Followers

Friday, February 20, 2015

வழிகாட்டி


வணக்கம் !
          ஒரு வேலை செய்யவேண்டும் என்றால் அதற்கு ஒரு குரு தேவை. வழிகாட்டுவதற்க்கு ஒரு வழிகாட்டி வேண்டும். கலியுகத்தில் அதனை தான் யாரும் ஏற்படுத்திக்கொள்வதில்லை.

ரவுடியாக இருந்தாலும் அதனை வழிநடத்த வழிகாட்டி என்பவர் ஒருவர் வேண்டும் என்பதை உணர்த்துவதற்க்கு தான் சுக்கிரன் என்ற கிரகம் இருக்கிறது. அசுரகுலத்திற்க்கு வழிகாட்டியாக சுக்கிராசாரியார் என்பர் இருந்தார். ரவுடி எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம் என்று தான்தோன்றிதனமாக செயல்படவில்லை. ஒருவரின் வழிகாட்டிதல் பேரில் தான் செயல்பட்டார்கள்.

தற்காலத்தில் யாருக்கும் வழிகாட்டி என்பவர் இருப்பதுபோல் தெரியவில்லை. தான்தோன்றிதனமாக செயல்படுகிறார்கள்.எந்த ஒரு செயல் செய்தாலும் அதற்கு வழிகாட்டி என்பவர் ஒருவர் மட்டும் உங்களுக்கு இருந்தால் நீங்கள் கண்டிப்பாக அந்த காரியத்தில் வெற்றி பெற்றுவிடலாம்.

உங்களுக்கு ஒரு ஆலாேசகரை நீங்கள் நியமித்துக்கொள்ளுங்கள். உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுபவர்களாக அதே நேரத்தில் எந்த விதத்திலும் சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்க்கும் ஒரு வழிகாட்டியை நியமித்துக்கொண்டால் உங்களின் வாழ்வு அனைத்திலும் வெற்றிப்பெற்ற வாழ்வாக அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: