Followers

Tuesday, July 21, 2015

நிலம்


வணக்கம்!
          ஒரு குடும்பத்தில் அண்ணன் தம்பி இரண்டு பேர் இருந்தார்கள் என்றால் அவர்கள் சொத்து பிரிக்கும்பொழுது சமமாக பிரித்து கொடுத்துவிடுவது நல்லது.

ஒரு சில இடங்களில் அண்ணனுக்கு அதிக நிலமும் தம்பிக்கு குறைவான நிலமும் கொடுப்பார்கள். ஒரு சிலர் யாரவது ஒருவர் மட்டும் நிலத்தை எடுத்துக்கொண்டு பிறரை ஏமாற்றிவிடுவதும் உண்டு.

இதில் யார் அநீதியாக செயல்படுகின்றார்களோ அவர்களின் குடும்பங்கள் சிறப்பாக வாழ்வதில்லை. சொத்தை அதிகம் எடுத்துக்கொள்பவர்களின் குடும்பத்தில் உள்ள வாரிசுகளும் நன்றாக வாழ்வதில்லை. இதனால் ஏற்படும் பிரச்சினை தான் செவ்வாய் தோஷம் என்று சொல்லுகிறார்கள்.

சொத்தை குறைவாக பெற்ற குடும்பத்தில் உள்ள நபர்களின் வாரிசுகள் பல மடங்கு சொத்தை வாங்குகிறார்கள். சொத்தை அதிகம் பெற்ற வாரிசுகள் சொத்தை விற்றுவிடுகிறார்கள்.

உங்களின் குடும்பத்தில் சொத்தை பிரிக்கும் செயல் நடைபெற்றால் சரிசமமாக பிரித்துக்கொடுங்கள். அடுத்தவர்களின் சொத்தை வாங்கி வைத்திருந்தாலும் உடனே அதனை சம்பந்தப்பட்டவர்களிடம் சொத்தை கொடுத்துவிடுங்கள். உங்களின் வாரிசுகளுக்கு நல்லதை செய்துவிட்டு செல்லுங்கள்.

சென்னை நண்பர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும். உங்களை விரைவில் சந்திக்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: