Followers

Monday, July 27, 2015

வீட்டிற்க்கும் அருள்


வணக்கம்!
          ஒருவருக்கு வீடு கட்டவேண்டும் என்றால் அவருக்கு அந்த யோகமும் இருக்கவேண்டும் அதே நேரத்தில் அவர்களின் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தின் அருளும் இருக்க வேண்டும்.

எந்த அருளும் இல்லாமல் இருந்தாலும் குருவின் அருள் இருந்தால் வீடு கட்டிவிடலாம். எதுவும் இல்லாமல் பணம் மட்டும் இருந்தால் போதும் வீடு கட்டிவிடலாம் என்று நினைத்தால் அது தவறு. வீடு கட்ட அனுமதி கூட அரசாங்கத்திடம் இருந்து வாங்கமுடியாது.

நாம் ஒரு வீடு கட்ட அரசாங்கத்திடம் அனுமதி கேட்டால் அரசாங்கம் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றால் அப்பொழுதே நாம் தெரிந்துக்ககொள்ளலாம் நமக்கு எந்த அருளும் இல்லை. நாம் இனி நல்ல அருளை பெற்றுக்கொண்டு வீடு கட்ட ஆரம்பிக்கவேண்டும் என்று அதனை தேடி செல்லலாம்.


நமது புதிய பிளாக்கை தொடங்குவதற்க்கான வேலை எல்லாம் நடந்துக்கொண்டு இருக்கின்றது. நல்ல நாளாக பார்த்து அதனை ஆரம்பித்துவிடுவோம். 

பல தரப்பட்ட நண்பர்களிடம் எதிர்ப்பும் ஆதரவும் வந்தது. பொதுவாக இதனை தொடங்குவதற்க்கு காரணம் பல வருடங்களாக என்னை தொடர்ந்து ஆன்மீகத்திற்க்கு என்று வந்த நண்பர்கள் தொடர்ந்து என்னை வந்து சந்தித்துக்கொண்டே இருப்பார்கள். சந்திப்பு நேரத்தில் மட்டும் அவர்களுக்கு பல அனுபவங்களை சொல்லிவந்தேன். அது குறைவான அனுபவங்களாக இருக்கும். இப்படிப்பட்ட ஒன்றை தொடங்கிவிட்டால் அவர்களுக்கு தினமும் அவர்களை மேம்படுத்திக்கொள்ள நல்ல வழி கிடைக்கும்.

காயத்ரி மந்திரம் செய்தவர்கள் அதுவும் என்னிடம் கேட்டு செய்தவர்கள் எல்லாம் இதில் இணைந்துக்கொண்டால் மிகவும் நல்லது. உங்களை மேம்படுத்திக்கொண்டு உங்களின் முன்னேற்றத்தையும் நீங்களாகவே மேம்படுத்தக்கொள்ளலாம்.  சரியான ஒரு ஆன்மீகப்பயிற்சி எடுக்கவேண்டும் என்றால் இதில் நீங்கள் இணைந்துக்கொள்வது நல்லது.

பணம் அதிகம் என்பது எனக்கு தெரியும் அதே நேரத்தில் அதில் நான் கொடுக்க போகிற கருத்தை நீங்கள் படிக்கும்பொழுது எனக்கு அதிக பணம் நீங்களே கொடுப்பீர்கள். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

spalaniappan said...

வீடு கட்ட மனையிடம், அதற்க்கு தேவையான பணம் இருந்தும் வீடு கட்ட முடியவில்லை . மாதா மாதம் குல தெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறேன். இன்னும் அதற்கான வழி பிறக்கவில்லை. மந்திர உச்சாடான முறைகளும் பலன் அளிப்பதாக தெரியவில்லை .

எப்படியும் நல்ல நேரம் வரும் வீடு கட்டுவோம் என்ற நம்பிக்கையில் பயணம் செய்து கொண்டிருக்கிறேன் .