Followers

Wednesday, March 25, 2020

கொரோனா (Corona Virus)


வணக்கம்!
         கொரோனா உலகயே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா தாக்குதலால் பலர் உயிர் இறந்து இருக்கின்றனர். கொரோனா தாக்குதலில் இருந்து மீண்டு வருவதற்க்கு அரசாங்கம் சொல்லிருக்கும் வழிமுறைகளை பின்பற்றி வாருங்கள் அதோடு ஆன்மீக வழியிலும் நீங்கள் வீட்டிலிருந்து வழிபாடு செய்து வாருங்கள். ஆன்மீக வழியில் பல மந்திரங்களை தற்பொழுது அனைத்து ஆன்மீகவாதியும் சொல்லிவருகின்றனர் அதனை அனைத்தையும் உங்களால் சொல்லமுடியாது. உங்களுக்கு தெரிந்த ஏதோ ஒரு வழிபாட்டை மட்டும் சொல்லி வரும்பொழுது உங்களுக்கு நல்லது நடக்கும்.

புதிய மந்திரங்களை சொல்லி வந்தால் அது உரு ஏற்றி வேலை செய்வதற்க்கு பல நாட்கள் சென்றுவிடும். ஒரு மந்திரம் ஒரு தடவையில் வேலை செய்யாது. வேலை செய்வதற்க்கு நீண்ட நாள்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் புதிய மந்திரத்தை நீங்கள் எடுக்கவேண்டாம். உங்களுக்கு தெரிந்த மந்திரத்தை உரு ஏற்றினால் நல்லது. 

ஆன்மீக வழியில் நீண்ட நாள்களாக இருந்தால் நீங்கள் ஏதாே ஒரு மந்திரத்தை மட்டும் சொல்லி வந்து இருப்பீர்கள். அதனையே நீங்கள் இந்த நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். காயத்திரி மந்திரத்தை உரு ஏற்றி வந்திருந்தாலும் அதனையே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு எந்த ஒரு மந்திரமும் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களின் பூஜையறையில் சிறிது நேரம் உங்களின் மனதை விட்டு வேண்டிக்கொண்டாலே போதும். உங்களுக்கு நல்லது நடக்க ஆரம்பித்துவிடும். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்களின் மனம் நல்ல ஆற்றலோடு இருக்கும்பொழுது மட்டுமே உங்களால் எளிதில் அனைத்தையும் எதிர்க்கொள்ளமுடியும். தற்சமயம் கோவில்களும் மூடி இருப்பதால் நீங்களே உங்களின் வீட்டின் பூஜையறையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம்.


இதனைப்பற்றி வீடியோ பதிவை ஒன்றை வெளியிட்டு இருக்கிறேன். அதனை பார்த்த தெரிந்துக்கொள்ளுங்கள்.


அம்மன் பூஜை வருகின்ற 5 ஆம் தேதிக்குள் நடத்தப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்களுக்களின் முன் ஏற்பாட்டிற்க்காக தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: