Followers

Monday, May 3, 2010

ராசிகளின் பொது பலன் - 1



மேஷம்

மேஷத்தில் பிறந்தவர்கள் அழகான உடம்பை பெறுவர்.பூமி நிலங்கள் கிடைக்கும்.விவசாய சம்பந்தப்பட்ட தொழிலில் லாபம் பெறுவர்.எதையும் சாதித்து காட்ட வேண்டும் என்ற துடிப்பு மனத்தில் இருக்கும்.அரசாங்கத்தில் மதிப்பு கிடைக்கும்.தெய்வீக வழிப்பாட்டில் ஈடுபடுவர். அதிலும் முருகன் மேல் அதிக ஈடுபாடு இருக்கும்.இவர்கள் பரம்பரையில் இதுவரை யாரும் முருகன் வழிபாட்டில் இல்லை என்றாலும் இவர்கள் முருகனை வழிபாடு செய்வார்கள்.இவர்களிடம் வேலை ஆள்கள் அதிகம் பேர் வேலை செய்வார்கள். இவர்களுக்கு சிறுவயதில் தீக்காயங்கள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷபத்தில் பிறந்தவர்கள் குண்டனா உடம்பையும்.கம்பீரமான தோற்றத்தை உடையவராகவும் இருப்பார்கள்.தெய்வபக்தி உடையவராகவும் இருப்பார்கள்.நல்ல கல்வி அறிவு இருக்கும்,கல்வி.சாஸ்திரம்.கணிதம்.வேதியியல் கற்றவராகவும் இருப்பார்கள்.ஆடம்பரமான ஆடைகளை விரும்பி அணிவர்.சிலர் வேடிக்கையாகவும் பேசுவார்கள்.வண்டி வாகனத்துடன் வாழ்வார்கள்.குழந்தைகளிடம் அன்பாக இருப்பார்கள். சில சமயம் தன் சகோதர,சகோதரிகளுக்காக எதையும் விட்டுதருபவர்களாக இருப்பார்கள்.இவர்களுக்கு சிறு சிறு வியாதிகள் வந்து தொந்தரவு செய்யும்.

மிதுனம்

மிதுனத்தில் பிறந்தவர்கள் கருப்பு உடம்புடனும். சிரித்து பேசும் முகத்துடனும் இருப்பார்கள்.உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களாக இருப்பார்கள். பேச்சில் தந்திரம் இருக்கும்.சுயநலம் இருக்கும்.கலைத்துறையில் ஆர்வம் மிகுதியாக இருக்கும். தன் முன்னேற்றத்தால் வாழ்வில் வெற்றி பெறுவர்.இவர்களுக்கு தீ,ஆயுதம் ஆகியவற்றால் தீங்கு ஏற்படும்.ஒரு சிலருக்கு பித்தம்.கண் நோய்கள் ஏற்படலாம். பகைவரால் தீங்கு ஏற்படலாம்.
...

No comments: