Followers

Sunday, March 20, 2016

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          ஒரு சில ஊர்களில் நான் பார்த்து இருக்கிறேன். ஒரு சிலர் தான் முன்காலத்தில் எல்லாம் ஆன்மீகத்தை பின்பற்றுபவர்களாக இருந்தார்கள். அதாவது ஒரு இருபது வருடத்திற்க்கு முன்பு இன்று அப்படி இல்லை. அனைத்தும் தொலைக்காட்சியின் உதவி மற்றும் நெட் உதவியால் நூற்றுக்கு 99 பேர் ஆன்மீகவாதிகளாக இருக்கின்றனர்.

இருபது வருடத்திற்க்கு முன்பு உள்ள காலத்தில் வசதியாக இருந்த குடும்பம் ஒரளவு ஆதிக்கத்தை அந்தந்த ஊர்களில் காட்டியுள்ளார்கள். பணம் வந்தால் குணம் எல்லாம் போய்விடுமே அந்த ஊரில் இருக்கும் யாராவது ஒரு ஆன்மீகவாதியிடம் பிரச்சினை செய்து இருப்பார்கள். ஏதாவது ஒரு குடைச்சலை அவர்களிடம் கொடுத்து இருப்பார்கள்.

நான் சொல்லுகின்ற காலத்தில் ஆன்மீகவாதியிடம் ஒரு பைசா கூட இருந்திருக்காது. இன்றைய காலகட்டத்தில் ஆன்மீகவாதியிடம் பிரச்சினை செய்தால் கொலை செய்துவிடுவார்கள். அவ்வளவு பணபலத்தோடு இருக்கின்றனர்.

அவர்கள் நிறைய சிவன் கோவில் மற்றும் இதர கோவில்களுக்கு சென்று இவர் பிரச்சினை செய்கிறார் இவர்களிடம் இருந்து என்னை காப்பாற்று என்று வேண்டி இருப்பார்கள். கடவுள் இல்லாதவனிடம் அதிகம் கருணையை காட்டுவான்.

நிறைய பணக்காரர்களாக இருந்த குடும்பங்கள் எல்லாம் இன்றைய காலகட்டத்தில் அட்ரஸ் இல்லாமல் சென்றதற்க்கு இப்படிப்பட்ட வாங்கிக்கட்டிய வரம் தான். இன்றைய காலத்தில் அனைவரும் ஆன்மீகவாதிகளாக மாறிவிட்டீர்கள் அதனால் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: