Followers

Saturday, March 19, 2016

கேள்வி & பதில்


வணக்கம்!
         காலையில் வந்த பதிவை படித்துவிட்டு என்னங்க நீங்கள் அனைத்தையும் மறைத்து எழுதுகின்றீர்கள் என்று இரண்டு நண்பர்கள் கேட்டனர்.

அனைத்தையும் வெளிப்படையாக எழுதினால் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்து ஒரு பிளாக்கே எழுதிக்கொண்டு இருக்கின்றனர். இதில் அனைத்தையும் நான் வெளிப்படையாக சொன்னால் என்ன நடக்கும். தற்பொழுது எல்லாம் காரணம் என்ன என்பதை சொல்லிவிடுகிறேன். அதில் உள்ளே என்ன நடக்கிறது என்பதை மட்டும் கொஞ்சம் மறைக்கிறேன். 

என்ன பிரச்சினை என்பதை சொன்னவுடன் இது இதனால் தான் என்று மக்கள் புரிந்துக்கொண்டு என்னை தொடர்புக்கொண்டு அதற்கு ஆலாேசனையை கேட்டுவிடுவார்கள். ஜாதகத்தில் உள்ளே சென்றால் அந்த கிரகத்தைப்பற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்வது சோதிடர்கள் மட்டும் தான். வாடிக்கையாளர்கள் ஆராய்ச்சி செய்வது கிடையாது. பிரச்சினை இது தான் தெரிந்துக்கொண்டு வந்தால் போதுமானது.

இன்றைய காலத்தில் முக்கால்வாசி பேருக்கு ஜாதகம் தெரியும் ஆனால் சோதிடர்களிடமும் நல்ல கூட்டம் இருக்கின்றது. என்ன காரணம் என்றால் தொழிலாக செய்பவன் அதனை செய்யும்பொழுது மட்டுமே சரியான ஒரு தீர்வு கிடைக்கும்.

ஒரளவு சோதிடத்தைபற்றி சொல்லிவிடுவேன். முழுமையான பலன் மற்றும் தீர்வு நம்மை தேடி வருபவர்களுக்கு கிடைக்கும். அப்படி தான் பதிவுகள் அனைத்தும் வருகின்றன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: