Followers

Wednesday, April 18, 2012

பரிகாரம் சம்பந்தமாக

வணக்கம் நண்பர்களே நேற்று திருமணத்திற்க்கு ஒரு பதிவை போட்டோம் அதில் கடைசியில உங்கள் திருமணத்தில் சிக்கல் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம் அதற்கு தேவையான பரிகாரங்களை பணம் இல்லாதவர்களுக்கு இலவசமாக செய்து தருகிறேன் என்று சொல்லி இருந்தேன்.

அந்த பதிவை போட்டவுடன் எனது email க்கு பல mail வந்துள்ளன. எனக்கு இலவசமாக பரிகாரம் செய்துகொடுங்கள் என்று கேட்டுள்ளார்கள் அதில் பார்த்தீர்கள் என்றால் பல பேர் நல்ல வசதியாக இருக்கிறார்கள். ஏன் தான் இந்த தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்த மக்களை இப்படி கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

தமிழன் இரத்ததில் இலவசம் என்ற வார்த்தை நன்றாக பதிந்துவிட்டது. பின்பு எப்படி இதை மாற்றுவது.

சில பேர் எழுதி உள்ளார்கள் ஏண்டா இப்படி பணம் ஆசை பிடித்து அழைகிறாய் என்று அவர்களுக்கு சொல்லுகிறேன் அரசியலில் இருப்பவர்கள் செய்யாததை நான் செய்து கொண்டு இருக்கிறேன். அதைப் பற்றி எழுதி சுயவிளம்பரம் எனக்கு வேண்டாம்.

நான் செய்யும் பரிகாரத்தை இப்பதிவில் எழுதமுடியாது ஏன் என்றால் அது மிகவும் ஆபத்தான ஒன்று. அதை வைத்து ஒருவரை குணப்படுத்தவும் முடியும் கொலை செய்யவும் முடியும்.

சாதாரணமான பரிகாரங்களை மட்டும் பதிவுகளில் எழுதுகிறேன். அதை பின்பற்றலாம். சாதாரண பரிகாரங்கள் செய்தால் 20 வயதில் ஆரம்பித்தால் 30 வயதில் தான் நடக்கிறது. சில ஜாதகங்கள் உடனே நடந்துவிடும். அது அவர் ஜாதங்களை பொறுத்து நடக்கும்.

சிலபேர்கள் எழுதியுள்ளார்கள் கூட்டமாக வைத்து ஒரே நாளில் செய்துவிடுங்கள் என்று கண்டிப்பாக அந்த மாதிரி செய்தால் நடக்காது. ஒருவர் ஜாதங்கள் போல் அனைத்து பேருக்கும் இருக்காது. முடிந்தவரையில் தனியாகவே தான் நடத்தவேண்டும். ஜாதங்கள் பலவகை பரிகாரங்களும் பலவகை அதனை புரிந்துக் கொள்ளுங்கள். அனுப்பிய அனைவருக்கும் கண்டிப்பாக செய்து தருகிறேன்.

பெண்களாக இருந்தால் 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தால் 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். ஏன் என்றால் இது ஒரு சராசரியான வயது இந்த வயதுக்குள் திருமணம் நடைபெறவில்லை என்றால் தான் பரிகாரம் செய்ய வேண்டும் . குறைந்த வயது உடையவர்கள் திருமண வாழ்வில் பிரச்சினை என்று உங்கள் ஜாதகங்களில் தெரிந்தால் மட்டும் செய்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிரச்சினை எந்த பரிகாரம் செய்து பலன் இல்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளுங்கள். முடிந்தளவுக்கு என்னால் உங்களுக்கு நல்ல வழி செய்து தரமுடியும்.

நீங்கள் லட்ச கணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. ஏதோ சென்னையில் இருக்கும் சோதிடர்களிடம் சென்றால் லட்சகணக்கில் கறந்து விடுகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி எல்லாம் நான் கிடையாது. உங்கள் பொருளாதார வளத்தை கொண்டுதான் செலவு இருக்கும். இதிலும் இலவசம் உண்டு பா கவலையை விடுங்கள்.

இன்றைய தேதி வரை இலவச சோதிடத்திற்க்கு தொடர்பு கொண்டு கேட்டவர்களுக்கு அனைத்து பேருக்கும் RS 1000 செலவு செய்து பார்த்தால் எப்படி பலன் சொல்லுவார்களோ அந்த அளவுக்கு சோதிட பலன் சொல்லிருக்கிறேன். அவர்கள் அனைவரும் எனது நண்பர்களாக ஆகிவிட்டார்கள்.

நான் பலன் சொல்லி முடித்தவிடும் அவர்கள் கேட்கும் கேள்வி சார் உங்களுக்கு நான் பணம் தருகிறேன் என்று தான் இருக்கிறது. எனக்கு மிக பெரிய மனதுக்கு நிம்மதி தரும் விஷயம் இலவச சோதிடம் தான்.

சில அயல்நாட்டு ஜாதகங்கள் மட்டும் அப்படியே பலன் சொல்லாமல் இருக்கிறது அவர்களுக்கு கூடிய விரைவில் பலன்களை அனுப்புகிறேன்.

உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: