Followers

Tuesday, June 23, 2015

பயண அனுபவம்


வணக்கம்!
         கடந்த மூன்று நாட்களாக சென்னையில் உள்ள நண்பர்களை சந்தித்துவிட்டு தற்சமயம் இந்த பதிவை அளித்துவிட்டு தஞ்சாவூர் கிளம்பிவிட்டேன். ஒவ்வொரு நண்பர்களையும் சந்திக்கும்பொழுது புதிய அனுபவத்தையும் நான் பெறமுடிகிறது.

ஆன்மீகம் சம்பந்தப்பமாக நிறைய நண்பர்கள் என்னை சந்தித்தார். அதில் அவர்கள் ஒன்று சொல்வது மட்டும் எனக்கு முரணாக தெரிந்தது. ஆன்மீகத்தை கற்பதற்க்கு பல குருநாதர்களை அவர்கள் நாடி போவது தெரியவந்தது. பல பேர்களை நாடினால் ஆன்மீகத்தை கற்கமுடியாது. 

பல குருவை நாடும்பொழுது குரு எல்லாம் இப்படி இருப்பார்கள் என்று புத்தகம் எழுதுவதற்க்கு உதவும். ஒரு குருவிடம் சென்று அவர் தருவதை பெற்றுக்கொண்டு அதனை வளர்க்க ஆரம்பித்தால் கரை சேரலாம். பல பேர்களை நாடினால் ஆன்மீகம் வளராது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஒரு இடத்தில் யோகா தியானம் எல்லாம் கற்றுக்கொண்டு அதில் முன்னேற்றம் அடைவது நல்லது. நீங்கள் கற்ற யோகம் தியானம் எப்படி எல்லாம் வேலை செய்யும் என்பதை நாம் சக்தியை பெறும்பொழுது தான் தெரியவரும். என்னிடம் வரும்பொழுது நீங்கள் அதனை உணரமுடியும். நீங்கள் சரியானபடி தான் கற்றுக்கொண்டீர்கள் என்றால் என்னை சந்திக்கும்பொழுது உங்களுக்குள் சக்தி என்றால் என்ன என்று தெரியவரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: