Followers

Monday, October 5, 2020

சொத்துக்கள் வாங்கும் காலம்



 வணக்கம்!

          ஒருவர் சம்பாதித்து ஒரு சொத்தை வாங்கினால் அந்த சொத்து அதிகபட்சம் நூற்றியிருப்பது ஆண்டுகள் வரை இருக்கும் அதற்கு மேல் அந்த சொத்து அவரை விட்டு பிரிந்து வேறு ஒருவருக்கு சேர்ந்துவிடும். அதிகபட்சமாக மூன்று தலைமுறையை ஒரு சொத்து கடந்து போனாலே அது பெரிய விசயமாகவே இருக்கும்.

நிலம் சம்பந்தப்பட்ட விசயத்தில் ஒருவர் கவனம் செலுத்தி வாங்கினால் அவர் வாங்கும் நேரத்தில் நல்ல காலமாகவே அவர்க்கு இருந்தால் அந்த சொத்து பல தலைமுறை கடந்து நிற்க்கும். பெரும்பாலான நிலைக்கும் சொத்துக்கள் சனி அதிகபலத்தோடு இருந்த காலத்தில் வாங்கிய சொத்துகள் தான் நீடித்து நிலைத்து நிற்க்கும்.

நீங்கள் சொத்துக்களை வாங்கும்பொழுது உங்களின் ஜாதகத்தில் சனி நன்றாக இருக்கின்ற காலம் தானா என்று பார்த்துவிட்டு வாங்குங்கள். சொத்துக்கள் சேர்ப்பதற்க்கு செவ்வாய்கிரகம் நன்றாக இருக்க வேண்டும் என்றாலும் சனிகிரகத்தின் பலனையும் பார்த்து வாங்கவேண்டும்.

செவ்வாய் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும் ஆனால் அந்த சொத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் தான் இருக்கும் அதன் பிறகு அந்த சொத்து உங்களை விட்டு செல்வதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது அதனால் செவ்வாய் பலத்தோடு சனியின் பலத்தையும் சேர்ந்து இருக்கும் காலமாக பார்த்து வாங்கினால் நல்லது.

6-10-2020 செவ்வாய்கிழமை அன்று திருப்பூரில் என்னை சந்திக்க விருப்பம் இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்புக்கொள்ளுங்கள்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு

No comments: