Followers

Tuesday, February 24, 2015

சர்ப்பதோஷமும் பாம்பும்


வணக்கம் !
          காலசர்ப்ப தோஷத்தைப்பற்றி பல பதிவுகளில் நாம் பார்த்து இருக்கிறோம். புதுதகவலாக ஒன்றைப்பற்றி பார்க்கலாம். காலசர்ப்பதோஷம் உள்ளவர்களுக்கு உடலில் இருக்கும் சக்கரங்கள் வேலை செய்யாது என்று சொல்லுவார்கள். காலசர்ப்ப தோஷம் உள்ளவர்களை பார்த்தால் அப்படி தான் இருப்பார்கள். எந்த விதத்திலும் முன்னேற்றம் என்பது இருக்காது. சக்கரங்கள் வேலை செய்தால் மட்டுமே வாழ்வில் முன்னேற்றம் என்பது இருக்கும்.

சர்ப்ப தோஷம் என்பதால் பாம்பைப்பற்றி தான் அதிகம் சொல்லுவோம். பாம்பிற்க்கு அபிஷேகம் எல்லாம் அதனைப்பற்றி தொடர்புடையதாக இருப்பதால் பாம்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

நீங்கள் செல்லும்பொழுது அந்த வழியில் பாம்பு வந்தால் நீங்கள் செல்லும் காரியம் தடைப்படும் என்று சொல்லுவார்கள். அதாவது ராகு கேது குறுக்கீடு வருவதால் காரியத்தடை என்பார்கள். எல்லா பாம்புகளும் காரியத்தடை என்று சொல்லமுடியாது. பாம்பில் சாரப்பாம்பு என்ற ஒன்று இருக்கிறது அது வந்தால் மட்டும் தான் காரியதடை ஏற்படும்.

காலசர்ப்பம் உள்ளவர்கள் அல்லது சர்பதோஷம் இருப்பவர்கள் பாம்பை கண்டால் அதனை அடிக்காதீர்கள். உங்களுக்கும் பாம்பிற்க்கும் தொடர்பு இருப்பதால் பாம்பை நீங்கள் அடிக்காதீர்கள்.

அடுத்த பதிவு மாலை 4 மணிக்கு மேல்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: