Followers

Tuesday, May 8, 2012

திருமண வாழ்க்கை 1



திருமண வாழ்க்கை என்ற பதிவு எழுதியிருந்தேன் அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு இடையில் சுக்கிரனின் கோச்சார பலன்களை பார்த்துவிட்டோம் பரவாயில்லை அவரும் களத்திரகாரகன் என அழைக்கப்படுபவர் தானே இப்பதிவில் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும் நிலை என்ன என்று பார்த்துவிடலாம்.

மனிதனின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு ஜாதகத்தில் அனைத்து வீடுகளும் சேர்ந்து வேலை செய்தால் தான் ஒரு நிகழ்வு நடைபெறும் அதைபோலதான் திருமணமும். நாம் களத்திர இடத்தில் கெட்ட கிரகம் உள்ளது என்று அதற்கு பரிகாரம் செய்துகொண்டு இருப்போம் ஆனால் உண்மையில் தடை ஏற்படுத்தும் கிரகம் வேறு ஒரு வீட்டில் உக்கார்ந்து கொண்டு செய்யும் அதனால் ஒரு ஜாதகத்தை முழுமையாக ஆராய்ந்து பிறகு திருமண ஏற்பாட்டிற்க்கு செல்வது உத்தமம். பொருத்தம் பார்ப்பதை விட அவர் அவர்களின் ஜாதகத்தை அலசி ஆராய்வது நன்மை பயக்கும்.

முதலில் களத்திர வீடான ஏழாம் வீட்டைப்பற்றி பார்த்துவிடலாம். ஏழாம் வீட்டில் தீய கிரகம் அமர்ந்து திருமணம் இளம்வயதில் நடைபெற்றால் திருமண வாழ்க்கை பிரச்சினை சந்திக்கும். திருமண வாழ்க்கைப் பற்றி முடிவு எடுக்க வேண்டியது முப்பது வயதிற்க்கு மேல் இருக்கலாம். திருமண வாழ்க்கை இளம்வயதில் ஆரம்பித்தால் அந்த திருமணவாழ்க்கை பிரிவு ஏற்படும்.

ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கடுமையான செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தும். இருவரும் சண்டை சச்சரவு இருக்கும். செவ்வாய் தோஷம் உள்ள நபரை திருமண துணைவராக திருமணம் செய்தால் நன்மை பயக்கும். ஏழில் உள்ள செவ்வாய் அதிகபடியான காமத்தை தருவார்.  அதிக காமத்தை திருப்தி படுத்துவராக துணைவர் அமையவேண்டும்.

ஏழில் சனி இருந்தால் திருமண வாழ்க்கை தள்ளிபோகும். திருமண பேச்சு முப்பது வயதுக்கு மேல் தான் ஆரம்பிக்கும். வரும் துணைவர் அழகாக இருக்கமாட்டார். வயது மூத்தவர் போல் தெரியும். நான் பார்த்தவரை ஏழில் சனி இருப்பவர்கள் பிரச்சினையை சந்திப்பது அவர்களுக்கு ஏழரை சனி, அஷ்டமசனி நடக்கும் நேரத்தில் தான் பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

ஏழில் ராகு அல்லது கேது இருந்தால் மனதில் தீய எண்ணம் ஏற்பட்டு பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அதனால் பிரிவும் ஏற்படுகிறது. இது திருமணத்திற்க்கு முன்பு தான் பல தடைகளை ஏற்படுத்துகிறது. இதை நம்ம ஆட்கள் முடிந்தவரை கோயில் சென்று பரிகாரம் செய்து திருமணத்தை நடத்திவிடுகிறார்கள்.

ஏழில் தீயகிரகம் மட்டும் தீங்குசெய்வதில்லை நல்ல கிரகங்கள் அமர்ந்தாலும் பிரச்சினை ஏற்படுத்தும். பெண்களுக்கு எட்டாம் வீடு மிக மிக முக்கியம் அந்த இடத்தில் எந்த கிரகமும் அமர்ந்தாலும் பிரச்சினை தான். நான் பார்த்த விதவை ஜாதகங்களில் எட்டாம் வீட்டில் சந்திரன் அமர்ந்தால் அந்த பெண் விதவை ஆகிவிடுகிறாள். நீங்களே இதை சோதனை செய்யலாம். நீங்கள் திருமண ஏற்பாட்டாளர்களின் வெப்சைட்டில் தேடி பார்த்தீர்கள் என்றால் இந்த உண்மை தெரியவரும்.

ஏழாம் வீட்டை வைத்து திருமண பிரச்சினையை பார்த்தோம். அடுத்தபடியாக லக்கினத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். லக்கினத்தில் கிரகங்கள் அமர்ந்துக்கொண்டு ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள் வைக்கும் ஆப்பு இருக்கிறதே இது எல்லாத்தையும் விட கொடுமை இந்த மனிதனை திருமண வாழ்க்கையில் ஏன் தான் கடவுள் இந்த அடி அடிக்கிறாறோ தெரியவில்லை. 
பொதுவாக லக்கினத்தில் தீயகிரகங்கள் அமர்ந்தால் தான் திருமண வாழ்க்கையில் பிரச்சினை அதிகம் ஏற்படுகின்றது.

திருமண வாழ்க்கைப்பற்றி பதிவு தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: