Followers

Sunday, April 22, 2012

செவ்வாய் கோச்சார பலன் நிறைவு பகுதி



செவ்வாய் ஏழாம் வீட்டிற்க்கு வரும் போது களத்திர இடம் என்பதால் கணவன் மனைவி சண்டை சச்சரவு இருக்கும். தொழில் கூட்டாளி உடன் சண்டை ஏற்படும். வீண் அலைச்சல் கெட்ட பெயர் ஏற்படும். நண்பர்களும் விரோதிகளா ஆவார்கள்.  வயிறு சம்பந்தமான பிரச்சினை ஏற்படும்.

செவ்வாய் எட்டாம் வீட்டிற்க்கு வரும்போது ஆயுதங்களால் காயம் ஏற்படும். தற்கொலை எண்ணம் ஏற்படும். உங்களை விட கீழ் உள்ளவர்களிடம் கீழ்பணிந்து செல்ல வேண்டும். மனைவி மூலம் சண்டை சச்சரவு ஏற்படும். 

செவ்வாய் ஒன்பதாம் வீட்டிற்க்கு வரும் போது பொன் பொருள் சேர்க்கை வந்து சேரும். மனைவி உங்கள் மேல் அன்பை பொழிவார்கள். ஆரோகிய கெடுதல் ஏற்படும். இளம் வயதினராக இருந்தால் உயர்படிப்பில் பிரச்சினை வரும். உறவினர்கள் ஆதரவு இருக்கும்

செவ்வாய் பத்தாம் வீட்டிற்க்கு வரும்போது தொழில் வளர்ச்சி ஏற்படும். தொழிலில் அதிக செலவு செய்து வருமானம் ஏற்படும். மனைவி மூலம் மன மகிழ்ச்சி ஏற்படும். திடீர் பணவரவு இருக்கும்.

செவ்வாய் பதினொன்றாம் வீட்டிற்க்கு வரும்போது குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். மூத்த சகோதர்கள் சகோதரிகள் மூலம் வருமானம் கிடைக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள் அவர்கள் மூலம் பொருள் வரவுகள் உண்டு.

செவ்வாய் பனிரெண்டாம் வீட்டிற்க்கு வரும் போது பெண்கள் மூலம் கெட்ட பெயர் ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படும். பொருள் இழப்பு அதிகமாக ஏற்படும். உடல்நிலையில் கவனத்துடன் இல்லை என்றால் மிக அதிகமான பாதிப்பு ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: