது. இதனையும் நன்கு தெரிந்துக்கொண்டு செயல்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை எதில் வருகின்றது என்பதை தெரிந்துக்கொண்டு செயல்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, February 4, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை செய்யப்படுகின்றது. விரைவில் வீடியாே பதிவுகள் வருவதால் அதனை முன்னிட்டு இன்றே அம்மன் பூஜையை வைத்துவிட்டேன். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள். 
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள். 
காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 

சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள். 
கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள். 
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள். 

கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள். 
பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள். 
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள். 

மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள். 
மதுரையை சேர்ந்த திரு முருகன் அவர்கள். 

வழக்கம்போல்                           
திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

அம்மன் பூஜை நடைபெறுவதால் உங்களின் வேண்டுதல்களை வைக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, February 3, 2020

ஏழரைச்சனி


வணக்கம்!
          ஏழரைச்சனி நடைபெறும் ஆட்களின் கண்களை பார்த்தாலே தெரிந்துக்கொள்ளலாம். இவர்களுக்கு ஏழரைச்சனி நடந்துக்கொண்டு இருக்கின்றது என்று சொல்லிவிடலாம். ஏழரைச்சனி கண்களுக்கு அதிக பாதிப்பை கொடுக்கும். ஏழரைச்சனியின் காலத்தில் கண்களுக்கு ஆப்ரேஷன் செய்யகூடிய ஒரு நிலை உருவாகும். ஏழரைச்சனியின் காலத்தில் அதுவும் இரண்டாவது சுற்றில் இது கண்டிப்பாக நடக்கும் என்று சொல்லலாம்.

ஏழரைச்சனியின் காலத்தில் ஒருவரின் கண்களை பார்த்தே தெரிந்துக்கொள்ளமுடியும். ஏழரைச்சனியின் காலத்தில் கண்களை சுற்றி கருவளையம் போல ஒன்று உருவாகும். இவர்களுக்கு எல்லாம் ஏழரைச்சனி நடக்கின்றது என்று நாம் தெரிந்துக்கொள்ளலாம். காலும் கண்களும் தான் அதிகமாக ஏழரைச்சனியின் காலத்தில் பாதிப்படைகின்றது.

ஒரு சிலருக்கு கால் முறிவு ஏற்படுகின்றது. ஒரு சிலருக்கு கண்களில் பிரச்சினை என்பது வருகின்றது. மிக குறைந்தபட்சமாக கைகளை உடையும். இதனை தவிர மற்ற உறுப்புகள் பாதிப்படைவது குறைவாகவே இருக்கும். என்ன பயமுறுத்துகிறேன் என்று நினைக்கின்றீர்களா இல்லைவே இல்லை இது ஒரு எச்சரிக்கை பதிவாக எடுத்துக்கொள்ளலாம்.

ஏழரைச்சனியின் காலத்தில் பெரும்பாலும் உடல்ரீதியான பிரச்சினை மட்டும் இன்றி மனரீதியாக அதிக பாதிப்பை உருவாக்கும் நிகழ்ச்சியும் இருக்கும். மனரீதியாக என்றால் உங்களின் கணவன் அல்லது மனைவி இவர்களுக்கும் உங்களுக்கும் அதிகபடியான பிரச்சினை உருவாகிவிடுகின்றது. இதனை சரிசெய்வது என்பது நீங்கள் காக்கும் பொறுமையில் தான் இருக்கின்றது.

பொறுமையை அதிகபடியாக சோதனை சந்திக்கும் காலமாகவே இது இருக்கும். உங்களை உங்களின் துணை அடித்தாலும் கோவப்படாமல் இருந்தால் இது தான் நல்ல பரிகாரமாக உங்களுக்கு இருக்கும். முடிந்தவரை அனைத்திலும் கவனத்தோடு நடக்க வேண்டும் என்ற கொள்கையை வகுத்துக்கொண்டு செயல்படுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, February 2, 2020

அறிவுரை சொல்லும் ஆள்


வணக்கம்!
          ஒருவர் ஆன்மீகத்தில் சிறந்து விளங்குவதற்க்கு அவரின் குரு மிக மிக முக்கியமானவராக இருப்பார். குருவின் ஆசி நன்றாக இருக்கும்பொழுது மட்டுமே அவரால் அனைத்திலும் நின்று வெல்லமுடியும். குரு சரியில்லை என்றால் அவரால் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். நமது சோதிடத்தில் பாக்கியஸ்தானம் மிக முக்கியம் கொடுத்து இருப்பார்கள். குருவை காட்டக்கூடிய இடமும் இந்த வீடு.

உங்களுக்கு பாக்கியஸ்தானம் கெட்டால் உங்களுக்கு வரக்கூடிய குருவும் கெட்டவராகவே தான் அமைவார். குரு என்றால் ஆன்மீகத்திற்க்கு மட்டும் இல்லை உங்களுக்கு வழக்ககூடிய எந்த அறிவுரையும் குருவாகவே அமைவார். நீங்கள் நன்றாக இருங்கள் என்று வாழ்த்தும் ஒவ்வொரு நெஞ்சமும் நல்ல குருவாகவே நீங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இன்றைய காலத்தில் அனைவரும் அறிவுரையை சொல்லுவார் ஆனால் யார் சொல்லுவதை கேட்பது என்பதில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும். அனைவர் சொல்லும் அறிவுரையும் உங்களுக்கு ஏற்றதாக இருக்காது. அப்படி என்றால் இதில் சோதிடத்தில் எப்படி தெரிந்துக்கொள்வது என்ற சந்தேகம் வரும் அதற்கும் சோதிடத்தில் வழி இருக்கின்றது.

ஒருவருக்கு ஒன்பதில் இராகு இருக்கின்றார் என்றால் பிற தேசத்தில் இருந்து வந்து உங்களுக்கு உபதேசம் செய்பவர்கள் இருப்பார்கள். நீங்கள் இந்த மாதிரியான ஆட்களை தேர்ந்தெடுத்து அவர்கள் வழங்குகூடிய அறிவுரை ஏற்றுக்கொள்ளலாம். இப்படிப்பட்டவர்கள் இல்லாமல் பிறர் சொல்லும் எந்த ஒரு அறிவுரையும் உங்களுக்கு நல்லதாக இருக்காது.

ஒருவருக்கு ஒன்பதில் சனி இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். உங்களை விட வசதி குறைவாக உள்ளவர்கள் உங்களுக்கு அறிவுரை வழங்கினால் நல்லது. உங்களை விட தாழ்த்தப்பட்டவர்களாக அவர்கள் இருந்து அறிவுரை சொல்லுவதை கேட்டுக்கொள்ளுங்கள். பிற கிரகங்களைப்பற்றி அவ்வப்பொழுது பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, February 1, 2020

இனிய தொடக்கம்


வணக்கம்!
          பெரும்பாலும் நமது ஜாதககதம்பத்தில் சக்தியை மேம்படுத்திக்கொள்வதைப்பற்றி நிறைய பதிவுகளை கொடுத்து இருக்கிறேன். ஆன்மசக்தியை மேம்படுத்திக்கொள்ள வழியை நாம் பின்பற்றி சொல்லிவருகிறோம் அதனை எல்லாம் நீங்கள் பின்பற்றி வருகின்றீர்கள் என்பதை அறிகிறேன். பின்பற்றாதவர்களும் கண்டிப்பாக அதனை பின்பற்றி வாருங்கள்.

ஆன்மசக்தியை வளர்ப்பதற்க்கு உங்களின் காமசக்தியை முறையாக பயன்படுத்த வேண்டும். காமசக்தியை வேண்டும்பொழுது மட்டுமே பயன்படுத்தவேண்டும். எந்த நேரமும் அதனை நோக்கியே மனது இருந்தால் உங்களிடம் கண்டிப்பாக ஆன்மசக்தியை தேக்கி வைத்துக்கொள்ளமுடியாது. நீங்கள் இல்லறத்தில் இருந்தாலும் சரி இளைஞர்களாக இருந்தாலும் சரி நீங்கள் காமசக்தியை முறையாக பயன்படுத்தவேண்டும்.

உங்களிடம் இருப்பது இந்த ஒரு சக்தியை சரியாக பயன்படுத்தி உங்களின் வாழ்க்கைக்கும் அழகு சேர்க்கவேண்டும் அதோடு உங்களின் ஆன்மசக்தியையும் தக்கவைத்துக்கொள்ளமுடியும். இதனை முறையாக பயன்படுத்தவில்லை என்றால் உங்களின் வாழ்க்கை வீணாக போய்விடும்.

உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரகத்திற்க்கும் இதற்க்கும் நிறைய சம்பந்தம் இருக்கின்றது. மோசமான கிரக நிலைகள் இருந்தால் எந்த நேரமும் அந்த நினைப்போடு இருக்கவைக்கும். பெரும்பாலும் இராகு செவ்வாய் சனி இப்படிப்பட்ட கிரகங்கள் லக்கனத்தோடு சம்பந்தம்படும்பொழுது அது உங்களுக்கு மிக அதிகமாகவே இருக்கும்.

உங்களால் முடிந்தவரை இந்த விசயத்தில் அதிக கவனம் செலுத்தி உங்களை ஒழுங்குப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளுங்கள். இதில் கவனம் செலுத்தினால் கண்டிப்பாக ஆன்மசக்தியை மேம்படுத்திக்கொள்ளமுடியும்.

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு