Followers

Thursday, July 2, 2015

முதல் நிலை


வணக்கம்!
          காயத்ரி மந்திரத்தைப்பற்றி நேற்று எழுதியவுடன் நிறைய பேர் கருத்தை சொல்லிருந்தனர். தொடர்ந்து செய்யுங்கள். உங்களுக்கு நல்லதை இறைவன் கொடுப்பார். 

பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ளவர்கள் ஆன்மீகத்தை தேர்ந்தெடுப்பதற்க்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்த்துக்கொள்வதற்க்கும் ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்பதற்க்காகவும் இருக்கும். ஒரு சிலர் இதன் வழியாக ஏதாவது சம்பாதிக்கலாம் என்ற நினைப்போடும் இருப்பார்கள். எதுவாக இருந்தாலும் முதல் நிலையில் இருக்கும்பொழுது எல்லாம் இந்த மாதிரி எண்ணம் எதுவும் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.

முதல் படியைப்பற்றி சொல்லிருந்தேன். நீங்கள் ஆன்மீக பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது அடுத்தவர் ஒருவர் ஏதோ ஒரு பிரச்சினையில் இருக்கிறார் என்றால் உடனே அவரை காப்பாற்ற நினைக்கவேண்டாம்.

அடுத்தவர்களுக்காக நீங்கள் பிராத்தனை செய்தால் உங்களிடம் வர ஆரம்பிக்கும் சக்தி உங்களை விட்டு போய்விடும். என்னய்யா புது கதையாக ஆன்மீகத்தில் இருக்கிறதே என்று நினைக்கவேண்டாம். முதல் நிலையில் இருக்கும்பொழுது அடுத்தவர்களை காப்பாற்ற நினைத்தால் அது உங்களுக்கு பிரச்சினை வரழைப்பது போல் ஆகிவிடும்.

உங்களின் வேலை என்னவோ அதனை மட்டும் பார்த்துக்கொண்டு செல்வது நன்றாக இருக்கும். தேவையற்ற கர்மா இதன் வழியாக உங்களுக்கு வரவழைத்துக்கொள்ளவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

2 comments:

Unknown said...

ஐயா,குடும்பத்தில் உள்ள நபர்களுகாக பிராத்தனை செய்யலமா?குறிப்பாக பெற்றோர்,சகோதரர்கள்,குழந்தைகள்.

Kalairajan said...

ஐயா
,குடும்பத்தில் உள்ள நபர்களுகாக பிராத்தனை செய்யலமா?குறிப்பாக குழந்தைகள்.