Followers

Wednesday, March 18, 2020

எட்டில் லக்கினாதிபதி தெய்வ உபாசாணை


வணக்கம்!
               எட்டாவது வீட்டில் லக்கினாதிபதி அமர்ந்தால் அந்த நபர் நிறைய கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. உடல் நிலையில் அடிக்கடி தெம்பு குறைவதற்க்கும் வாய்ப்பு இருக்கின்றது. உடலில் சக்தி இல்லாமல் கஷ்டபட வாய்ப்பு இருக்கின்றது. எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அவர் நிறைய கஷ்டப்பட்டு அதில் இருந்து முன்னேற்றம் காண்பதற்க்கு வழி இருக்கின்றது. 

லக்கினாதிபதி எட்டாவது வீட்டில் இருக்கும்பொழுது அவர்க்கு ஆயுளும் குறைவாக இருக்கும். இளைமையில் திருமணமும் நடைபெறுதற்க்கு வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும். இப்படிப்ட்டவர்கள் மயான கொள்ளைக்கு செல்லும் அம்மனை பார்த்து வணங்கினால் அவர்களுக்கு லக்கினாதிபதி வலுப்பெற்று நல்ல வாழ்க்கையை வாழமுடியும். 

உதாரணத்திற்க்கு மயானத்திற்க்கு செல்லும் அங்காளபரமேஸ்வரி மற்றம் சுடலை மாடன் போன்ற தெய்வங்களை உபாசாணை செய்வதன் வழியாக அவர்கள் நல்ல வாழ்க்கையை வாழமுடியும். நான் தெய்வத்தினை உபாசாணை செய்வது எல்லாம் முடியாத ஒன்று எனக்கு வேறு வழி இருந்தால் அதனைப்பற்றி சொல்லுங்கள் என்றால் அதற்கும் வழி இருக்கின்றது. 

உங்களின் ஊரில் அல்லது வெளியூரில் இறந்தவர்களுக்கு அதுவும் ஏழை மக்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு ஈமசடங்கு செய்வதற்க்கு உள்ள பணத்தை உதவியாக கொடுக்கலாம். நீங்கள் இறப்பிற்க்கு உதவி செய்வதன் வழியாக உங்களின் லக்கினாதிபதி பலப்பட்டு உங்களுக்கு நல்ல நிலையில் செயல்பட ஆரம்பிக்கும். பணஉதவி செய்யமுடியவில்லை என்றாலும் உங்களின் உடல் உழைப்பை இறப்பிற்க்கு போடும்பொழுது உங்களின் லக்கினாதிபதி பலம்பெறும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ பதிவை போட்டு இருக்கிறேன். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

https://youtu.be/oQCmuHJSi04


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: