Followers

Thursday, August 30, 2012

மந்திர அனுபவங்கள்



வணக்கம் நண்பர்களே நான் மந்திர அனுபவங்களை பற்றி எழுதியபோது நான் நினைத்தேன் இது எல்லாம் யார் படிக்கபோகிறார்கள். சும்மா படித்துவிட்டு அப்படியே விட்டுவிடுவார்கள் என்று நினைத்து எழுதினேன் ஆனால் நான் எழுதிய பதிவுகளிலே அதிக பேர் என்னை தொடர்பு கொண்டு கேட்டது இந்த தொடருக்கு தான் இருக்கும் அதிலும் அயல்நாடுகளில் வசிப்பவர்கள் அதிகம் பேர் இதில் ஆவலாக உள்ளனர். அவர்களுக்காவே மந்திர அனுபங்களைப் பற்றி நிறைய எழுதுவேன்.

நான் பழைய பதிவில் சொல்லிருந்தேன் உங்களால் முடியும் என்றால் இந்த மந்திர அனுபவங்களை பெறலாம் என்று சொல்லிருந்தேன். இந்தியாவில் ஒருவரை தவிர வேறு யாரும் தொடர்பு கொள்ளவில்லை அயல்நாடுகளில் இருக்கும் பல நண்பர்கள் தொடர்பு கொண்டார்கள்.

இந்தியாவில் இருப்பவர்கள் ஒன்று மந்திர அனுபவங்களை ஏற்கனவே நன்றாக கற்று இருக்க வேண்டும் அல்லது நல்லவனாக நாங்கள் இல்லை என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள. இருக்கட்டும் அது அவர்களின் விதி.

ஏன் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் ?

அடுத்தவரை கெடுப்பதற்க்காக அல்லது இதன் மூலம் வேறு ஏதாவது பெறுவதற்க்காக. உண்மையில் சொல்லபோனால் மனித வாழ்க்கையை ஒவ்வொருவருக்கும் தினமும் நடைபெறும் நிகழ்வுகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு கொள்வது அவர்களின் தசா புத்திதான். இதனை அனுபவ பூர்வமாக உங்களுக்கே தெரியும். 

இப்பொழுது நடைபெறும் ஒரு நிகழ்வுகள் அதாவது இப்பொழுது நீங்கள் இருக்கும் நிலையை நீங்கள் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக செய்யவேண்டியது இந்த மாதிரி மந்திரங்களை கற்றுக்கொள்வதை விட வேறு இல்லை.

நீங்கள் சூரிய தசாவில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது சூரிய தசாவில் முதலில் ஒரு வியாபாரத்தை தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம் உங்களுக்கு சூரிய தசா நல்ல பலனை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம் அப்பொழுது அந்த வியாபாரம் நன்றாக செல்லும். 

சூரிய தசாவின் மொத்த காலமே ஆறு வருடம் தான். உங்கள் வியாபாரம் ஆறு வருடம் நன்றாக சென்ற வியாபாரம் அடுத்த வருகின்ற சந்திரன் தசாவில் சந்திரன் தீமை தரும் இடத்தில் இருந்து நடைபெற்றால் கண்டிப்பாக உங்கள் வியாபாரம் நஷ்டத்தை சந்திக்கும்.

நீங்கள் கஷ்டபட்டு கடனை வாங்கி இருப்பதை எல்லாம் விற்று வியாபாரம் நன்றாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் நஷ்டத்தை எதிர்கொள்வது கடினம். அதைவிட உங்களின் மதிப்பு அந்த வியாபாரத்தில் தான் இருக்கின்றது. 

நஷ்டம் அடைந்தால் உங்களால் ஒரு முதலாளியாக இருந்ததை விட்டு விட்டு அடுத்தவர்களிடம் போய் வேலை பார்ப்பது தானே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று மனது ஏங்கும். இந்த மாதிரி நிலைகளை தவிர்ப்பதற்க்கு பெரும் உதவியாக இருப்பது இந்த மந்திரங்கள் தான் உங்களை காப்பாற்றும். என்ன இப்பொழுது புரிகிறதா.

உண்மையில் பல கம்பெனிகளின் முதலாளிகள் இந்த மாதிரி தான் தொடர்ந்து தன்னுடைய வியாபாரத்தை தக்க வைத்துக்கொள்கிறார்கள். நானே பல வியாபார நிறுவனங்களை காப்பாற்றி கொடுத்து இருக்கிறேன்.

இந்த நேரத்தில் நீங்கள் ஒன்று கேட்க உங்கள் மனது நினைக்கும் எல்லாம் விதிபடிதான் நடக்கும் எப்படி இது சாத்தியபடும் என்று உங்கள் மனதிற்க்கு தோன்றும். எல்லாம் விதிபடிதான் நடக்கும் என்று சும்மா உட்கார்ந்திருக்க முடியுமா. ஏதாவது செய்தால் தான் உண்டு இல்லை என்றால் நீங்கள் ஆட்டத்தை விட்டு விலகிவிடவேண்டியது தான். இவ்வளவு கிரகத்தை கண்டுபிடித்தவன் அதில் இருந்து கொஞ்சமாவது தப்பித்துக்கொள்ள வழி தேடி இருப்பான் அல்லவா அந்த வழிதான் இந்த வழி.

இந்த நேரத்தில் உங்கள் மனதில் ஒன்று தோன்றும்

நீங்கள் மந்திர அனுபங்களை பெறுவதை விட பெரும் சாமியார்கள் அதாவது கார்ப்பரேட் சாமியார்கள் நடத்தும் தியானம் மற்றும் யோக கற்றுக்கொண்டு 
அதன் வழி நடக்கலாமே என்று தோன்றும் அது தவறு இல்லை என்று நானும் ஒப்புக்கொள்வேன். அதில் உங்கள் மனது மட்டும் அமைதி கொள்ளும். உங்கள் வியாபாரத்திற்க்கு மற்றும் வரும் பிரச்சினைகளுக்கு அது வழி வகுக்காது.

ஒரு சிலருக்க நடக்கலாம் கண்டிப்பாக அனைத்து பேருக்கும் அதில் வழி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மந்திர அனுபவங்கள் தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Enathu Ennangal said...

சார் நீங்க எனக்கு மந்திரம் கற்று கொடுங்க அல்லது அதற்கான வழிமுறை சொல்லுங்க...

rajeshsubbu said...

//* Enathu Ennangal said...
சார் நீங்க எனக்கு மந்திரம் கற்று கொடுங்க அல்லது அதற்கான வழிமுறை சொல்லுங்க... *//

வருக வணக்கம் ஒவ்வொன்றாக பார்க்கலாம். அனைத்தையும் சொன்னால் தான் அனைவருக்கும் புரியும்.