Followers

Tuesday, April 3, 2012

பங்குனி உத்திரம்





வணக்கம் நண்பர்களே இலவச சோதிட சேவை ஆரம்பித்தவுடன் எண்ணற்ற ஜாதகங்கள் Email லில் வந்து குவிகின்றன. வரட்டும் அனைத்தையும் வரவேற்கிறேன்.


டைப் செய்து பலனை அனுப்ப நேரம் போதவில்லை அதனால் சில பேருக்கு எனது Cell நம்பரை தந்து அதில் பலனை கூறிவருகிறேன். அவ்வாறுஅந்த நபர்களுடன் பேசும் போது ஆத்ம திருப்தி கிடைக்கிறது.


என்னால் இத்தனை ஆத்மாகளுக்கு நன்மை செய்யமுடிகிறதே என்று மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னிடம் ஜாதகங்களை அனுப்பி கேள்வி கேட்டவர்கள் அனைவரும் ஒரு கேள்வியை கேட்டார்கள் அது திருமணம் தள்ளி போகிறது அல்லது திருமணத்தில் பிரச்சினை.


இந்த கேள்விக்கு மிகவும் அருமையான பரிகாரமாக வரும் 5-4-2012 அன்று பங்குனி உத்திரம் வருகிறது. பங்குனி உத்திரம் முருகனுக்கு மிகுந்த உகந்த நாள். அன்றைய நாள் முருகன் கோவில் அனைத்திலும் விழா கோலத்துடன் காட்சி அளிக்கும்.


பங்குனி உத்திரம் விரதம் கல்யாண விரதம் என்று அழைப்பார்கள் அவ்வளவு மகிமை உள்ள விரதத்தை நாம் கடைபிடிக்காமல் இருக்கலாமா?

அந்த நாளில் விரதம் இருங்கள். விரதம் இருக்கும் போது முருகனை நினையுங்கள் நீங்கள் மனதால் முருகனிடம் உங்கள் கோரிக்கைகளை வையுங்கள். நம்பிக்கையுடன் செய்யுங்கள். அனைத்து பிரச்சினையும் தீர்த்து வைப்பார்.


அன்றைய நாளில் முருகன் கோவிலுக்கு செல்லுங்கள். முடிந்தால் அர்ச்சனை செய்யுங்கள் அல்லது சும்மாக சென்று விட்டு வாருங்கள் கண்டிப்பாக திருமணத் தடை அல்லது திருமண வாழ்வில் பிரச்சினை உள்ளவர்கள் நல்ல தீர்வு கிடைக்கும் நானும் உங்களுக்காக விரதம் இருந்து வேண்டிக்கொள்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Lazy boy said...

Sir i sent my details two months ago. but still no reply from you. i am jobless sir for 2years pls help me