Followers

Friday, April 1, 2016

தைல குளியல்


ணக்கம்!
          தைலக்குளியலைப்பற்றி நிறைய நண்பர்கள் தொடர்புக்கொண்டு கேட்டனர். பழைய பதிவை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் சொன்னார்கள். அதனைப்பற்றி சொல்லுவதற்க்காக இந்த பதிவு. 

வெள்ளிக்கிழமை மதியம் நேரத்தில் இந்த தைலக்குளியலை செய்யவேண்டும். வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கி மாலை இருள் வருவதற்க்குள் இதனை செய்தால் நல்லது. சுக்கிரனின் அருளை நன்றாக பெற்று செல்வவளத்தோடு திகழ இதனை செய்யசொல்லுவது உண்டு.

சுக்கிரன் என்றாலே மூலிகை ஆராய்ச்சியை காட்டக்ககூடிய ஒரு கிரகம். மூலிகைகளின் வழியாக தயாரிக்கப்படும் எண்ணெய்வகைகளை நாம் உபயோகப்படுத்தும்பொழுது சுக்கிரனின் அருளை பெறலாம். ஏதோ ஒரு மூலிகையை உபயோகப்படுத்தி தயாரிக்கும் எந்த தைலத்தையும் பயன்படுத்தலாம்.

முதன் முதலில் உடலில் கொஞ்சமாக தேய்த்துவிட்டு குளியுங்கள். அடுத்தவாரம் கொஞ்சம் அதிகமாக தைலத்தை பயன்படுத்துங்கள். ஏன் இப்படி செய்யசொல்லுகிறேன் என்றால் ஒரு சிலருக்கு தைலம் உடலுக்கு ஏற்றுக்கொள்ளாது அதனால் படிப்படியாக அதிகரித்து வாருங்கள்.

என்னால் தைலம் எல்லாம் வாங்கமுடியாது என்று சொல்லுகின்றவர்கள். தேங்காய் எண்ணெய்யில் மூலிகை வேர்களை போட்டு தலைக்கு மற்றும் உடலுக்கு தேய்த்து குளித்து வரலாம்.தொடர்ச்சியாக இதனை செய்து வந்தால் கண்டிப்பாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: