Followers

Saturday, January 30, 2021

ஆன்மீகவாதி



 வணக்கம்!

         எப்பேர்பட்ட கஷ்ட காலத்திலும் ஆன்மீகவாதியாக இருக்கும் நபர்கள் அந்த கஷ்ட காலத்தில் இருந்து தப்பிக்க ஒரு வழியை இறைவன் ஏற்படுத்திக்கொடுப்பார். ஆன்மீகவாதியாக இல்லாத நபர்கள் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டுவிடுவார்கள். ஆன்மீகவாதியாக இருப்பவர்களுக்கு அதிக கஷ்டம் வரும் என்று சொல்லுவது உண்டு ஆனால் அந்த கஷ்டத்தை கொடுத்து அதில் இருநது பல அனுபவங்களை கொடுப்பதற்க்கு தான் அந்த கஷ்டமே வருகின்றது.

ஆன்மீகவாதியாக இருந்தால் ஒரு பெரிய கஷ்டம் வரும்பொழுதே அதற்க்கு தீர்வாக ஒன்றை அனுப்பிவைக்கும். உதாரணமாக ஆன்மீகவாதிக்கு  ஏழரைச்சனி ஆரம்பித்தால் அந்த நபர்க்கு ஆஞ்சநேயருக்குரிய மந்திரத்தை ஜெபிக்க வைக்கும் ஆஞ்சநேயரை வழிபடவைக்கும். ஒரு சிலருக்கு பைரவரை வழிபடவைக்கும். ஒரு பிரச்சினை வருகின்றது என்பதை அறிந்து அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்ற வழியையும் கொடுத்துவிடும்.

ஆன்மீகவாதியாக இருப்பதில் என்பதை விட ஆன்மீகத்தை கடைசி வரை கொண்டு செல்ல என்ன வழி என்பதையும் நாம் அறிந்துக்கொண்டு இருக்கவேண்டும். ஒரு சிலர் இடையில் விட்டுவிடுவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு சிலரின் கர்மா அப்படி இருக்கலாம் ஆனால் தன்னுடைய மன உறுதி வழியாக எந்த சூழ்நிலையிலும் அதனை விட்டுவிட கூடாது இதில் மட்டும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

ஒருவர் கடைசி வரை ஆன்மீகத்தை தன்னோடு இணைத்துக்கொண்டு இருந்தால் மட்டுமே அவர் இந்த ஜென்மம் எடுத்தற்க்குரிய நோக்கம் நிறைவேறும். ஆன்மீகத்தில் எந்தளவுக்கு இருப்பதை பொறுத்து அது மோட்சமாக இருக்கலாம் அல்லது மறுஜென்மம் எடுக்கலாம்.

அம்மன் பூஜை முடிந்த பிறகு கோயம்புத்தூர் வர இருக்கின்றேன்.  கோயம்புத்தூர் பகுதியில் சந்திக்க விருப்பம் இருக்கும் நபர்கள் தொடர்புக்கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புக்கு 9551155800,8940773309

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: