Followers

Monday, April 6, 2020

பரிகாரம் இல்லாத பாவம்


வணக்கம்!
                 ஒருவரின் வாழ்க்கையில் அவர் செய்த பாவத்தில் முதன்மையான பாவம் மற்றும் பரிகாரம் இல்லாத பாவமாக பார்க்கப்படுவது அவர் செய்த கருக்கலைப்பு மட்டுமே இருக்கும். பல குடும்பங்களில் வளர்ச்சி இல்லாத ஒரு நிலை எல்லாம் இருந்தும் நாம் ஏன் இன்னமும் முன்னேற்றம் இல்லாத ஒரு நிலையில் இருக்கின்றோம் என்று தேடவைப்பது குடும்பத்தில் வாரிசு வளர்ச்சி இல்லாமல் இருப்பது அனைத்திற்க்கும் காரணமாக இருப்பது அவர் செய்த இந்த கருக்கலைப்பு என்ற பாவமாகவே இருக்கும்.

கருக்கலைப்பு என்பது தெரிந்து செய்து இருக்கலாம் அல்லது இது பாவம் என்று தெரியாமல் செய்து இருக்கலாம் அது எப்படி இருந்தாலும் அந்த பாவத்தை செய்தால் அதற்க்கு நாம் பரிகாரம் தேடமுடியாது. அதற்க்காக நாம் செய்ய வேண்டியது நம்முடைய வாரிசுகளுக்கு இது தவறான ஒரு செயல் என்பதை தெரியப்படுத்துவது மட்டுமே இதற்க்கு தீர்வாக அமையும்.

உங்களுக்குடைய வாரிசுகளுக்கு இது தெரியவந்தால் அவர் இந்த தவறை செய்ய மாட்டார்கள். அவர்கள் இந்த தவறை செய்ய வேண்டும் என்று நினைக்கும்பொழுது அவர்களுக்கு நீங்கள் சொன்ன இந்த அறிவுரை அவர்களுக்கு ஞாபகம் வந்து அவர்களின் தவறை செய்யவிடாமல் தடுக்கும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவு தந்திருக்கிறேன் அதனை பாருங்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: