Followers

Saturday, February 28, 2015

சனி தசா பகுதி 6


வணக்கம்!
          என்னிடம் ஒருவர் வந்து ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவரின் தந்தைக்கு ஜாதகம் பார்க்கவேண்டும் என்று சொன்னார். அவரின் ஜாதகத்தையும் என்னிடம் கொடுத்தார்.

தந்தைக்கு சனிதசா நடந்துக்கொண்டிருந்தது. பையனுக்கு ராகு தசா நடந்துக்கொண்டிருந்தது. அவரின் தந்தைக்கு சனி லக்கினத்தில் அமர்ந்து தசாவை நடத்திக்கொண்டிருந்தது. சிம்ம லக்கினத்தில் சனி அமர்ந்து இருக்கிறது. சனி தசா ஆரம்பித்த காலத்தில் இருந்து அவர் நோய்யில் படுத்துவிட்டார். பக்கவாதம் ஏற்பட்டு படுத்த படுகையாவிட்டார். 

சிம்மத்தில் சனி அமர்ந்தாலே மிகப்பெரிய அளவில் நன்மையை எதிர்பார்க்க முடியாது.சனி லக்கினத்தோடு சம்பந்தப்பட்ட காரணத்தால் அவருக்கு பக்கவாதத்தை ஏற்படுத்திவிட்டது. நான் அவரின் ஜாதகத்தை பார்த்துவிட்டு கொஞ்ச நாளில் இறந்துவிடுவார் என்று சொன்னேன்.

லக்கினத்தில் சனி அமர்ந்து அந்த தசா நடந்த காரணத்தால் அவருக்கு நோயையும் கொடுத்து அவருக்கு மரணத்தை கொடுத்துவிட்டது.லக்கினத்தில் அமர்ந்து ஒரு தசா நடந்தால் அந்த தசா பெரும்பாலும் மரணத்தை தரும். சனி தசா அவருக்கு நரம்பு சம்பந்தப்பட்ட நோயையும் கொடுத்து படுத்த படுகையாக மாற்றி கடைசியில் கொன்றும்விட்டது.

லக்கினத்தில் சனி அமர்ந்து தசா நடத்தினால் சம்பந்தப்பட்ட நபர் தினந்தோறும் வழிப்பாட்டை செய்துவரவேண்டும். அதே நேரத்தில் திருகடையூர் சென்று இறைவனை வருடத்திற்க்கு ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வரவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: