Followers

Wednesday, March 30, 2016

செவ்வாய் பலன்


வணக்கம்!
          ஒரு மனிதனுக்கு செவ்வாய் கிரகத்தின் அருள் இல்லை என்றால் அதிலும் ஆண்களாக இருந்தால் அவன் ஆண்பிள்ளை என்றே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இருப்பான்.

செவ்வாய் கிரகத்தின் வலிமை இருந்தால் தான் ஆண்கள் அழகாவும் ஆண்மைதன்மையோடு இருப்பார்கள். செவ்வாயின் அருள் இல்லை என்றால் அவனின் செயல் கொஞ்சம் பெண்மை தன்மையாக இருக்கும்.

செவ்வாய்கிரகம் என்றாலே போர்கிரகம் தானே. இன்றைய காலத்தில் எங்கு போர்க்கு செல்லுகின்றார்கள் தெருவில் சண்டை போடுவதை வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.  ஆண்கள் எல்லாம் கொஞ்சம் அப்படி இப்படி என்று சண்டை போடுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் அனைவருக்கும் செவ்வாய் கிரகத்தின் அருள் இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளலாம்.

இன்றைக்கு பல ஆண்களுக்கு எல்லாம் செவ்வாய் கிரகத்தின் அருள் என்பது துளியும் இல்லாமல் இருக்கின்றனர். எழுந்து உட்காருவது கூட கடினம் என்று சொல்லுபவர்களாக இருக்கின்றனர். பல இளைஞர்கள் கூட பல வீட்டில் சாமியார் மாதிரி தான் இருக்கின்றனர். செவ்வாய் வழிபாட்டை விட்டுவிட்டு வேறு வழிபாட்டிற்க்கு சென்றதால் இப்படி நடந்து இருக்கின்றது.

ஒரு சில பெண்களுக்கு செவ்வாயின் வலிமை அதிகமாக இருக்கின்றது. ஆண்களை போல் சண்டை போடுபவர்களாக இருக்கின்றனர். எது எப்படியே செவ்வாய் கிரகத்தின் வலிமை இருந்தால் ஒரு நல்ல ஆண்தன்மை உள்ளவன் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: