Followers

Wednesday, July 22, 2015

கேள்வி & பதில்


Spalaniappan Palaniappan said...
அய்யா உங்கள் பதிவில் பல நல்ல விசயங்களை சொல்லி வருகீறீர்கள் . அதே சமயம் செல்வ வளம் பெருக நீங்கள் சொல்லியிருக்கிற விஷயம் நம்பும் படியாக இல்லை .
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடர்கதை தான் ....

எந்த மனிதனும் 2 மணி நேரம் உச்ச நிலையில் இருக்க இயலாது . உடலுறவுக்கு பின்பு தூக்கம் வருவது இயல்பு . காரணம் உடல் சோர்வு & மனம் விரும்பியதை அடைந்து விட்டதாலும் மனமும் சோந்து விடுகிறது.

இப்படி பல செய்திகளை சொல்லி கொண்டே போகலாம் . 

உடலும் மனமும் ஒன்று பட்டு இணைந்தால் மட்டுமே உடல் உறவு .இந்த விசயத்தில் மந்திரம் சிறப்பை தரும் என்பது நம்புவதற்கில்லை.

பதில்

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளிக்க புதிய பிளாக் ஒன்று தொடங்கலாம் என்று இருக்கிறேன். இந்த மாதிரி பதிவுகளை பொதுவில் எழுதி அதனை புரிய வைக்க போதும் போதும் என்றாகிவிடும். 

ஒரு சில விசயங்களை பொதுவில் வைப்பது சிரமமாகவும் இருக்கின்றது. பொதுவாக நமது பதிவில் இருக்கும் கருத்துக்கள் அனைத்தும் உள்வாங்கி அதனை சோதனை செய்து பார்த்த பிறகு தான் உங்களுக்கு புரிய வரும்.

இதுவரை இதற்கு என்னிடம் மூன்று நபர்கள் பணம் கட்டுகிறேன் என்று சொல்லியுள்ளார்கள். இவர்கள் அனைவரும் பல வருடங்கள் என்னோடு பழக்கத்தில் இருப்பவர்கள். இவர்களோடு பத்து பேர் எப்படியும் ஆன்மீகத்திற்க்காக என்னை நாடிவருபவர்கள். இவர்களிடம் பகிர்ந்துக்கொண்டுள்ள விசயங்கள் அனைத்தும் பொதுவில் வைத்தால் அது மிகப்பெரிய சிக்கலை கூட உருவாக்கும்.அவர்களுக்கும் மற்றும் ஆன்மீக தேடுதல் இருப்பவர்களுக்கும் ஒரு புதிய பிளாக்கை தொடங்கிறேன். அது கட்டண சேவையாக இருக்கும்.

தேடுதல் இருப்பவர்கள் அதில் வரும்பொழுது எளிதாக அவர்களுக்கு புரியும்படி இருக்கும். மற்ற அனைவருக்கும் ஜாதககதம்பத்தில் பொதுவான தகவல்களை வைக்கிறேன். அடுத்த பதிவில் அதனைப்பற்றி சொல்லிவிடுகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

spalaniappan said...

தங்கள் பதிலுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு உள்ளேன் . புதிய பிளாக் தொடங்க வாழ்த்துகிறேன் . நல்ல விசயங்கள் எழுதுங்கள் .