Followers

Saturday, August 18, 2012

சோதிட அனுபவம் 2



வணக்கம் நண்பர்களே கடந்த சோதிட அனுபவம் பதிவில் ஐந்தாம் வீட்டை பற்றி பார்த்தோம். ஐந்தாம் வீட்டில் நான்கு கிரகம் இருக்கிறது. குரு சொந்த வீட்டில் இருப்பதால் குழந்தை பாக்கியம் இருக்கும். 

ஐந்தாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இருப்பதால் ஐந்தாம் வீடு புத்தி ஸ்தானத்தை காட்டும் இடம் என்பதால் இவருக்கு புத்தி கம்மிதான். எது கேட்டாலும் திணறுவார். நல்ல அறிவை தரக்கூடிய கிரகம் புதன். அவர் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். புதன் உடன் கெட்ட கிரகம் சேர்ந்ததால் அறிவு மழுங்கிவிட்டது.புதன் கெட்டதால் தோல் வியாதி இவருக்கு இருக்கிறது. 

ஐந்தாம் இடம்  கடக ராசியாக வருகிறது. அதன் அதிபதி சந்திரன். இவருக்கு பெண் குழந்தைகள் இருக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

ஆறாம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். ஆறாம் வீடடிற்க்கு குருவின் பார்வை கிடைக்கிறது. ஒழுங்காக சாப்பிடமாட்டார். குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிடமாட்டார்.

ஆறாவது வீடாக சிம்ம ராசி வருகிறது அதன் அதிபதி சூரியன் தந்தை வழி உறவினர்கள் இவருக்கு எதிரி. தந்தை வழியில் உள்ளவர்கள் இவரிடம் சண்டை போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.  ஆறாம் வீட்டு அதிபதியுடன் செவ்வாய் கிரகம் சேர்ந்து இருக்கிறது. இவர் சண்டையில் ரத்தம் காயம் எல்லாம் ஏற்பட்டு இருக்கிறது.

ஏழாவது வீடாக அதாவது களத்திர ஸ்தானம் அந்த வீடாக கன்னி ராசி வருகிறது அதன் அதிபதி புதன் ஐந்தாம் வீட்டில் இருக்கிறார். புதன் அதிபதியாக இருப்பதால் வரும் மனைவி ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பவராக அமைவார். இவருக்கு நிச்சயதார்த்தம் இப்பொழுது தான் நடந்தது. அந்த பெண்னும் ஒரு அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிகிறார். புதன் சூரியனுடன் சேர்ந்ததால் அரசு வேலையில் அந்த பெண் இருக்கிறார்.

ஏழாம் வீடு என்பது நம்மிடம் தொடர்பு வைத்திருப்பவரையும் காட்டும் இடம் என்பதால் இவரிடம் தொடர்பு வைத்திருப்பவர்கள் அனைவரும் அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார் அல்லது வணிகம் நட்த்தி கொண்டு இருப்பவராக இருக்கிறார்கள்.

தொடரும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  

No comments: