Followers

Monday, August 3, 2020

இனிய தொடக்கம்


வணக்கம்!
           நீண்ட நாள்களுக்கு பிறகு ஜாதககதம்பத்தில் பதிவுகளை தருகிறேன். பதிவுகள் கொடுக்காமல் போனதற்க்கு காரணம் வீடியோ பதிவுகள் மட்டும் வருவது அல்ல நமது அம்மன் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்ட காரணத்தால் பதிவுகளை உங்களுக்கு கொடுக்கமுடியவில்லை. இனிமேல் தினமும் ஜாதககதம்பத்திலும் எழுத முயற்சி செய்கிறேன்.

கொரோனா நேரம் இது என்பதால் அனைவரும் பாதுகாப்பாேடு இருங்கள். வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது அனைவருக்கும் கொஞ்சம் தடைபட்டு இருக்கலாம் அதற்க்காக மன உளைச்சலில் ஈடுபட்டு கொண்டு இருக்காமல் இனி வரும் காலம் அனைத்தும் நல்லதாக அமையம் என்று இறைவனிடம் வேண்டுங்கள் நானும் அம்மனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

கொரோனா நேரம் என்று நான் சும்மா அமர்ந்துவிடாமல் இந்த நேரத்தில் தொடர்ச்சியாக பூஜைகளை செய்துக்கொண்டே இருக்கிறேன். எவ்வளவே இடர்பாடுகள் வந்தாலும் அதனை எல்லாம் சமாளித்து ஆன்மீகபணியை செய்துக்கொண்டே இருக்கிறேன். நீங்களும் ஆன்மீகத்தில் உள்ள வேலைகளை தொய்வில்லாமல் செய்து வாருங்கள். 

எப்படிபட்ட சோதனை காலத்திலும் நான் ஆன்மீகத்தை விடவில்லை என்ற ஒரு எண்ணம் இருந்தால் அது உங்களை வழி நடத்தி செல்லும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: