Followers

Thursday, March 26, 2020

சனி கர்மா & பரிகாரம்


வணக்கம்!
                சனிக்கிரகம் ஒருவருடைய ஜாதகத்தில் எந்த வீட்டில் அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை அந்த சனிக்கிரகம் தன்னுடைய கர்மாவை எப்படி கொடுக்கின்றது என்பதை அவரின் அனுபவத்தை வைத்தே நாம் தெரிந்துக்கொள்ளலாம். சனிக்கிரகம் கர்மா கொடுக்கின்றது என்றால் அவர் கூட்டு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்களாக இருக்கவேண்டும் அல்லது அவரின் குடும்பத்தில் எட்டு பேருக்கு மேல் இருக்கவேண்டும் அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறக்க வைப்பார். 

சனிக்கிரகம் இளமையிலேயே நரமுடியை உருவாக்கிவிடுவார். தற்சமயம் அனைவருக்கும் தலைமுடி நரை ஏற்பட்டாலும் இவரின் உடலை பார்க்கும்பொழுது வயதானவர் போல் தோற்றத்தை கொடுத்துவிடும். இவரின் குடும்பத்தில் அதிகமான விதவைகள் இருப்பதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. பெண்களுக்கு முன்பு அந்த வீட்டில் ஆண்கள் இறந்துவிடுவார்கள்.

சனிக்கிரகம் கர்மா கிரகம் என்பதால் இவர்க்கு வேலை என்பது அந்தளவுக்கு எளிதில் கிடைத்துவிடாது. வேலை கிடைத்தாலும் சம்பளம் குறைவாக கிடைக்கும் ஒரு சில மாதத்தில் சம்பளம் கிடைக்காது. இவர் சென்ற நேரம் அந்த கம்பெனி திவாலாகிவிடும். கம்பெனி அதிக கடனால் திவலாகிவிடுவதும் உண்டு.

சனிகிரகம் தாழ்த்தப்பட்ட சாதியை குறிக்கும் கிரகம் என்பதால் இவர்க்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிரச்சினை இருந்துக்கொண்டே இருக்கும் அல்லது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இவர் வாழ்வது போலவே இவர்களின் வீடு இருக்கும். குப்பை கிடங்கில் வீடு அமைந்தது போன்று இருக்கும். இவர்கள் தாழ்த்தப்பட்டவர்களோடு வாழும் வாழ்க்கை ஏற்படும்.

சனிக்கிரகத்தின் கர்மா மற்றும் அதற்குள்ள பரிகாரம் என்ன என்பதைப்பற்றி ஒரு வீடியோ எடுத்து இருக்கிறேன். அதனைப்பற்றி பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: