Followers

Thursday, April 19, 2012

காமாண்டி



வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் காமத்தால் சீரளிந்த குடும்பத்தைப் பற்றி பார்க்கலாம்.

கார்த்திக் என்பவர் சென்னையில் ஒரு மிகப்பெரிய மத்திய அரசு நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் இருந்தவர். அவர் குடும்பம் அடிப்படையில் நல்ல வசதியான குடும்பம்.

அனைத்து சுகங்களும் கிடைத்துவிடும். பெரிய பண்ணை வீடு்கள் எல்லாம் இருக்கின்றன. அவருக்கு திருமண முடிந்து இரண்டு குழந்தைகள் இருந்தன ஒரு பெண் ஒரு ஆண் இரண்டு பேரும் நன்றாக படித்து பன்னாட்டு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தார்கள்.

மூத்தது பெண், இளையது ஆண். பெண் ஒருவரை காதலித்தால் அதை கார்த்திக் ஏற்றுக்கொண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். காதல் திருமணம் ஆனாலும் கூட நல்ல வரதட்சிணை கொடுத்து திருமணத்தை சொந்த செலவில் நடத்திவைத்தார்.

கார்த்திக் பிறந்ததில் இருந்தே வசதியாக வாழ்ந்ததால் பணத்திற்க்கு பிரச்சினை இல்லை. பணம் இருந்தால் மனது எதனை தேடும் அந்த வழியில் பயணம் ஆனார். பல பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்தார். வீட்டில் வேலை செய்ய வேலைக்காரிகள் இருந்தார்கள்.

இவர் தனியாக வேறு பல சுயதொழில்கள் செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களையும் , வீட்டு வேலைகாரிகள் கூட விட்டுவைக்கவில்லை. எல்லாம் பெண்களிடத்திலும் மொத்ததில் மன்மதனாக வாழ்ந்தார் கார்த்திக் ஆறுபது வயது ஆனாலும் கூட மன்மதன் நினைப்பு குறையவில்லை.

இவருக்கு ஒரு பையன் இருக்கிறான் என்று சொல்லி இருந்தேன் அல்லவா. அவனுக்கு திருமணம் நடைபெறவில்லை. இவரும் ஏறாத கோவில் இல்லை கேட்காத சோதிடம் இல்லை ஒன்றும் நடைபெறவில்லை.

இவருடைய பையன் ஏன் திருமணம் செய்யமாட்டிகிறாய் என்று கேட்டால் திருமணம் பிடிக்கவில்லை என்று கூறுகிறான். எவ்வளவோ கெஞ்சியும் திருமணமே வேண்டாம் என்கிறான். அதை கேட்டு அவர்கள் அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறார்கள். இன்றைய தேதி வரை அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை. திருமணத்தில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறான்.

கார்த்திக் ராசி மிதுனம் கால சக்கரத்தில் மூன்றாவதாக வரும் ராசி. இதனை பார்த்தால் இரட்டையர்கள் போல் காட்சி அளிக்கும். பொதுவாக மிதுன ராசியை கொண்டவர்கள் மிகுந்த காமத்துடன் இருப்பார்கள். இவர்கள் நல்ல திறமையான அறிவு படைத்தவர்கள் ஆனால் அதை ஆக்க வழியில் பின்பற்றுவதை விட்டு விட்டு அழிவு பாதைக்கு செல்வார்கள். அதாவது காமத்திற்க்கு அதிகம் முக்கியதுவம் கொடுப்பார்கள்

ஒரு ஊரில் 5 பேர் மிதுன ராசியாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த ஐந்து பேர் அந்த ஊரின் காமத்தால் அழித்துவிடுவார்கள். அந்தளவுக்கு மன்மதன்களாக இருப்பார்கள். மிதுன ராசி புதனின் ராசி வீடு. இவர்கள் அதிகமாக காமத்தில் தொடர்பு வைத்திருப்பது வேலைக்காரர்களாகவும் ஏழைகளாகவும் தான் இருக்கும். அவர்களின் சாபத்தை நன்றாக வாங்கிவிடுவார்கள்.

மிதுன ராசிக்கு ஆப்பு அடிப்பர்களில் முதலாவதாக குரு கிரகம் தான் இருக்கும். குரு எவ்வளவு மோசமானவர் என்று இந்த ராசிகாரர்களை கேட்டாதான் தெரியும். அதனாலே சுபமங்கல நிகழ்ச்சி தள்ளி போகும்.

திரு ஜோதிட பித்தன் என்பவர் நான்கு Email களில் என்னிடம் கேள்வி கேடடுள்ளார். அவரின் கேள்வியே இரண்டு பதிவு போடலாம் அந்த அளவுக்கு கேள்விகள் கேட்டுள்ளார். அவரின் கேள்விகள் அனைத்தும் முக்கிய கேள்விகள் தான். நாம் எழுதுவது அடிப்படை பாடம் தான் இதுவே இன்னும் பாதி இருக்கிறது. அவரின் கேள்விக்கு அனைத்துக்கும் நான் பதிவு மாதிரி தான் எழுதவேண்டும் அதுவரை பொறுத்திருங்கள்.

" காமாண்டி என்பது மன்மதனின் கோவில் பெயராகும். "


அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

seethalrajan said...

அய்யா வாணக்கம்.

உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி. ராகு பகவான் தானே காம இச்சைக்கு காரனகர்தா. என்ன‌மாறி எல்லாம் கிர‌க‌ அமைப்பு இருந்தால் வாழ்கை சீர்ழியும்
என்ப‌தை விதிக‌ளாக‌ சொன்னால் ந‌ன்றாக‌ இருக்கும். மிக்க ந‌ன்றி

மாசிலா said...

காமம் இலல்னனா நீங்களும் நானும் மத்தவங்க யாருமே இந்த உலகத்துள இருகக் மாட்டோம். ஒரு சில ஆண்களுக்கு இயற்கையிலே அதிக அளவான பாலின அணுக்கள்அதிகமா இருந்தா இப்படித்தான் சேய்வாங்க. அதனால் காமத்தை அவமானம் செயவதோ, தாழ்த்தி பேசுவதோ, அநாகரீகமான முறையில் எழுதுவதோ கூடாது. நாகரீகமான முறையில், பலாத்காரம் அடாவடி பொய் பித்தலாட்டம் ஏமாற்றுதல் போன்ற கெட்ட வழியில் செயல்படாமல் நேர்மையான வழியில் பெண்களை கவிழ்த்தால் தப்பொன்றுமில்லை.
இக்கால சமுதாய சட்ட திட்டங்கள்படி கல்யாணம் ஆவதற்கு ஆணோ பெண்ணோ எத்தன பேருட வேணுமனாலும் உறவாடலாம். இதை எந்த சட்டத்தாலும் யாராலும் தடுக்க முடியாது. நீங்கதான் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்ச போட்டு என்ன என்னத்தையோ கிறுக்கி கொட்டுறீங்க.
உங்கள் பதிவை படிக்கும் இளைஞர்களுக்கு தவரான வழி காட்டாதிங்க.