Followers

Wednesday, July 8, 2015

கேள்வி & பதில்


வணக்கம்! 
          நண்பர் ஒருவர் வேண்டுதல் தன் பிள்ளைக்காக வைக்கலாமா என்று கேட்டுருந்தார். அவர் காயத்ரி மந்திரம் செய்துக்கொண்டு வருபவர் அதனால் அந்த கேள்வி அவரிடம் இருந்து வந்தது.

சக்தியை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் பிறர்க்காக வேண்டுதல் வைக்க வேண்டாம் என்று ஒரு பதிவில் சொல்லிருந்தேன். தன் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு என்று வரும்பொழுது நீங்கள் வேண்டுதல் வைக்கலாம். பொதுவாக நமது கர்மா நம்மை விடாமல் துரத்திக்கொண்டே வரும். நம்மை சோதனை செய்யவே பல தடைகளை ஏற்படுத்தும்.

நான் சக்தியை எடுக்கும்பொழுது என்னுடைய அம்மாவிற்க்கு ஒரு பிரச்சினையை கொடுத்தது ஆனால் நான் அதற்க்காக வேண்டுதல் வைக்கவில்லை. பிறகு அதுவாகவே பிரச்சினை தீர்ந்து போய்விட்டது. 

நமக்கு நிறைய சோதனை வரும் நாம் மனம் கலங்காமல் இருந்தால் அந்த சக்தியே நமது பிரச்சினையை தீர்க்கும். நான் இதுவரை எனது சொந்த பிரச்சினைக்கு என்று வேண்டுதல் வைத்தது கிடையாது. அம்மனே பார்த்து எனக்கு செய்து கொடுக்கும்.

நமக்கு என்ன வேண்டும் என்பது நமது சக்திக்கு தெரியும். அப்படி அது தெரிந்தும் கொஞ்சம் ஆட்டம் காண்பிக்கும் அதன் பிறகு அதுவே தீர்த்துவைக்கும். உங்களின் குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு மட்டும் நீங்கள் வேண்டுதல் ஒன்றை வைத்துவிடுங்கள்.

இன்று மதியம் திருப்பூர் செல்லுகிறேன். திருப்பூர் நண்பர்கள் என்னை சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Kalairajan said...

நன்றி அய்யா