Followers

Tuesday, June 16, 2015

சக்தியும் நாளும்


ணக்கம்!
          ஒவ்வொரு அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களை நாம் தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நாம் ஆன்மீகப்பயிற்சி செய்தாலும் அல்லது ஆன்மீக வழிபாடு செய்தாலும் இந்த நாட்களில் செய்யும்பொழுது நாம் செய்யும் சிறிய வழிபாடு கூட அதிக நன்மையை நமக்கு கொடுத்துவிட்டு செல்லும்.

ஆன்மீக சாதனை செய்வதற்க்கு ஏன் மலையை தேர்ந்தெடுத்து நம் ஆட்கள் செய்தார்கள் என்றால் மலையில் இருந்து வெளிப்படும் சக்தியின் அளவு அதிகம் என்பதால் அந்த இடத்தை தேர்வு செய்தார்கள்.

மலையை தேடி நாம் செல்லுவது கடினமாக இருந்தால் அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். மலையின் சக்தியை விட பன்மடங்கு நமக்கு அந்த நாட்களில் கிடைக்கும்.

மாதசிவராத்திரி என்று ஒன்று வரும் அந்த நாளில் நாம் சிவன் அல்லது அம்மனை வணங்குவதற்க்கு மிகவும் ஏற்ற நாள். அதிகப்படியான சக்தியை நாம் பெறுவதற்க்கு இந்த நாளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நல்ல நாளை பயன்படுத்திக்கொண்டு சக்தியை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். சக்தியை எடுக்க இதுவரை நீங்கள் தவறினாலும் இனிமேலாவது இந்த நாட்களை எல்லாம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: