Followers

Thursday, May 6, 2010

ராசிகளின் பொது பலன் - 4


மகரம்


மகரத்தில் பிறந்தவர்கள் அனைவரும் கவரகூடிய தோற்றத்தை பெற்றிருப்பார்கள். தோற்றத்தை வைத்து அனைவரையும் கவர்ந்து விடுவார்கள்.ஓயாமல் உழைப்பார்கள்.மென்மையான உள்ளம் உடையவர்கள். பிறந்த இடத்தை விட்டு வெளி ஊர்களில் வாழ்வார்கள்.பயந்த சுவாசத்துடன் வாழ்வார்கள். இவர்களுக்கு வாயு தொந்தரவு இருக்கும்.மனைவியிடம் அளவு கடந்த அன்புடன் இருப்பார்கள்.திருமணத்தின் போது மிகவும் எச்சரிக்கையுடன் பொருத்தம் பார்த்து திருமணம் செய்யபட வேண்டும்.

கும்பம்

கும்பத்தில் பிறந்தவர்கள் உடம்பு பித்த சரீரமாக இருக்கும். சிவந்த கண்களாகவும் சிலருக்கு இருக்கும்.நண்பர்களை ஏமாற்றி பிழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். குறைந்த கல்வி அறிவு இருக்கும். செய்த நன்றியை மறப்பார்கள். ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு வாயு சம்பந்தமான வியாதிகள் வரும்.


மீனம்

மீனத்தில் பிறந்தவர்கள் அழகான பார்வை இருக்கும். கல்வி நன்றாக கற்பார்கள். செல்வந்தர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு வரும் மனைவி அழகு இல்லாமல் இருக்கும். இவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள். இவர்கள் எந்த விசயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். இவர்களுக்கு காச நோய் வரும்.

No comments: