Followers

Sunday, July 12, 2015

உங்களின் வேண்டுதல்


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை. மாலை நேரத்தில் பூஜை செய்யப்படும். அதற்க்கான வேலை நடந்துக்கொண்டு இருக்கின்றது. அந்த வேலைக்கும் நடுவே உங்களுக்கு ஒரு பதிவை கொடுத்துவிடுகிறேன்.

அம்மன் பூஜை நாளான இன்று மாலை நேரத்தில் அம்மனிடம் நீங்கள் வேண்டுதல் வைக்க உகந்த நேரமாக இருக்கும். அதே நேரத்தில் நியாயமான வேண்டுதலாக இருந்தால் அதனை கண்டிப்பாக நடத்திக்கொடுத்துவிடும்.

நியாயமான வேண்டுதல் என்றால் வேண்டுதல் வைத்த விசயம் அதற்கு வழி இருக்கின்றது ஆனால் நடைபெற தடை ஏற்படுகிறது என்றால் வேண்டுதல் வைத்த உடனே நடைபெற்றுவிடும்.வேண்டுதல் வைத்த விசயத்திற்க்கு வழியே இல்லை என்றால் காலம் தாழ்த்தி நடைபெறும். எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நடைபெறும். காலம் மட்டும் வித்தியசப்படலாம்.

அனைவருக்கும் வீடு அமைய வேண்டும் என்று ஒரு சிறப்பு பிராத்தனையும் இன்று நான் அம்மனிடம் வைக்கிறேன். உங்களின் வேண்டுதலில் வீடு அமையவேண்டும் என்பதையும் வையுங்கள்.

நிறைய நண்பர்கள் அவர்களின் பிரச்சினையை எனக்கு சொல்லி இதற்கு வேண்டுதல் நீங்களும் வையுங்கள் என்று சொல்லியுள்ளனர். அவர்களுக்கும் மற்றும் அனைவரின் பிரச்சினையும் தீரவேண்டும் என்று வேண்டுதல் வைக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Kalyaanam nadkkanumnu vendikkunga pasangalaa'