Followers

Friday, July 31, 2015

இந்த நிலைக்கு யார் காரணம்?


வணக்கம்!
          தற்பொழுது நிறைய பேர் காயத்ரி மந்திரத்தை கேட்டு செய்துக்கொண்டு இருக்கின்றனர். எப்படியும் தன் நிலையை உயர்த்த வேண்டும் என்று ஆன்மீகத்தின் பக்கம் வருகின்றனர். அனைவரையும் வரவேற்கிறேன். அதோடு ஒரு கருத்தையும் சொல்லிவிடுகிறேன்.

தற்பொழுது நீங்கள் இருக்கும் நிலைக்கு காரணம் நீங்கள் தான் என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள். உங்களுடைய மனது தான் அதற்கு காரணமாக இருக்கின்றது. 

என்னை தேடி வருபவர்களுக்கு எளிதில் ஆன்மீகத்தை தெரிந்துக்கொள்ள உதவமுடியும் ஆனால் அவர்களின் மனது அதனை ஏற்றுக்கொள்வதில்லை மனதின் தந்திரம் அது. மூன்று நாள்களுக்கு செய்யவேண்டும் என்று மனது சொல்லும் அதன் பிறகு மனது அதனை மாற்றிவிட்டு வேறு ஒன்றுக்கு தாவும். மூன்று நாட்களுக்கு காயத்ரி மந்திரத்தை செய்வீர்கள் அதன் பிறகு இதில் என்ன இருக்கின்றது என்று விட்டுவிடுவீர்கள்.உங்களுக்கு எஜமானாக மனது இருந்து உங்களை கெடுக்கிறது என்பது உங்களுக்கு தெரியவே தெரியாது.

நான் குருவிடம் செல்லும்பொழுது நான் முடிவு எடுத்தது என் மனதால் தான் நான் கெட்டேன் இனி அவர் பார்த்து எதை சொன்னாலும் அதனை நாம் கேட்டு அதன் படி நடப்போம் என்று சென்றேன். அவரின் மனது படி நான் செயல்பட்டதால் அவரிடம் உள்ளது அனைத்தும் என்னிடம் வளர்க்க முடிந்தது. 

மனது எல்லாவற்றையும் சந்தேகப்படும். அதன் இயல்வு அது. மூன்று நாட்களில் எந்த முன்னேற்றம் இல்லை என்றவுடன் உடனே அடுத்த வேலையை பாரு என்று உங்களின் மனது உங்களுக்கு ஆணையிட்டு நீங்கள் ஒழுங்காக செய்கின்ற வேலையை விடவைத்துவிடும். 

பல நண்பர்கள் இதில் இருக்கின்றனர் அனைவரும் எப்படியும் சக்தியை நாம் எடுத்துவிடவேண்டும் என்று பல்வேறு போராட்டம் செய்து அதனை பெறமுயற்சிக்கின்றனர். அனைவருக்கும் சொல்லுவது உங்களின் மனது உங்களை ஏமாற்றுகிறது. உங்களின் மனதிற்க்கு அடிபணியாமல் செய்கின்ற வேலையை விடாமல் செய்யுங்கள் விரைவில் சக்தி பெற்றவர்களாக மாறிவிடுவீர்கள்.


சக்தியை எடுக்கும் எளிமையான பல வழிகளை புதிய பிளாக்கில் சொல்லபோகிறேன். பணத்தை செலுத்திவிட்டு உடனே உங்களைப்பற்றிய விபரத்தை தெரியப்படுத்துங்கள். அனைத்து பதிவுகளும் பிராடிக்கலாகவே இருக்கும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

spalaniappan said...

தாங்கள் ஒவ்வொரு பதிவிலும் தெய்வத்தை பிரசுரித்து எழுதி வருகிறீர்கள் . எல்லா தெய்வங்களும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. மகிழ்ச்சி . அந்த தெய்வ படத்திற்கு கிழே தெய்வத்தின் பெயர் & ஊர் பிரசுரம் செய்தல் நன்றாக இருக்கும் .

என் கோரிக்கை நிறைவேறும் என நினைக்கிறேன் ,

நன்றியுடன்
சோமசுந்தரம் பழனியப்பன்