Followers

Saturday, August 25, 2012

சொல்ல துடிக்குது மனசு



வணக்கம் நண்பர்களே நாம் ஏழாம் வீட்டு தசாவை பற்றி பார்த்து வருகிறோம். இதை நான் எழுதியபோது பலபேர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு உண்மையை எழுதிவிடாதீர்கள் அவற்றை பார்த்து ஒன்று மகிழ்ச்சி அடைவோம் அல்லது கவலை அடைவோம் அதனால் முழுவதும் எழுதிவிடாதீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள்.  அனைத்தும் பொதுவான ஒரு தகவல் தான். இதை பார்த்து நீங்கள் பயப்பட தேவையில்லை. 

அப்படியே இது உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்று உங்கள் மனது நினைத்தால் நீங்கள் திருமணம் செய்தவற்க்கு முன்பே அனைத்தையும் பார்த்துவிட்டு பொருத்தமான வரனை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். தேவையற்ற பிரச்சினையை தவிர்க்கலாம். மனிதனை பொதுவாக சிக்கவைப்பது திருமணத்தில் தான் ஒரு சிலருக்கு சொர்க்கமாக அமையும். ஒரு சிலருக்கு அது தான் அவர்களா தேடிக்கொண்ட புதைகுழியாக இருக்கும் அனைத்தும் கிரகங்களின் தாக்கம்  தான் வேறு ஒன்றும் இல்லை.

குரு திருமணத்திற்க்கு முக்கிய காரண கர்த்தவாக இருந்தாலும் சனியும் முக்கிய காரணகர்த்தவாக இருக்கிறார். உங்களை திருமணத்தின் மூலம் கர்மத்தில் மாட்டவைக்கிறார். சனியின் நிலை பலவாறு இதில் காணப்படுகிறது. இந்த உலக பந்தத்தில் சிக்க வைக்கவேண்டும் என்று சனி நினைக்கிறார். பல பேருக்கு ஏழரை சனியில் தான் திருமணம் நடைபெறுகிறது. அதனால் சனியும் இதில் முக்கியமானவர்.

இதை எல்லாம் நீங்கள் பார்த்து திருமணம் செய்துகொண்டால் ஒன்று திருமணத்திற்க்கு முன்பே சரியான வரனை தேர்வு செய்யலாம் அல்லது திருமணத்திற்க்கு பின்பு நமக்கு அமைந்த வரன் இப்படி தான் இருப்பார் அவரை சொல்லி ஒன்றும் இல்லை எல்லாம் கிரகத்தின் வேலை தான் என்று மனதை சமாதான படுத்திக்கொண்டு நீங்கள் உங்கள் கணவன் அல்லது மனைவியோடு சந்தோஷமாக வாழலாம்.திருமணம் முடிந்தவர்கள் இதை படித்தால் நீங்கள் கண்டிப்பாக உங்கள் திருமண வாழ்வில் பிரச்சினை இல்லாமல் வாழலாம். 

உங்களை நம்பி பெரியவர்கள் அல்லது நீங்களே தேர்ந்தெடுத்திருக்கலாம் உங்கள் வாழ்க்கை துணையை. அவர்களிடம் நீங்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பது உங்களின் கடமை. திருமணம் என்பது துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு மாதிரி அதை திரும்பபெற இயலாது. கடைசிவரை நீங்கள் தான் பொறுமையுடன் இருந்து குடும்பத்தை நடத்தவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: