Followers

Tuesday, August 4, 2020

அம்மன் பூஜை


வணக்கம்!
          ஆடி மாதம் என்றாலே அது அம்மனுக்கு உகந்த மாதமாகவே இருக்கும். ஆடி மாதத்தில் பெரும்பாலான கோவில்கள் அனைத்திலும் திருவிழா இருக்கும். கொரோனா இருப்பதால் ஆடி மாதத்தில் களை இழந்து காணப்படுகின்றது. வரும் காலத்தில் நல்லபடியாக இந்த உலகத்திற்க்கு அமையும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்.

நமது அம்மன் கோவிலில் எந்த காரணத்திலும் நாம் அம்மன் பூஜையை நிறுத்தவில்லை. அம்மன் அருளால் அது தடையின்றி நடைபெற்று வருகின்றது. வருடந்தோறும் ஆடி மாதத்தில் ஜாதககதம்பம் படிக்கும் அனைவரையும் ஒரு சிறிய தொகையை அனுப்ப சொல்லுவோம். சந்தா பணம் போல் அனுப்ப சொல்லி அதில் வரும் பணத்தில் ஆடி மாதத்தில் நடைபெறும் அம்மன் பூஜையை சிறப்பாக செய்வது உண்டு.

ஒவ்வொரு மாதமும் ஐந்த தேதிக்குள் அம்மன் பூஜையை செய்வது உண்டு. இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் கால அவகாசம் எடுத்து இருக்கிறோம். விரைவில் அம்மன் பூஜையை நடத்த இருக்கிறோம். 

அனைவரும் அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தி வையுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் அம்மன் நல்ல அருளை தரும் என்பதால் அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: