Followers

Thursday, June 4, 2015

உணவு முறை


வணக்கம்!
          காலையில் உணவு முறைப்பற்றி சொன்னேன். ஒருவர் ஆன்மீகப்பயிற்சி எடுக்கிறார் என்றால் முதலில் அவருக்கு குரு உணவு முறையில் தான் கட்டுப்பாடு வைப்பார். 

நான் ஆன்மீகப்பயிற்சி எடுக்கும்பொழுது முதலில் எனது குரு சொன்ன விசயம் சாப்பாட்டிற்க்கு முக்கியத்துவம் கொடுக்ககூடாது என்று சொன்னார். நீ எதை வேண்டுமானாலும் சாப்பிட்டுக்கொள்ளலாம் ஆனால் சாப்பாடு சாப்பாடு என்று அலையகூடாது என்றார். சாப்பாடு மட்டும் தன் கையால் சமைத்து போடுவார். அடுத்தவர்களின் வீடுகளில் சாப்பிட அனுமதிக்கமாட்டார். 

பொதுவாக எந்த ஒரு ஆன்மீகவாதியிடமும் நீங்கள் ஆன்மீகப்பயிற்சி எடுத்தாலும் அவர்கள் முதலில் கை வைப்பது உங்களின் உணவு முறையில் தான் இருக்கும். உணவு முறையில் கட்டுபாடு வைத்துவிடுவார்கள். நீங்கள் விரும்பியதை உண்ண விடமாட்டார்கள். அவர்கள் பட்டியல் கொடுத்து இதனை தான் உண்ண வேண்டும் என்பார்கள்.

வயிறு வெறுமையாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். உடலுக்கு தேவையான சக்தி பிரபஞ்ச சக்தி வழியாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பார்கள். நான் பயின்ற பனிரெண்டு வருட காலங்கள் உடல் மெலிந்து தான் காணப்பட்டேன். உடல் தெரியகூடாது ஆத்மா தான் தெரியவேண்டும்.

ஆன்மீகப்பயிற்சி நீங்கள் எடுத்தாலும் சரி இல்லறத்தில் இருந்தாலும் சரி முடிந்தளவு உணவு முறையில் பாதுகாப்பாக இருங்கள். உடலுக்கும் நல்லது உங்களின் வாழ்விற்க்கும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

nallur parames said...

Maha periyavaa padam super.