Followers

Tuesday, March 31, 2020

அம்மன் பூஜை & பங்குனி உத்திரம்


வணக்கம்!
          அம்மன் பூஜை கொரோனாவால் தள்ளிவைக்கவில்லை திட்டமிட்டபடியே நடத்தப்படும். என்னால் முடிந்தவரை என்ன கிடைக்கின்றதோ அதனை வைத்து பூஜையை நடத்திவிடுகிறேன். கொராேனா தடுப்பு என்ற முதல் கோரிக்கையை அம்மனிடம் வைத்துவிடுகிறேன். 

அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்திவைக்கலாம். கொரோனாவால் சம்பள பிரச்சினை மற்றும் பணப்பிரச்சினையில் இருக்கும் நண்பர்கள் அனுப்பவேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அம்மன் பூஜை முடிந்த பிறகு பங்குனி உத்திரம் வருகின்றது. வருடந்தோறும் பங்குனி உத்திரம் அன்று பழனிக்கு சென்றுவிடுவது உண்டு. இந்த வருடம் கொரோனாவால் செல்லமுடியாது. நீங்களும் எந்த ஒரு முருகன் கோவிலுக்கும் செல்லமுடியாத ஒரு சூழ்நிலையில் இருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. 

வரும் பங்குனி உத்திரம் அன்று முருகனுக்காக சிறப்பு பூஜை செய்ய முடிவு எடுத்துள்ளேன். உங்களுக்கு விருப்பம் இருந்தால் பங்குனி உத்திரம் 6-4-2020  திங்கள் கிழமைக்குள் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை எனக்கு அனுப்பி வைக்கலாம். பங்குனி உத்திர பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வைக்கலாம் பணம் செலுத்தமுடியாதவர்களும் தங்களின் பெயர் மற்றும் நட்சத்திரத்தை எனக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுகு்கொள்கிறேன்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: