Followers

Saturday, August 25, 2012

மந்திர அனுபவங்கள்


வணக்கம் நண்பர்களே தொடர்சியாக ஏழாவது வீட்டைப் பற்றி பார்த்து வந்தாலே ஒரு சிலருக்கு போர் அடித்துவிடும் அதனால் இந்த பதிவில் மந்திர அனுபவங்களைப் பற்றி பார்க்கலாம்.

இந்த மந்திரங்களை கற்க நினைத்து ஒரு குருவிடம் சென்றால் அவர்கள் கண்டிப்பாக உடனே ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நான் முதலில் கற்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் குருவை தேடிய கதை உங்களுக்கு தெரிந்ததே அப்படி தேடிய போது முதலில் நான் தேடியது கண்டிப்பாக பெரிய குருவை நாம் தேடக்கூடாது என்று முடிவு எடுத்து இருந்தேன் ஏன் என்றால் பெரிய குருவிடம் ஏகாபட்ட கூட்டம் இருக்கும்.

அடுத்தது அவர்களுக்கு நம்மால் பணி செய்ய முடியாது ஏன் என்றால் ஒரு சிலர் பணத்தை எதிர்பார்த்தால் என்ன செய்வது என்னிடம் அப்பொழுது பணம் இல்லை இப்பொழுதும் இல்லை தான் ஆனால் அப்பொழுது பணத்தை கேட்டால் யாரும் கொடுப்பதற்க்கு ஆள் இல்லை இப்பொழுது ஆட்கள் இருக்கிறார்கள்.

கண்டிப்பாக சந்நியாசியாக இருப்பவரை தான் தேர்ந்தெடுப்பது என்று முடிவு எடுத்து தேடினேன். அவர் கிடைத்ததை தான் பழைய பதிவில் சொன்னேன் அல்லவா நான் பல சாமியார்களை பார்த்தேன். அவர்களை பார்க்கும் போது அவர்கள் பேசுகிற விதம் கண்டிப்பாக நமக்கு ஒன்றுமே புரியாது. நாம் அவர்களை பார்க்கதான் வந்து இருக்கிறோம் என்பதைப் பற்றி கவலைபடாமல் அவர்கள் வேறு யாருடன் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

நம்மிடம் சம்பந்தமே இல்லாமல் ஒரு மணி நேரமாவது பேசுவார்கள் அதுக்குள் நமக்கு இருந்த பொறுமை எல்லாம் போய்விடும் இப்படியே பல நாட்களை ஓட்டிவிடுவார்கள். அந்த பழக்க வழக்கம் தான் நான் இன்று கூட என்னிடம் பேசுவர்களிடம் சம்பந்தமே இல்லாமல் சில நேரங்களில் பேசுவேன்.அதனால் நான் சாமியார் கிடையாது பழக்க வழக்கம் தான்.

அவர்கள் நினைப்பது இதனை பின்பற்றகூடாது அல்லது தவறான ஆளாக நாம் மாறிவிடுவார்கள் என்று  நினைக்கிறார்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய குரு அடிக்கடி என்னிடம் கூறுவது ராஜேஷ் நான் சந்நியாசி வாழ்க்கையை பார்த்துவிட்டேன் நீ சம்சார வாழ்க்கையை வாழு என்று சொல்வார்.

ஏன் அவ்வாறு கூறுகிறார் என்று எனக்கு தெரியாது ஆனால் அவர் உண்மையான சந்நியாசி தான். அவர் வெளியில் வருவது கூட கிடையாது அவருக்கு தெரிந்தவர்கள் என்று எடுத்தால் ஒரு பத்து பேர் கூட தேறமாட்டார்கள் மற்றபடி அவருக்கு தெரிந்தவர்கள் அவரை போல சாமியார்கள் தான். அவரின் போட்டாவை அவரின் அனுமதியோடு இந்த தளத்தில் ஒரு நாள் போடுகிறேன்.

அவர் இன்று வரை இருக்கிறார். அவர் இந்த பூமியை விட்டு செல்லும் நாளும் என்னிடம் சொல்லி இருக்கிறார். உண்மையில் அந்த மாதிரி ஒரு குரு கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேன் என்று தெரியவில்லை.

மந்திர அனுபவங்களை பெறுவதால் நமக்கு என்ன கிடைக்கும். மந்திர அனுபங்களை பெறுவதற்க்கு பல தெய்வங்களை ஒவ்வொரு வரும் உரு ஏற்றுவார்கள். அந்த தெய்வத்திற்க்கு தகுந்தார் போல் பலனை முதலில் நமக்கு தரும்.

மந்திர அனுபவங்களை கற்பதற்க்கு முன்னால் எனக்கு ஒழுங்காக தூக்கம் வராது. எப்படி தூக்கம் வரும் கடுமையான வறுமை இருந்தால் எவனுக்கு தான் தூக்கம் வரும். மந்திர அனுபவங்களை பெற்ற பிறகு எனக்கு என்ன நடந்து என்றால் படுத்த உடனே தூக்கம் வந்துவிடும்.

ஒரு தாய் எப்படி நம்மை குழந்தையாக இருக்கும் போது தாலாட்டி தூங்க வைப்பாளோ அதை விட இந்த தாய் தாலாட்டி தூங்க வைப்பாள். முதலில் கவலை வராது. அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்து பாருங்கள்.

மந்திர அனுபங்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

என்னை மந்திரவாதி என்று நினைக்க வேண்டாம் அனைத்து அனுபங்களையும் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் உங்களுக்கும் அது பயன்படும் என்று தான் எழுதுகிறேன். அடுத்த பதிவில் ஏழாம் வீட்டு தசாவைப் பற்றி பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: