Followers

Monday, March 21, 2016

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          நேற்று ஒரு வாங்கிகட்டிய வரத்தைப்பற்றி பார்த்தோம். இன்று ஆன்மீகவாதிகள் வாங்கிகட்டிய வரத்தைப்பற்றி பார்க்கலாம். இறைவன் படைப்பில் யார் தவறு செய்தாலும் அவர்களுக்கு தக்கபாடம் இருக்கின்றது. காலம் மட்டுமே வித்தியாசப்படுகிறது.

பல ஆன்மீகவாதிகளை பார்த்தால் நல்ல வளர்ந்து வருவார்கள் கொஞ்சநாளில் வீணாக போய்விடுவார்கள். ஆன்மீகவாதியை பார்ப்பதற்க்கே லட்ச ரூபாய் என்று கட்டணம் வசூல் செய்துக்கொண்டு இருப்பார்கள். அவருக்கே ஒரு பிரச்சினை வந்துவிடும். பிரச்சினை வருகின்றது என்றால் சும்மாவா வரும் ஏதோ வில்லகம் இருப்பதால் தான் வருகின்றது. 

லட்சரூபாய் பார்ப்பதற்க்கு கேட்டவர் கொஞ்சநாளில் வீதிக்கு வந்து கத்தினாலும் அவரை தேடி ஒரு பய செல்லமாட்டான். அவரிடம் கேட்டால் ஏதோ கர்மா இருந்திருக்கிறது அதனால் தவறு நடந்துவிட்டது என்பார். இவன் செய்த அட்டுழியத்திற்க்கு கர்மா மேல் பலியை போடுவான்.

ஆன்மீகவாதியாக இருந்தால் என்ன பிச்சைக்காரனாக இருந்தால் என்ன செய்த தவறுக்கு ஒரு நாள் மாட்டுவது இயற்கையான ஒன்று தான். உலகத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு தண்டனையை கடவுள் கொடுக்கிறார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: