Followers

Friday, February 24, 2012

பலகரை ஆருடம் தொடர்ச்சி 1



இரண்டு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் சற்று தாமதமாக நடைபெறும். நடைபெறும் காரியம் இரண்டு அல்லது மூன்று மாதத்தில் நடைபெறும். கற்பனை வளம் உள்ளவர். இறைநம்பிக்கை உள்ளவர். எவ்வளவு கடினமான வேலையும் எளிதில் செய்து முடிப்பார்கள். அடுத்தவர்களிடம் எந்த வேலையும் கொடுக்கமாட்டார்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை வழங்குதில் முக்கிய வேலையாக இருப்பார். என்ன மனோநிலை ஒரு நிலையில் இருக்கமாட்டார்கள். மாதத்தில் 15 நாள் நன்றாக இருப்பார். மீத 15 நாள் டல்லாகிவிடுவார். எதிரிகள் இருக்கமாட்டார்கள் இவர்களின் எதிரி இவர்களின் சோம்பேறி தனம் தான். மந்திரங்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மந்திர வித்தை கை கொடுக்கும்.

மூன்று பலகரை நிமிர்ந்திருந்தால்

மத நம்பிக்கை அதிகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். நண்பர்களால் சேமித்த பொருள் நாசமாகும். நல்ல தைரியம் இருக்கும். சிறு வயதிலே பல சாதனைகளை செய்வார்கள். இவரின் பேச்சு இனிமையாக இருக்கும். பிறர் இவரை போற்றி பேசவேண்டும் என்று நினைப்பார். இவர்களை உணவு விஷயத்தில் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். பொன் பொருள் விஷயத்தில் பயங்கர கவர்ச்சி இருக்கும். எந்த நேரமும் பணம் இருந்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்கமுடியும் என்று எண்ணி பணத்தின் மீது ஒரு கண் இருக்கும்.

நான்கு பலகரை நிமிர்ந்திருந்தால்

நினைத்த காரியம் முடியும். வீடு கட்ட நினைத்திருந்தால் உடனே தொடங்கினால் வெகு சீக்கிரம் முடிவடையும். தாய் வழியில் இவர்களுக்கு உதவி கிடைக்கும். நல்ல கால்நடை செல்வம் கிடைக்கும். நகரத்தில் உட்கார்ந்து கொண்டு நல்ல மாடு கிடைக்கும் என்று சொல்லிவிடாதீர்கள். நல்ல வாகனங்கள் அமையும் என்று சொல்லுங்கள். இடமறிந்து குறி சொல்ல வேண்டும். இவரிடம் ஒரு ரகசியத்தை சொல்லி யாரிடம் சொல்லி விடாதீர்கள் என்று சொன்னால் உங்களிடம் குறி கேட்டுக்கொண்டு சென்ற அடுத்த நிமிடத்தில் உங்கள் ஊரில் அந்த செய்தி தான் தலைப்பு செய்தியாக பரவி இருக்கும். ஓரே ஓப்பன் டைப்பாக தான் இவர் இருப்பார். இவர் தொழிலை அடிக்கடி மாற்றிக்கொண்டு இருப்பார். ஆனால் அந்த தொழிலில் நல்ல ஈடுபாடு இருக்கும்.

நாம பதிவு எழுதுவதே பெரிய விஷயம் இதில் நம்ம ஆபிசில் இண்டர்நெட் கேபிள் இரண்டு நாளாக பிரச்சினை எதற்காகவோ குழி தோண்டி கேபிளை வெட்டிவிட்டார்கள் நான் இருக்கும் ஏரியாவில் கிட்டதட்ட 200 லைன் பிரச்சினை அதான் பதிவும் எழுதமுடியவில்லை பலனும் அனுப்பமுடியவில்லை இத்துடன் முடித்துக்கொள்கிறேன் நாளை பிரச்சினை தீரும் என்று நினைக்கிறேன் பார்க்கலாம்.

அன்புடன்

ராஜேஷ்சுப்பு.


No comments: