Followers

Sunday, April 15, 2012

இளம் சோதிடர்கள்



இளம் சோதிடர்களுக்கு ஒர் அறிவிப்பு என்னிடம் இந்த தளத்தின் வழியாக இலவச சோதிடம் பார்த்தவர்கள் அனைவரும் சோதிடத்தில் நல்ல அறிவோடு இருக்கிறார்கள் அது மிக்க மகிழ்ச்சி . என்னிடம் பேசியவர்கள் அனைவரும் என்னிடம் கேட்ட கேள்வி சோதிடத்தை நாங்கள் இன்னும் நல்ல முறையில் கற்று பிறர்க்கு சோதிடம் பார்க்கலாமா என்று கேட்டார்கள்.

அவர்களுக்கு பாதி பேருக்கு நான் தொலைபேசிலேயே பதில் அளித்துள்ளேன். அப்படி இருந்தாலும் இந்த பதிவு மூலம் அனைவருக்கும் விபரமாக தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் பல வருடங்களாக இந்த சோதிட தொழில் செய்து வருகிறேன். இதுவும் ஒரு தொழில் தான்.

அந்த காலத்தில் சோதிடத்தை காப்பாற்ற வேண்டும் என்று அந்த கால அரசர்கள் சோதிடர்களுக்கு அனைவருக்கும் உதவி செய்து சோதிடத்தை காப்பாற்றினார்கள். இன்றைய அரசோ இதை எல்லாம் செய்வது இல்லை.

சோதிடர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களும் வாழ வேண்டும் அதனால் சோதிடர்கள் வருமானம் பார்ப்பது தப்பில்லை. நான் சொல்ல வந்த விஷயத்திற்க்கு வருகிறேன்.

சோதிடம் பார்ப்பதால் நம்மிடம் வரும் வரும் ஒவ்வொரு ஜாதகத்தின் மூலம் 10 % பாவம் ஆவது நமக்கு சேருகிறது.

இதை நீங்களே அனுபவத்தில் உணரலாம் ஒரு ஜாதகத்தை எடுத்தாலே பல விஷயங்கள் உங்களுக்கு புரியும். சில ஜாதகங்கள் நமக்கு கடுமையான கோபத்தை உண்டு செய்யும், சில ஜாதகங்கள் காமத்தை உண்டு செய்யும், சில ஜாதங்கள் தூக்கத்தை உண்டு செய்யும் இந்த மாதிரி பல விஷயங்கள் இருக்கின்றன. அது எல்லாம் உங்களுக்கு அனுபத்தில் உணரலாம்.

என்னிடம் சில பேர் கேள்வி கேட்டார்கள் பரிகாரம் செய்து கொடுத்தால் தானே பாவம் சேரும் ஜாதகம் பார்த்தால் பாவம் சேருமா என்று கேட்டார்கள்.

நீங்கள் ஒரு தொழில் முறை சோதிடர்களாக இருந்தால் பல பிரச்சினைகளை நீங்கள் சந்தீப்பீர்கள். அதற்கு காரணம் அது பிறருடைய ஜாதகத்தால் வந்த பிரச்சினைகளாக இருக்கும்.

என்னுடைய அனுபவத்தில் எனக்கு கடுமையான அலர்ஜி ஏற்பட்டது அதை போக்க நான் பட்டபாடு இருக்கிறதே அதை சொல்ல முடியாது அந்த அளவுக்கு கஷ்டப்பட்டேன். சொந்த வாழ்க்கையில் பல இன்னல்கள் சந்தித்து வந்திருக்கிறேன்.

என்ன ராஜேஷ் நீ மட்டும் நல்ல சம்பாதிக்கலாம் நாங்கள் சம்பாதிக்க கூடாது என்று கேட்கலாம். சோதிடத்தின் மூலம் வரும் வருவாய் கர்மவருவாய் அதன் பலனை நாம் அனுபவித்தே தீர வேண்டும். இதைப் பற்றி பல Blog யில் வந்துள்ளது. நான் சொல்ல தேவையில்லை.

உங்களுக்கு அருகில் யாரும் சோதிட தொழிலை செய்து வந்தார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை உற்று நோக்கினால் அப்பொழுது தெரியும் அவர்கள் வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. அவர்களின் குழந்தைகள் வாழ்விலும் பெரும் பிரச்சினைகளை சந்திருப்பார்கள். ஒரு சில காலம் நன்றாக ஒடும் அதற்கு பிறகு அவர்கள் படும் பாடு வார்த்தைகளால் சொல்ல முடியாது.

பின்பு எதற்காக இந்த Blog யை எழுதுகிறாய் என்று கேட்கலாம். உங்கள் குடும்பத்தில் உள்ள நபர்களின் ஜாதகத்தை மட்டும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அது போதும். உங்களுக்கு பிறகு உங்கள் சந்ததினர்களுக்கு சொல்லிக்கொடுங்கள் அதுவே மிகப்பெரிய விஷயம். என்னுடைய நோக்கம் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு சோதிடர்.

நீங்கள் சோதிடம்தான் தொழிலாக செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஏதாவது ஒரு தேவதையை நித்தமும் வழிபடுங்கள். திருவண்ணாமலை அடிக்கடி சென்று கிரிவலம் வாருங்கள். இராமேஸ்வரம் சென்று நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்யுங்கள். திருசெந்தூர் சென்று வாருங்கள் ,விரதமுறைகளை கடைபிடியுங்கள். இந்த மாதிரி செய்து இந்த தொழிலை செய்யலாம். ஆனாலும் கஷ்டங்களை அனுபவித்தே தீரவேண்டும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

6 comments:

seethalrajan said...

superb!!

Ananthamurugan said...

thanks for message.....!!

rajeshsubbu said...

//* seethalrajan said...
superb!! **/

தங்கள் வருகைக்குக்கு நன்றி

rajeshsubbu said...

//* Ananthamurugan said...
thanks for message.....!! *//

தங்கள் வருகைக்குக்கு நன்றி.

Swami said...

தங்கள் கருத்து நூறு சதம் உண்மையானது. இது தெரியாமல் பரிகாரம் செய்ய ஐம்பது ஆயிரம் வாங்கும் ஜோசியறேல்லாம் சென்னையில் சக்க போடு போட்டு கொன்டிருகீறார்கள். ஒரு சின்ன சந்தேகம். பணம் இல்லாது, சேவை நோக்கத்தோடு பரிகாரம் சொன்னால் கூட ,அவர்களின் கர்ம வினை நம்மை சேருமா?

Swami said...

தங்கள் கருத்து நூறு சதம் உண்மையானது. இது தெரியாமல் பரிகாரம் செய்ய ஐம்பது ஆயிரம் வாங்கும் ஜோசியறேல்லாம் சென்னையில் சக்க போடு போட்டு கொன்டிருகீறார்கள். ஒரு சின்ன சந்தேகம். பணம் இல்லாது, சேவை நோக்கத்தோடு பரிகாரம் சொன்னால் கூட ,அவர்களின் கர்ம வினை நம்மை சேருமா?