Followers

Tuesday, March 22, 2016

வாங்கி கட்டிய வரம்


ணக்கம்!
          இந்தியாவில் உள்ள முக்கால்வாசி பேருக்கு அண்ணன் தம்பியாக இருந்தால் அவர்களின் குடும்பத்தில் கண்டிப்பாக சொத்து தகராறு இருக்கும். அண்ணன் தம்பி இல்லை என்றாலும் ஒரு தம்பி ஒரு அக்கா இருந்தாலும் அவர்களுக்குள் சொத்து தகராறு இல்லாமல் இருப்பதற்க்கு வாய்ப்பு இல்லை.

ஏன் இப்படி இருக்கின்றது. சொத்து இருந்தால் உழைக்காமல் முன்னேறிவிடலாம் அல்லது நாம் எப்பொழுது உழைத்து இந்த மாதிரியான சொத்தை வாங்குவது என்ற எண்ணம். அப்பன் சொத்தை அதிகம் பங்குப்பொட்டுக்கொள்ளலாம் என்ற கணக்காவும் இருக்கலாம். ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுகிறார்கள்.

நம்ம ஆட்கள் இப்படி எல்லாம் அடித்துக்கொள்வார்கள் என்று தெரிந்து இருந்து தான் தான் சம்பாதிக்கும் சொத்து தன்னுடைய பேரனுக்கு செல்லவேண்டும் என்று சொன்னார்கள். பையன் உழைத்து அவன் பேரனுக்கு சொத்துவாங்குவான் என்பதாலும் அடித்துக்கொள்ளமாட்டார்கள் என்றும் வைத்தார்கள்.

நம்ம ஆட்கள் எல்லாம் எவன் சாகுவான் நாம ஆட்டையை போடலாம் என்று இருக்கிறீர்களே. சொத்துக்கு சண்டைப்போட்டுக்கொள்வார்கள். இதில் யார் அதிகம் வம்பு இழுத்து அநியாயம் செய்து சொத்தை பிடுங்குகிறார்களோ அவர்களின் வாரிசுகளுக்கு பல தோஷத்தை பரிசாக தருகிறார்கள்.

பல குடும்பங்களின் வாரிசுகள் உருப்படாம போனதற்க்கு இது ஒரு காரணமாக இருக்கின்றது. உங்களின் குடும்பத்திலும் இப்படி நடந்தால் உடனே அந்த சொத்தை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கொடுத்துவிட்டு நீங்கள் நன்றாக வாழுங்கள். நானும் அப்படிதான் இருப்பேன் என்றால் தாராளமாக வாங்கி கட்டிக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: