Followers

Sunday, June 28, 2015

குரு பெயர்ச்சி


வணக்கம் !
          குரு பெயர்ச்சி நடப்பதற்க்கு முன்பே பல நிகழ்வுகள் நடந்துவிட்டது. என்னிடம் பல வருடங்களாக இருந்த வாடிக்கையாளர்கள் ஒரு சிலருக்கு குரு கிரகம் பெரிய அளவில் பிரச்சினையை ஏற்படுத்திவிட்டது என்னை விட்டு பிரித்துவிட்டது.. 

ஒதுங்கி இருந்த பல நண்பர்கள் எல்லாம் தற்பொழுது என்னை நோக்கி வர ஆரம்பித்து இருக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் இருந்தால் நம்மை நோக்கி நல்லவர்களை குரு கிரகம் வரவழைத்துவிடும். நமக்கு குரு கிரகம் பிரச்சினையை தரும் நிலையில் இருந்தால் நல்லவர்களை பிரித்து தீயவர்களை கொண்டுவந்து விட்டுவிடும்.

குரு கிரகம் நல்ல அறிவை தரகூடிய ஒரு கிரகம். குரு கிரகம் கெடுதல் நிலைக்கு வரும்பொழுது நமது புத்தி வேலை செய்யாது. நாம் தான் செய்கிறோம். உலகத்தில் கடவுள் இல்லை என்று நாத்தீகவாதம் பேச வைத்துவிடும். அகங்காரம் மேல் நாேக்கி வரவழைத்துவிடும்.

குரு கிரகம் நல்ல நிலைக்கு வரும்பொழுது அறிவு வளர்ச்சி அடைந்து நல்ல நிலைக்கு கொண்டு செல்ல என்ன என்ன வேண்டுமே அதனை எல்லாம் பெற்றுக்கொடுத்துவிடும்.

குரு கிரகம் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தாலே போதும் அவர்களுக்கு எல்லாம் தானாகவே அமைந்துவிடும். குரு கிரகத்தின் அருளை மட்டும் நாம் பெற வேண்டும் மற்ற கிரகத்தின் அருள் தேவையில்லை என்றே சொல்லலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: