Followers

Monday, February 2, 2015

தவிர்க்கலாம்


வணக்கம் நண்பர்களே!
                      ஜாதககதம்பம் பல நல்ல உள்ளங்களை எனக்கு பெற்றுக்கொடுத்தாலும் அவ்வப்பொழுது யாராவது வந்து தொல்லை கொடுத்துக்கொண்டும் இருப்பார்கள். அதனை நான் அதிகம் கண்டுக்கொள்ளாமல் இருந்தாலும்  அவ்வப்பொழுது வந்து தொந்தரவைக் கொடுக்கிறார்கள்.

இலவசசோதிட சேவையை நிறுத்திவிட்டேன். பிற்காலத்தில் நேரம் கிடைக்கும்பொழுது அந்த சேவையை தொடங்கவேண்டும் என்று அந்த லிங்கை வைத்திருக்கிறேன். அதில் வந்து பல பேர் தொந்தரவுக்கொடுக்கிறார்கள். அதனை கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள்.

கட்டண சோதிடத்தில் உள்ள மெயிலுக்கு மெயிலை அனுப்பி நான் உங்களின் வங்கி கணக்கிற்க்கு பணத்தை அனுப்பிவிட்டேன் என்று போலியாக ஒரு டிரஸ்பெர் எண்ணை கொடுத்துவிட்டு எனக்கு பலனை அனுப்புங்கள் என்று மெயில் செய்கின்றார்கள். இதனையும் தவிருங்கள்.

என்னிடம் ஐந்து ஜாதகம் இருக்கின்றது. உங்களின் வங்கிக்கணக்கிற்க்கு பணத்தை அனுப்புகிறேன். அவசரமாக எனக்கு ஒரு ஜாதகத்தை மட்டும் இப்பொழுது பார்த்து சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். பொதுவாக எனக்கு பணத்தை கட்டிய பிறகு அவர்களுக்கு நான் பலன் சொல்ல ஒரு வாரம் எடுக்கும். ஐந்து ஜாதகம் வைத்திருப்பதால் உங்களுக்கு உடனே பலனை சொல்லிவிடமாட்டேன்.

பொதுவாக நான் யாருக்கும் உடனே நல்லது செய்துவிடுவது கிடையாது. நன்றாக பார்த்து இவர் கடைசிவரை நம்மிடம் இருப்பார் என்றால் செய்வது உண்டு. நல்ல டைம் எடுத்து தான் செய்வது உண்டு. ஜாதககதம்பத்தில் இருந்து வந்த நல்ல குடும்பங்கள் எல்லாம் இப்படி தான் பயன் அடைந்திருக்கிறார்கள்.

நல்லது செய்யவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். அதற்கு காலம் கொஞ்சம் ஒத்துழைக்கவேண்டும். காலம் தீர்மானிக்கவேண்டும் என்று நான் கொஞ்சம் நேரம் எடுப்பது உண்டு.

ஒன்று இருக்கின்றது என்றால் அதனை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். அதனைவிட்டுவிட்டு தேவையற்றை விசயங்களில் கவனம் செலுத்தி உங்களின் சக்தியை வீணடிக்கவேண்டாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: