Followers

Monday, May 3, 2010

ராசிகளின் பொது பலன் - 2


கடகம்

கடகத்தில் பிறந்தவர்கள் சிகப்பான கலருடனும்.அங்கலட்சணனுத்துடன் இருப்பார்கள்.கல்வி அறிவு இருக்கும். பெற்றோரை பேணி காப்பவராகவும் இருப்பார்கள். பிறரை ஏமாற்றும் குணம் இவர்களிடம் இருக்கும்.தன்னைத்தானே புகழ்ந்து கொள்வார்கள்.பிறரிடம் அன்பு கொள்வதுபோல் கொண்டு நடிப்பார்கள். பிறரை ஏமாற்றுவதால் இவர்களுக்கு இவர்கள் இருக்கும் ஊர்களில் இவர்களுக்கு மரியாதை குறைவு ஏற்படும்.தன் குழந்தையிடம் அன்புடனும் பிறர் குழந்தைகளிடம் அன்பு இருப்பதுபோல் நடித்துக்கொண்டு இருப்பார்கள். சருமம் சந்தப்பட்ட நோய்கள் வரலாம்.குறைந்த வயதில் மரணம் ஏற்படலாம்.ஒரு சிலருக்கு மட்டுமே இதுமாதிரி வரலாம்.

சிம்மம்

சிம்மத்தில் பிறந்தவர்கள் சிவந்தமேனியுடன் இருப்பார்கள்.நேர்மையுடன் நடப்பவர்களாகவும் இருப்பார்கள்.அரசாங்கத்தில் வேலை செய்பவர்களாகவும் அல்லது அரசாங்க உதவி பெறுபவராகவும் இருப்பர்.அநீதிகளை கண்டு எதிர்பார்கள்.நன்றாக சாப்பிடுவார்கள். எந்த காரியத்திலும் வெற்றி பெறனும் என்ற எண்ணங்கள் உடையவர்கள். இவர்கள் எந்த தவறுகளும் செய்யமாட்டார் அப்படி தவறு செய்தால் மாட்டிக்கொள்வார்கள். வியாதிகள் அதிகம் வராது. சிறுவியாதிகள் வரும்.அப்படி சிறுவியாதிகள் வந்தாலும் உடனே போய்விடும். இவர்கள் அதிக கோபம் வரும்.

கன்னி

கன்னியில் பிறந்தவர்கள் சுமாரான அழகு இவர்களுக்கு இருக்கும்.பிறரை ஏமாற்றி பிழைக்கும் எண்ணம் இருக்கும்.வாழ்க்கையில் இளமையில் வறுமையுடனும் பிறகு செல்வந்தர்களாகவும் இருப்பார்கள் திருமணத்திற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை அமையும்.சமுகத்தை பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பார்கள். இவர்கள் பேச்சுகளால் அடுத்தவரை மயக்குவார்கள்.இவர்களுக்கு வயிற்றுவலி.அம்மை போன்றவை ஏற்படலாம்.


No comments: