Followers

Monday, April 30, 2012

குரு பகவான் கோச்சார பலன் நிறைவுபகுதி



குரு பகவான் ஏழாமிடத்திற்க்கு வரும்போது திருமணம் நடைபெறும். குழந்தைகள் இல்லை என்றால் குழந்தைகள் உருவாகும். புதிய தொழில் வாய்ப்பு உருவாகும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். உங்களை சேர்ந்த உறவினர்களிடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும். உடல் நிலை நல்ல ஆரோகியத்துடன் இருக்கும். நண்பர்கள் உதவியால் கூட்டு தொழில் தொடங்கலாம். உங்கள் பெற்றோருக்கு உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்க்காக கடன் வாங்கலாம். கடன் கேட்ட உடனே கைக்கு வரும்.

குரு பகவான் எட்டாம் இடத்திற்க்கு வரும்போது அஷ்டமத்தில் வருகிறது “அகப்பட்டவனுக்கு அஷ்டம குரு” என்பார்கள். எதிர்பாராத செலவு வரும். கணவன் மனைவி உறவில் பிரச்சினை வரும். எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. துன்பங்களை தருவார். அதைப்போல் நன்மைகளும் தருவார்.  தனவரவு இருக்கும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். வழக்கு விஷயத்தில் கவனம் தேவை. தெரியாத நபர்களுக்கு கையெழுத்து போட வேண்டாம். அதன் மூலம் பிரச்சனை ஏற்படலாம்.

குரு பகவான் ஒன்பதாம் இடத்திற்க்கு வரும்போது எடுத்த காரியம் வெற்றி பெறும். நல்ல பலன்கள் அதிகமாக நடைபெறும். திருமணம் நடைபெறும். உயர்கல்வி வாய்ப்பு கிட்டும். புதிய பொருள் வாங்கலாம். சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதை கிடைக்கும். கவலைகள் அனைத்தும் விலகும். உடல் நல பாதிப்பில் இருந்து வந்தால் அது நிவர்த்தி ஆகும்.  பூர்வீக சொத்தில் வில்லங்கம் இருந்து வந்தால் அந்த பிரச்சினை தீரும். மற்றவர்கள் புகழ்ந்து பேசும் அளவுக்கு செயல்படுவார்கள். பொதுவாக பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் வந்தால் அனைத்து பாக்கியமும் கிடைத்துவிடும்.

குரு பகவான் பத்தாமிடத்திற்க்கு வரும்போது அதுவரை செய்து வந்த தொழிலில் இருந்து விடுபட்டு புதிய தொழிலில் போய் சேருவீர்கள். பத்தில் குரு வந்தால் பதவி பறிபோகும். குரு பத்தில் இருக்கும் காலத்தில் பாதி காலம் மட்டுமே துன்பம் தருவார். பாதி காலம் முடிந்த பிறகு நல்லது நடக்கும். தடைபட்ட தொழில் ஆரம்பம் ஆகும். நல்ல பணவரவு இருக்கும். தடைபட்ட திருமண பேச்சு ஆரம்பித்து திருமண ஏற்பாடு நடக்கும். நீங்கள் எதிர்பாக்காத ஒரு புதிய வாய்ப்பு உங்களை தேடி வரும். பூர்வீக சொத்தில் ஏதும் பிரச்சினை இருந்து வந்திருந்தால் அது நல்லவிதமாக முடிவுக்கு வரும்.

குரு பகவான் பதினோராமிடத்திற்க்கு வரும்போது வேலையில் இருந்த பிரச்சினை தீரும். வறுமை மறையும். கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும். மூத்த சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். எந்த பிரச்சினையும் தைரியமாக எதிர்த்து வெற்றி பெற வைப்பார். உங்கள் குழந்தைகளுக்கு திருமண ஏற்பாடு நடைபெறும். எதிலும் லாபத்தை எதிர்பார்க்கலாம். அரசாங்க உதவி கிடைக்கும்.

குரு பகவான் பனிரெண்டாம் வீட்டிற்க்கு வரும்போது மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும். அதிகாரிகள் தொல்லை இருக்கும். செய்கின்ற தொழிலில் நிம்மதி இருக்காது. வண்டி வீடு அமையும். வாடகை வீட்டில் இருந்து வந்தால் புதிதாக வீடு கட்டி குடி போகலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும். உடல் நலனில் பிரச்சினை ஏற்படலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களால் தொல்லை ஏற்படலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: