Followers

Friday, March 25, 2016

வாங்கி கட்டிய வரம்


வணக்கம்!
          ஒரு சிலர் செய்யும் வேலையை பார்த்தால் இப்படி எல்லாம் செய்வார்களாக என்றும் தோன்றும். அதனை இவர் எல்லாம் ஏன் செய்தால் என்றால் கிரகத்தின் கோளாறாக இருக்கும். தமிழ்நாட்டில் பல கோவில்கள் பூட்டை உடைத்து பணத்தை எடுத்துச்சென்றார்கள் அல்லது சிலையை உடைத்து சென்றார்கள் என்று செய்தி வரும்.

இதனை படிக்கும் நமக்கு என்னடா இதனை எல்லாம் செய்வார்களா என்று தோன்றுகிறது அல்லவா. இதற்கு எல்லாம் காரணம் கிரகங்கள் தான். கிரகங்கள் ஒருவனை தூண்டுகிறது இப்படி செய் என்று அதற்கு அவர்களும் செய்துவிடுகிறார்கள்.

திருடுவதை நான் நியாயப்படுத்தவில்லை அவர்களை தூண்டுவதே கிரகம் தான் என்பது புரியாமல் செய்கின்றனர் என்பது தெரிகிறது. ஒரு கோவிலில் திருடினால் அது எப்பேர்பட்ட தோஷத்தை ஏற்படுத்தும் என்பது தெரியாமல் செய்கின்றனர் என்று சொல்லுகிறேன்.

தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் நான் கேள்விபட்டு இருக்கிறேன். கோவிலில் உள்ள மணியை ஒருவர் திருடி இருக்கிறார். அவரின் குடும்பம் இன்றுவரை உருபடவில்லை. ஒரு மணிக்கே இப்படி என்றால் மற்றவைக்கு பார்த்துக்கொள்ளுங்கள்.

ஜாதகத்தில் ஒரு சில கிரகங்கள் இப்படி தூண்டசொல்லும் அதனை புரிந்துக்கொண்டு நாம் செயல்படவேண்டும் அப்படி இல்லை என்றால் வாங்கி கட்டிக்கொள்ளவேண்டியது தான்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: