Followers

Monday, March 21, 2016

அடிக்கும் கர்மவீடு


ணக்கம்!
          பத்தாவது வீட்டில் இருக்கும் கிரகம் நல்லது செய்வோம் என்று நினைத்துக்கொண்டு இருப்போம். ஒரு சிலருக்கு இந்த பத்தாவது வீட்டு கிரகம் தன்னுடைய தசாவில் அடி அடி என்று அடித்து சம்பந்தப்பட்ட ஜாதகர்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவதும் உண்டு.

நானே முதலில் இதனை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். என்னடா பத்தாவது வீட்டு கிரகம் என்றால் நல்லதை செய்யவேண்டுமே தீமையை செய்கிறது என்று பார்த்து இருக்கிறேன். நாள்கள் ஆக ஆக பல பேர் இதில் மாட்டியிருப்பது தெரியவந்தது.

பத்தாவது வீட்டு தசாவில் அவர்கள் தொழிலில் மட்டும் கடனில் கூட சிக்கி தவித்து இருக்கிறார்கள். பல பேர்களுக்கு இராசி அதிபதியாகவும் பத்தாவது வீடு இருந்து இருக்கிறது அவர்களுக்கும் அடி விழுந்து இருக்கின்றது.

என்னடா என்று கவனித்து பார்த்தில் கர்மவீடு என்பது அவர்களின் முந்தைய கர்மத்தின் வேலையை செய்ய தொடங்கிவிடுகிறதோ என்று நினைக்க வைக்கிறது. 

சோதிடத்தில் சொல்லப்பட்ட விதிகளை விட ஒரு சிலருக்கு என்பதை தாண்டி பல பேருக்கு கெடுதலை கொடுத்து இருக்கிறது. கொடுத்துக்கொண்டும் இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: