Followers

Monday, March 30, 2020

காவல் தெய்வம்


வணக்கம்!
     ஒவ்வொரு ஊரிலும் காவல் தெய்வங்கள் என்பது இருக்கும். காவல் தெய்வங்கள் பெரும்பாலும் அய்யனார் வீரனார் முன்னாேடியான் கருப்பசாமி மற்றும் மாரியம்மன் என்று இருக்கும். இந்த தெய்வங்கள் அந்த ஊரை எல்லாவற்றிலும் இருந்து காப்பாற்றி அந்த மக்களை வாழவைக்கும். ஒரு ஊரில் எந்த ஒரு தீயசக்திகளும் நுழையாமல் அந்த ஊரை காப்பாற்றும். 

ஒரு ஊரில் கொள்ளை நோய் வந்தாலும் அந்த நோயில் இருந்து அந்த மக்களை காப்பாற்றும். காவல் தெய்வங்கள் ஒரு ஊரில் இருந்து அந்த மக்களை காப்பாற்றுவதால் அந்த ஊர் மக்கள் ஒரு வருடத்திற்க்கு ஒரு முறை அந்த காவல்தெய்வங்களுக்கு திருவிழா எடுத்து கொண்டாடுவார்கள்.

இன்றைய காலத்தில் பிழைப்பை தேடி நகர்புறங்களுக்கு செல்லும் மக்கள் ஒரு ஊரில் சென்று வசிக்கலாம் அந்த ஊரின் காலதெய்வம் என்ன என்பதை கேட்டறிந்து அந்த காவல் தெய்வத்தை வணங்கி வந்தால் அந்த ஊரில் எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வாழலாம். சம்பந்தப்பட்ட ஊரில் நல்ல பாதுகாப்போடும் நல்ல வசதியோடும் வாழலாம்.

நாங்கள் வெளியூர் என்று ஏதாவது ஒரு வேலை நடக்கவேண்டும் என்றாலும் அந்த ஊரின் காவல்தெய்வத்தை வணங்கிவிட்டு அதன்பிறகு வேலை தொடங்குவோம் அப்பொழுது அந்த ஊரில் அனைத்து வேலையும் எளிதாக எங்களுக்கு முடிந்துவிடும்.

இதனைப்பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன். அதனை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: